Sunday, February 12, 2012

மாஸ் மீடியா - முடிவுரை

நண்பர்களே தொடர்ந்து நான்கு மாதங்களாக தொடர்கதையாக எழுதி வந்த இந்த 'மாஸ் மீடியா'வை எவ்வளவு பேர் விரும்பி படித்தார்களோ -எனக்கு தெரியாது.பத்து பாகங்கள் கொண்ட ஒரு கதையை எழுதும் அளவுக்கு நானொரு தகுதியான எழுத்தாளனா என்றால் அதற்கும் எனக்கு விடை தெரியாது.ஆனால் இந்த கதையை ஆரம்பித்த பிறகு அதை என் திருப்திக்கு முடிக்க வேண்டுமென்றே எண்ணினேன். அதனால் தான் தொடர்ந்து நான்கு மாதங்கள் இந்த கதையிலேயே என் கவனத்தை செலுத்தி வந்தேன்.

இந்த கதையின் ஒவ்வொரு பாகம் எழுதும் போதும் சில படங்களையும்(pictures) சேர்த்து வெளியிட வேண்டுமென்று நினைத்தேன்.ஆனால் அதற்கு நேரம் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இதை ஒரு குறையென வாசகர்கள் எவரேனும் நினைத்திருந்தால்,என்னை மன்னிக்கவும்!!!

Google Transliteration மூலம் தமிழில் தட்டச்சு செய்வதால் சில எழுத்து பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றது.அதை சரி பார்க்கவும் என்னால் போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை.எதிர்காலத்தில் இந்த எழுத்து பிழைகள் இல்லாமல் பதிவுகளை  வெளியிட முயற்சிப்பேன்.ஆகையால் இப்போதுள்ள எழுத்து பிழைகளையும் பொறுத்து கொள்ள வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

இக்கதை துவங்குவதற்கு முன் கூறியதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இது யார் மனதையும் புண் படுத்துவதற்காக எழுதப்பட்ட கதையல்ல. இதை ஒரு பொழுது போக்காக மட்டுமே கருத வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இக்கதையை ஒவ்வொரு வாரமும் எதிர்பார்த்து காத்திருந்த சில நண்பர்களும் உண்டு.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் அளித்த உற்சாகம் தான் இத்தனை மாதங்கள் தொடர்ந்து எழுத தூண்டியது என கூறினால் மிகையாகாது. நன்றி!!!!

No comments: