Sunday, February 12, 2012

மாஸ் மீடியா -10

மாஸ் மீடியா -10


த்தனை ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் நாயாய் உழைத்தவர் காதர்.அவருக்கு சில பெரும் புள்ளிகளின் நட்பும் உண்டு. தான் இயக்குனராக வேண்டுமென்று தான் சினிமாவுக்குள் நுழைந்தார் காதர்.ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல படம் இயக்க வாய்ப்பு வந்தும்,சில சமரசங்களுக்கு ஒப்புக்கொள்ள மறுத்ததால் அந்த வாய்ப்பும் நழுவியது.இறைவன் சந்தர்ப்பத்தை தவற விடுபவனை லேசில் மன்னித்து விடுவதில்லை.அப்படி ஒரு சந்தர்ப்பத்தை தவற விட்டதை எண்ணி பல ஆண்டுகள் காதர் வருந்தியதுண்டு. ஆனால் தனது முயற்சிகளை அவர் கை விட்டுவிடவில்லை.ஏதோ ஒரு வேலை பார்த்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் சினிமாவிலேயே கழித்து விட்டார். அவருக்கு குடும்பம் உறவு என யாருமில்லை.

இத்தனை வருட அனுபவத்தில் சில முக்கிய புள்ளிகளின் நட்பு கிடைத்தது. ஆனால் இது நாள் வரை தன்னுடைய அனுபவத்தையும் அறிவாற்றலையும் வெளிப்படுத்த வேலையும் வரவில்லை வேளையும் அமையவில்லை. இப்போது எல்லாம் கூடி வர, அதுவும் தன் மகன் போல பாவிக்கும் ஸ்ரீதர் தான் இயக்குனர் என்றதும் காதர் பாயின் உற்சாகத்துக்கு அளவே இல்லாமல் போனது. காற்று போல சுழன்று படத்தை ஒரு வழியாக 'Minimum guarantee' முறையில் வியாபாரம் செய்து முடித்தார். அந்த பணத்தை வைத்து தான் படத்தையே துவங்கினார்கள். இம்முறை ஆடம்பரமான பூஜை எல்லாம் இல்லை. ஸ்ரீதர் தான் நம்பும் ஆஞ்சநேயரையும் காதர் பாய் அல்லாவையும் வணங்க சரண் இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதி காத்தான்.சரணும் மனதளவில் கடவுளை நம்பாமல் இல்லை. விவேக் சென்டிமென்ட்டாக ஒரு தேங்காய் உடைக்க, படத்தை துவங்கி விட்டனர்.இது தான் படத்தின் தலைப்பு 'சில நிஜங்கள்'

ஸ்ரீதர் சொன்ன outline மிகவும் பிடித்து போகவே உடனே படத்தை அறிவித்து விட்டார்கள்.பூஜையும் முடிந்தது.முழு ஸ்க்ரிப்ட்டையும் ஸ்ரீதர் முடித்து விடவே அதை சரணுக்கு narrate செய்தான்.

"Beautiful Sreedhar...கதை ரொம்ப பிடிச்சிருக்கு..ஆனா சில விஷயங்களை மட்டும் மாத்தனம்.."

"என்னங்க மாத்தனம்?ஹீரோயின் கூட கிஸ்ஸிங் சீன் வெக்கணம்..இல்ல பெட் ரூம் சீன் வெக்கணமா?குத்துப்பாட்டு,பறக்கிற fighttu, அரசியல் பஞ்ச் டயலாக் வேணுமா?" - மாஸ் ஹீரோக்களின் மீதிருந்த ஆத்திரத்தை கொட்டி தீர்த்தான்.

"யோவ் என்னய்யா நினைச்சிட்டுருக்க? மரியாதையா பேசு" - விவேக்

"வேற என்னய்யா கேக்க போறீங்க..மாஸ் ஹீரோ லட்சணம் தான் தெரியுமே..உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்றன் தெரிஞ்சிக்கோங்க,ஒரு டைரக்டர் இல்லைன்னா ஒரு ஹீரோ இல்லை.."

"நீ ஒரு படம் கூட எடுத்து கிழிக்கலை அதுக்குள்ள இவ்வளவு திமிரா..ஆகாது ராஜா..சரண் industryல பத்து வருஷமா இருக்காரு..ஏன் அவர் சொன்னதை கேட்டா என்ன குறைஞ்சா போவ?உனக்கு டைரக்டர் சான்ஸ் எங்க சரண் போட்ட.." - என துவங்கிய விவேக்கை எரித்து விடுவது போல சரண் பார்க்க விவேக் நிறுத்தி விட்டான்.பின்னர் சரண் பேசினான்,

"விவேக்,This is your limit..ஸ்ரீதர் நான் ஒன்னும் உன்னை மாஸ் elements add பண்ண சொல்லலை..உன்னோட ஸ்க்ரிப்ட்ல வர்ற flash back சீன எல்லாம் கொஞ்சம் அன்ரியாலிஸ்ட்டிக்கா(unrealistic)  இருக்கு அதை மாத்தனம்..அது மட்டுமில்லாம சில சின்ன சின்ன விஷயத்தை மட்டும் எல்லா கிளாஸ் ஆடியன்ஸையும் ரீச் பண்ற மாதிரி மாத்தனம்.."

இப்போது ஸ்ரீதர் சற்று அமைதியானான்..சரண் பேசுவதை உன்னிப்பாக கேட்க தொடங்கினான்..

"நான் சொல்றத முழுசா கேட்க கூட மாட்டேன்னா எப்படி ஸ்ரீதர்..இவ்வளவு ஈகோ(Ego) ஆகாது சார்..இதை சொன்னதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க.. " - சரண் பேச பேச விவேக்கும் ஸ்ரீதரும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர், சரண் தொடர்ந்தான்,

"When you tell people that you have made a picture, they do not ask, 'Is it a good picture?' They ask, 'How many days?' - இதை நான் சொல்லலை Gottfried Reinhardன்னு ஒருத்தர் சொல்லி இருக்காரு"

"பாஸ் இதையெல்லாம் எங்க புடிச்சீங்க..ச படிச்சீங்க? அவ்வளவு இங்கிலீஷ் புக் படிச்சிட்டிங்களா என்ன ?"- விவேக்

"இல்லைப்பா இதை சுஜாதா சார் தன்னோட 'கனவுத் தொழிற்சாலை' என்கிற நாவல்ல quote பண்ணி இருப்பாரு.. எனக்கு தெரிஞ்சதெல்லாம் சுஜாதாவும் பாலகுமாரனும் கல்கியும் தானே.."

"ஆமாம் சார் நானும் கனவுத் தொழிற்சாலை படிச்சிருக்கேன்..சுஜாதா sir is a legend" - சுஜாதாவின் பெயரை கேட்டதும் துடிப்புடன் பதில் சொன்னான் ஸ்ரீதர்

"யாரோ சொன்ன மாதிரி 'சிலர் இருந்தும் இறந்தவர்களாகி விடுகிறார்கள்,சிலர் இறந்தும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்' என்கிற இந்த வாசகம் சுஜாதா சாருக்கு ரொம்பவே பொருந்தும்..He is immortal" - சரண், பிறகு தொடர்ந்தான்,

"நான் கண்ட மாஸ் சினிமாவும் நடிச்சி தான் டாப்ல இருந்து கீழ விழுந்தேன்.. அதே தப்பை நான் மறுபடி செய்ய விரும்பல..அதனால end product டைரக்டர் ஸ்ரீதருக்கு சொந்தமானதாத் தான் இருக்கும்.. Dont Worry.."

பதிலேதும் பேசாமல் சரி என்பது போல் தலையசைத்தான் ஸ்ரீதர்.பிறகு சரண்,

"ஆமாம் இதிலே ரெண்டு ஹீரோயின் இருக்காங்களே..ராணின்னு ஒரு பொண்ணை ok பண்ணதா சொன்னீங்க.. ஆனா அந்த இன்னொரு ஹீரோயின்?"

"ஒரு new face introduce பண்ணலாம்னு இருக்கேன் சார்.." - Sreedhar

"இல்லைப்பா இதுக்கு புதுமுகம் போட்டா செட் ஆகாது..கொஞ்சம் established artiste இருந்தா தான் எடுபடும்.. ஏன்னா இந்த ரோல் நிறைய demand பண்ணுது..நடைல இருந்து ஆரம்பிச்சு கண் அசைவு,சிரிப்புன்னு எல்லாமே இதிலே ரொம்ப உன்னிப்பா கவனிப்பாங்க ஆடியன்ஸ்..நீ ஒரு புது ஆர்டிஸ்ட்ட வச்சி பண்றது ரொம்ப கஷ்டம்.."

"சார் எனக்கொரு ஐடியா.."

"என்ன?"

"ஜோயித்தா மேடம் கரெக்டா இருப்பாங்கல்ல சார் இதுக்கு?"

"Excellent!!! ஆனா அவங்க இதிலே நடிப்பாங்களா?ஏன்னா இது கொஞ்சம் தெய்வீகமா பார்க்கப்பட வேண்டிய கேரக்டர் ஆச்சே..அவங்களோ இப்போ பப்ளீயான(bubbly) characters நிறைய பண்றாங்க..She is in the peak of her career.. இந்த நிலைமையிலே நடிக்கறதும் ரிஸ்க் தான்.."

"அவங்களை சம்மதிக்க வைக்கிறது ஏன் பொறுப்பு சார்.."

"Best of luck...அப்புறம் ஸ்ரீதர்,படத்தோட டைட்டில் சாங்(Song) மட்டும் நம்ம 'experienced youngster' சுக்ரீவன் சார் கிட்ட வாங்கிடு..புது டைரக்டர்சுக்கு அவர் பாட்டெழுதினா படம் சூப்பர் ஹிட்டாகும்னு ஒரு நம்பிக்கை" 

                                                       ***************************   
 வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து,துரோகிகளையும் தோல்விகளையுமே சந்தித்த ஒரு மனிதன் ஏறக்குறைய ஒரு பைத்தியக்காரன் போல திரிகிறான்.சில மாதங்களாக சவரம் செய்யாத தாடி,கலைந்திருந்த பறவை கூடு போல தலை முடி,கிழிந்த பனியன்,பல நாட்களாக துவைக்கப்படாத அழுக்கு வேஷ்டி இந்த தோற்றத்தில் அலைகிறான். இவனது இந்த நிலைக்கு நாடங்களில் நாட்டியமாடும் பெண்ணொருத்தி தான் காரணம் என்கிற விபரம் தெரிய வர, இவனது பூர்விகமும் இவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அறிந்து கொண்ட மானசா உணர்வுபூர்வமாக உதவுகிறாள். அவன் மீது காதலும் வந்து விடுகிறது.கடும் போராட்டத்திற்கு பிறகு அவனை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறாள். தன்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்தவள் விபத்தில் இறந்து போக அவன் கதறி அழுகிறான்.உரக்க கூச்சலிட்டு அழுது கொண்டே இருக்க,சுற்றி இருந்தவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.அவனது துயரம் அனைவரையும் பாதித்து விட்டது.

படத்தின் டைரக்டர் ஸ்ரீதரையும் தான்.'கட்' கூட சொல்லாமல் சரணின் நடிப்பை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தான். பிறகு திடீரென சுய நினைவு வந்தவனாய் - 'டேக் ஓகே' என்றான்.

"What an amazing performance!!!!He is such a great actor!!!!நான் இவர் கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது.. 'இறைவன் காரணமில்லாமல் யாரையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வதில்லை' - வாலி சார் அடிக்கடி சொல்லுவார்..இது எவ்வளவு உண்மை.அப்போ அப்படி நடந்துகிட்டதுக்கு நிச்சயம் இன்னிக்காச்சு மன்னிப்பு கேட்டே தீரணம்..I am sorry Mr.Saran..!!!" - தனக்கு தானே சொல்லி கொண்டான்.இப்போது அவன் மனதில் சரண் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டான்.

எடிட்டிங்,டப்பிங் என எல்லாம் முடிந்தது.இனி படப்பிடிப்புக்கோ பாடல் ஒலிப்பதிவிற்கோ அவசியம் இல்லை.முழு படத்தையும் அவர்கள் பார்த்து முடித்தார்கள்.படத்தின் producer தீனதயாள்,காதர் பாய்,ஸ்ரீதர்,சரண்,விவேக்,ராணி, ஜோயித்தா,விவேக் என அனைவரும் பார்த்து முடித்தனர்.அனைவருக்கும் பரம திருப்தி.

"பாஸ் கலக்கிட்டீங்க..நிச்சயம் இதுக்கு national award கிடைக்கும்..படம் தாறுமாறு ஹிட்டாகும்"

"ஆமாம் Mr.Saran..உங்க கூட work பண்ணினது it was a great experience..இவ்வளவு satisfactory movie இது வரைக்கும் நான் பண்ணதில்லை.." - முழு மனதுடன் சொன்னாள் ஜோயித்தா.

"ஆமாம் பாஸ்,இந்த படத்திலே ஹைலைட்டே நீங்களும் ஜோயித்தா மேடமும் வர்ற half an-hour தான்..உங்க ரெண்டு பேருக்கும் அவார்டு கிடைக்க போறது உறுதி" - விவேக்

"எல்லா கிரெடிட்டும் உங்க சிஷ்யன் ஸ்ரீதருக்கு தான்..என்ன டைரக்டர் சார்,ரைட்டா" - என ஸ்ரீதரை பார்த்து கண்ணடித்தான் சரண்.

"சார் இதை நான் இப்போ சொல்லியே ஆகனம்..நான் எழுதின ஸ்க்ரிப்ட்டுக்கு உங்க நடிப்பு உயிர் கொடுத்திருக்குன்னு தான் சொல்லனம்..டைரக்டர் ஹீரோவை உருவாக்கலாம்னு சொல்றது எந்தளவு உண்மையோ அதே அளவு ஒரு ஹீரோ சில நல்ல டைரக்டர்களையும் உருவாக்கலாம்னு புரிஞ்சிகிட்டேன்.."

"சினிமா ஒரு டீம் வொர்க் தம்பி..இது வெறும் ஹீரோ-டைரக்டர் விஷயம் இல்லை" - காதர் பாய்

"கண்டிப்பா பாய்..ஒத்துக்கிறேன்..ராத்திரி பகல்னு பாக்காம வேலை பார்த்த லைட்மேன், சவுண்ட் எஞ்சிநீர்ஸ், ஆர்ட் டைரக்டர்,ஆசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்,எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்ட்ஸ்,டான்ஸ் மாஸ்டர்,ஸ்டன்ட் ஆளுங்கன்னு இது ஒவ்வொரு தொழிலாளியோட உழைப்பு..இது நிச்சயம் ஜெயக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு பாய்.."

இந்த படத்தில் நாட்டியக்காரியாக நடிக்க கடும் உடற்பயிற்சியின் மூலமும் கட்டுப்பாடான உணவு பழக்கங்களின் மூலமும் நன்றாக உடல் இளைத்திருந்தாள் ராணி.சபையில் அத்தனை பேர்களுக்கு மத்தியில் பேச அவளுக்கு சற்று பயம்.ஆனாலும் ஆர்வமாக கேட்டாள்,

"படம் எப்போ சார் ரிலீஸ் பண்ண போறீங்க?" - பவ்யமாக கேட்டாள்.அவளது பேச்சிலும் நல்ல மாறுதல் தெரிந்தது.

"ஆமாம் தம்பி இதை பத்தி நானே உங்க கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்..எப்போ ரிலீஸ் பண்ணலாம்னு சொல்லுங்க.." - காதர் சரணை பார்த்து கேட்டார்.

"ரம்ஜான் ரிலீஸ்"

"பாஸ் அன்னைக்கி தான் அந்த தர்மராஜ் நடிச்ச படம் ரிலீஸ் ஆகுது..நமக்கு தியேட்டர் கிடைக்காது"

"கிடைக்கிற ஸ்க்ரீன்ல ரிலீஸ் பண்ணலாம்..யார் ஹீரோன்னு ரம்ஜான் அன்னைக்கு தெரிஞ்சிடும்" - சரண்

"இந்த ரிஸ்க் அவசியம் தானா?" - ஜோயித்தா

"சில நேரத்திலே சில ரிஸ்க் எடுத்தா தான் நம்ம சக்தி என்னன்னு உலகத்துக்கு புரியும்..ஸ்ரீதர் இந்த படம் அடி வாங்கினா இரண்டு பேரோட career காலி..ஒன்னு என்னது,இன்னொன்னு உன்னுடையது..நீ என்ன சொல்ற?" - சரண்

"ரம்ஜான் ரிலீஸ் தான் சார் கரெக்ட்..என் படம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு"

"அப்புறம் என்ன பாய்..எவ்வளவு ஸ்க்ரீன்ல முடியுதோ அவ்வளவு ஸ்க்ரீன்ல ரிலீஸ் பண்ண try பண்ணுங்க..குறிப்பா ரெண்டு ஸ்க்ரீன் இருக்கிற தியேட்டர்ஸ் எது எதுல அந்த தர்மராஜ் படம் ரிலீஸ் ஆகுதோ,அதுல எல்லாத்திலேயும் ஒரு ஸ்க்ரீன்ல நம்ம படம் ரிலீஸ் ஆகனம்..சின்ன ஸ்க்ரீனா இருந்த கூட பரவாயில்லே"

"தம்பி எனக்கு புரியல..ஏன் இப்படி?"

"பாய் சும்மா அரசியல் செல்வாக்கும் காசு பணமும் இருந்தா மட்டும் போதாது..படத்திலே கண்ட கபோதியும் ஹீரோவா நடிச்சா ஜனங்க ஏத்துக்குவாங்களா என்ன?என் படத்துக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு பாய்.. நீங்க வேணும்னா பாருங்க முதல் வாரத்துக்கப்புறம் நம்ம படம் மட்டும் தான் ஓடும்,அவன் படம் படுத்துடும்..அப்போ நமக்கு அதிக ஸ்க்ரீன் கிடைக்கும்"

விவேக் ஏதோ சொல்ல முற்பட,சரண் குறுக்கிட்டு,

"இது தான் என்னோட முடிவு..பாய் அல்லா மேல பார்த்த போட்டுட்டு ரிலீஸ் வேலைய கவனிங்க..நாம நிச்சயம் ஜெயப்போம்"



                                                        *************************** 

சினிமாவை பற்றி சரண் எந்த அளவு அறிந்து வைத்திருந்தான் என்பது ஸ்ரீதருக்கு வியப்பை அளிக்கவில்லை. ஏனெனில் அனைத்தையும் இழந்த பிறகும் கூட தெளிவாக,சுயமாக சிந்தித்து சரண் எடுத்த முடிவுகளை அவன் அறிந்திருந்தது தான்.அப்படிப்பட்ட முடிவுகளில் முக்கியமான முடிவு தன்னை இயக்குனராக தேர்வு செய்ததும், தன இஷ்டப்படியே படம் இயக்கவிட்டதும் தான்.சரணின் ஆரூடம் பலித்து விட்டது.தர்மராஜ் ஹீரோவாக நடித்த படம் படு தோல்வியை தழுவியது.அரசியல் ரீதியாக எவ்வளவு தான் அழுத்தம் கொடுத்தாலும் அந்த படம் தாக்கு பிடிக்கவில்லை. இது தர்மராஜுக்கும் நீலகண்டனுக்கும் தொழில் ரீதியாக சரண் கொடுத்த பலத்த அடி என்றே கோடம்பாக்கத்தில் அனைவரும் பேசிக்கொண்டனர். சரண் நடித்த 'சில நிஜங்கள்' மக்கள் மத்தியில் சரண் படங்களுக்கிருந்த வரவேற்பை வெளிச்சம் போட்டு காட்டியது.அதே சமயம் அறிமுக இயக்குனரான ஸ்ரீதரின் திறமையை கண்டு வியக்காதவர்கள் இல்லையெனலாம்.

"தம்பி நம்ம அடுத்த படத்தை நீங்க தான் டைரக்ட் பண்ணனம்.இந்தாங்க முதல்ல அட்வான்ச புடிங்க.." - பிரபல தயாரிப்பாளர் முருகேசன் பணம் கொடுத்துவிட்டு சென்றார்.

நடந்தவற்றை சில நிமிடங்கள் மனத்திரையில் ஓட விட்டு பார்த்தான் ஸ்ரீதர்.

நீங்க வெளியில இருந்துப் பார்க்கிற சினிமா வேற ஆனா இங்க நடக்கறது வேற..டைரக்டர் ஆகனன்ற தப்பான ஆசைய இப்போவே விட்டுடு..அதெல்லாம் ரொம்ப கஷ்டம் தம்பி -  இது தான் முதல் முதலில் கோடம்பாக்கம் வந்த பொது கேட்ட வாக்கியம்.

இன்று அட்வான்ஸ் கொடுத்து, தான் தான் படமியக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் தேடி வருகிறார்கள்.'நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்..இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்' - என்ற வரிகள் தன மனத்தில் ஓட 'Vaali sir you are great' - என்ற வார்த்தைகளை அவன் உதடுகள் உச்சரித்தது.


                                                        *************************** 

நீண்ட நாட்களுக்கு பின் மது அருந்தினான் சரண்.இம்முறை தன அளவை தாண்டுவதில்லை என்ற முடிவோடு தான் மது அருந்த தொடங்கினான்.விவேக்கும் அருகிலமர்ந்து குடிக்க,

"பாஸ் நீங்க மறுபடி ஜெய்ச்சிட்டீங்க..இனிமே நீங்க தான் டாப்" - விவேக்

"விவேக்,தோக்கரப்போ தைரியமும்,ஜெயக்கிரப்போ பயமும் வரணம்..ஆணவம் மட்டும் தலைக்கேரிட கூடாது" - சரண்

"No more philosophies Boss..let's enjoy the drink' என சொல்லி குடித்தான் விவேக்,பிறகு தொடர்ந்தான்,

"பாஸ் விஷயத்த கேள்வி பட்டீங்களா? வாசு டைரக்ட் பண்ணி நடிச்ச படம் bundle ஆய்டிச்சாம்..செம்ம நஷ்டமாம்.. Producer கண்ணப்பன் மறுபடி வடபழனில இட்லி கடை வச்சு பொழக்கிற அளவுக்கு ஆயிடிச்சாம்.."

"அந்த அளவுக்கா நஷ்டம்?"

"அட அதை விடுங்க பாஸ்..லேட்டஸ்ட் இது தான்..இப்போ வாசுவை வச்சு நீலகண்டன் படமெடுக்க போறாராம்.. கதை என்னன்னா,அரசியல் நெருக்கடிகளால ஒரு சினிமா ஹீரோவை ஒழிச்சி கட்டிடரங்க,ஆனா அந்த ஹீரோ திரும்ப எப்படி ஜெயக்கிரான்னு தான் கதையாம்.."

"நானும் கேள்விபட்டேன்"

"இதுல என்ன beautyன்னா அந்த படத்தை வாசு சொந்தமா produce பண்றாராம்..so மத்த producers கை கழுவிட்டாங்கன்னு அர்த்தம்..இதுவும்  கண்டிப்பா ஓடாது பாஸ்..வாசு இனி field out தான் ..உங்களுக்கு opposition இனிமே யாருமே இல்லை"

"வாசுவை பத்தி உனக்கு சரியா தெரியாது.பொம்பள விஷயத்திலே அப்படி இப்படி இருந்தாலும் அவன் அளவுக்கு சினிமாவ பத்தி தெரிஞ்ச ஹீரோக்கள் ரொம்ப கம்மி..அவன் சொந்த பேனர்ல படம் பண்றான்னா it must be something special!!!!" - என சொல்லி கடைசி 'round' அடித்து முடித்தான் சரண்.



                                                        ***************************  


ரண்டு ஆண்டுகள் சென்று விட்டன.இந்த படத்தின் வெற்றி ஸ்ரீதருக்கு புதிய ஏற்றத்தை கொடுத்தது. சரணுக்கு, இழந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. ரணிக்கோ சினிமாவில் ஒரு நடிகை என்ற அந்தஸ்த்தை கொடுத்தது.இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடித்த ஜோயித்தாவுக்குத் தான் எதிர்பாராததை கொடுத்து விட்டது.அவளுக்கு 'சில நிஜங்கள்' பல நிஜங்களை புரிய வைத்து விட்டது.

இப்போது ஸ்ரீதர் பிரபல இயக்குனராகிவிட்டான்.பிரபல ஹீரோக்களை வைத்தும் ஹிட் கொடுத்துவிட்டான்,அறிமுக நடிகர்களை வைத்தும் வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டான்.ஆனால் ஜோயித்தாவுக்கோ 'சில நிஜங்கள்' தான் கடைசிப் படம்.அந்த படத்தில் அவள் நடித்த கதாபாத்திரமே அவளுக்கு எதிரியாகி விட்டது.அந்த படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை ஒப்புக்கொள்ள வேண்டாமென ஸ்ரீதர் கேட்டுகொண்டான்.அது வரை glamour ரோல்களில் நடித்து வந்த ஜோயித்தாவுக்கு, இப்படி ஒரு 'தெய்வீகமான' கதாபாத்திரத்தில் நடித்த பிறகு சாதாரண கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.'சில நிஜங்கள்' படத்தில் அவர் நடித்ததை பார்த்ததாலோ என்னவோ, சாதாரண டூயட் பாடும் கவர்ச்சியான ஹீரோயின் வேடத்துக்கு இவர் முகம் எந்த இயக்குனரின் நினைவுக்கும் வரவில்லை.அவார்ட் படங்களும் அமையவில்லை என்பது தான் ஜோயித்தாவின் துரதிர்ஷ்டம்.பட வாய்ப்புகளின்றி கடும் விரக்தி அடைந்தாள் ஜோயித்தா..

"இப்படி அடுத்து என்ன செய்றதுன்னே புரியாம இருந்தா எப்படி?" - ஜோயித்தாவின் PA மாலு பேச்சு கொடுத்தாள்

"என்னை என்ன தான் மாலு செய்ய சொல்ற?"

"அந்த ஸ்ரீதருக்கு தான் ஒரு வாட்டி கால் பண்ணி கேட்டா என்ன?நீ இல்லைன்னா அவன் இவ்வளவு பெரிய ஆள் ஆயருக்க முடியும்னு நினைக்கிறியா?"

"அதை நான் செஞ்சிருக்க மாட்டேன்னு நீ நினைக்கிறியா? ஸ்ரீதர் கிட்ட அவரோட அடுத்த படத்திலே எனக்கு சான்ஸ் கொடுக்கு சொல்லி கேட்டேன்.. 'இந்த ரோல் உங்களுக்கு செட் ஆகாது ஜோயித்தா..உங்க நிலைமை புரியுது,but உங்களுக்கேத்த ரோல் வந்தா நிச்சயம் கூப்பிடறேன்'ன்னு சொல்லிட்டார்..அதுக்கப்புறம் ஸ்ரீதரும் என்னை கூப்பிடல என்னாலையும் அவரை contact பண்ண முடியல..இனிமே எனக்கு சினிமா சரிபட்டு வரும்னு தோனல"

"அப்புறம்?வேற என்ன செய்யறதா உத்தேசம்?"

"TV serialல நடிக்க try பண்ணிகிட்டிருக்கேன்..அது சம்மந்தமா நாளைக்கு evening ஒருத்தரை மீட் பண்ணனம்.. அதுக்குள்ள சீரியல்ல சம்பளம் எல்லாம் என்ன rangeல வாங்கறாங்க?அங்க வேலை எப்படின்னு சில details எல்லாம் collect பண்ணிடு"

வளர்ந்து வரும் எந்த நடிகையும் ஜோயித்தா 'சில நிஜங்கள்' படத்தில் நடித்தது போன்ற வேடத்தில் நடிக்க மறுப்பது ஏன் என்பது இப்போது தான் ஜோயித்தாவுக்கு புரிந்தது.சினிமாவை பொறுத்த வரை, நட்பு,உதவி இது எல்லாம் தன்னை பற்றிய சிந்தனைக்கு பிறகு தான் இருக்க வேண்டும்.தொழில் வேறு,நட்பு வேறு என்பதை ஸ்ரீதர் உணர்த்தி விட்டான். ஸ்ரீதருக்காக மற்ற படங்களில் கமிட் ஆகாமல் விட்டது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பதை நினைத்து பல முறை வேதனைபட்டிருக்கிறாள்.'சில நிஜங்கள்' அவளுக்கு பல நிஜங்களை உணர்த்தி விட்டது.


(முற்றும்...)

பி.கு. : முடிவுரைக்கு இங்கே செல்லவும் 


 

1 comment:

Vishnu Vardhanan said...

Good one dude..More than anything kudos to your commitment for writing this almost for 3 to 4 months given your repertoire for social and political posts.

One line story of Sridhar and the synopsis of his film script are thoughtful..Way to go..

It was a good read..Keep writing.. :)