Sunday, January 29, 2012

மாஸ் மீடியா - 8


மாஸ் மீடியா -8
Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)


ரணுக்கு மதுவிலேயே சில மாதங்கள் கடந்தன.ஏறத்தாழ ஒரு மன நோயாளி போல் ஆகிவிட்டான் என்றால் மிகையல்ல.தொடர்ந்து குடிப்பதும் சாப்பிடுவதும் உறங்குவதுமாய் காலங்கழித்ததால் சரண் மிகவும் குண்டாகி விட்டான்.கண்கள் சிவந்திருந்தது.முகத்தில் பல நாட்களாக சவரம் செய்யாத தாடி.தொப்பையும் தொந்தியும் தாடியுமாக பரிதாமகவே காணப்பட்டான் சரண்.வெறுப்பின் உச்சத்துக்கே போனான்.மீண்டும் மது அருந்த பாட்டிலை எடுத்தான்.வாய் வரை பாட்டிலை கொண்டு சென்றவன் வெறி பிடித்தவனை போல் பாட்டிலை தூக்கி வீசினான். சுவற்றில் பட்டு அது சுக்குநூறாகி போனது.என்ன நினைத்தானோ என்னவோ திடீரென வீட்டை விட்டு வெளியேறினான்.தாடி முகத்தை மறைத்திருந்ததாலும் பழைய அழுக்கான உடுப்புகளை உடுத்தி இருந்ததாலும் சரணை மக்கள் எவரும் அடையாளம் காணவில்லை.

பைத்தியக்காரன் போல சென்னை முழுக்க சுற்றினான்.சென்னை அரசு பேருந்தில் ஏறினான்.50 ருபாய் டிக்கெட் வாங்கியவன் அன்று முழுவதும் பல பேருந்துகளில் ஏறினான்.சென்னையின் பல பகுதிகளை சுற்றி சுற்றி வந்தான். தர்மராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட போஸ்டர்கள் பல ஒட்டப்பட்டிருந்தன.ஆத்திரத்தில் சிலவற்றை கிழித்தெறிந்தான்.சுற்றி சுற்றி வந்த சரணுக்கு இதுவும் கண்ணில் பட்டது.தி நகர் அருகே உள்ள ஸ்ரீனிவாசா திரயரங்கரத்தின் வாசலில் நின்றிருந்தான்.அங்கே தான் நடித்த 'அத்தை மகள் ஆனந்தி' படம் re-release செய்யப்பட்டிருந்தது. சரண் மனதில் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்ச்சி ஏற்பட்டது.திரையரங்கினுள் சென்றான்.டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி.வாயடைத்து நின்றான். அவ்வளவு கூட்டம்.அரங்கம் நிறைந்திருந்தது.

"யோவ் உக்காருய்யா படம் மறைக்குது" - என பின்னாலிருந்து குரல் வர சரண் அமர்ந்தான்.சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த படம் சரணின் கேரீயரிலேயே மிக பிரம்மாண்டமான வெற்றிப் படம்.சரணின் நடிப்புக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இந்த படத்தின் மாபெரும் வெற்றி சரணுக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது.A,B,C என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது.இன்றளவும் இந்த படத்திற்கு ஒரு மரியாதை இருப்பதை இந்த கூட்டத்தை பார்த்த சரண் உணர்ந்தான். நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு சுய நினைவு திரும்பியவனை போல் சிந்திக்க தொடங்கினான்.படத்தை பார்ப்பதில் தனது கவனம் இப்போது செல்லவில்லை.தான் நடித்த இந்த படத்தை தானே நூறு முறை பார்த்திருப்பான் சரண்.அவன் கவனம் முழுவதும் வேறு விஷயத்தில் இருந்தது.எந்தெந்த வசனங்கள்.காட்சிகள்,பாடல்கள் கைதட்டல்கள் பெறுகின்றன? எந்த காட்சியில் பார்வையாளர்கள் அரங்கை விட்டு வெளியே செல்கிறார்கள்?என்ன விதமான 'கமெண்ட்' அடிக்கிறார்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க தொடங்கினான்.

படம் முடிந்து,அரங்கிலிருந்து வெளியே செல்பவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என காது கொடுத்து கேட்க தொடங்கினான்.

"ஏன்னா படம் டா..இது re-releaseன்னு நம்பவே முடியல இல்ல?"

"ஆமாம் டா எப்பா..ஏன்னா கூட்டம்..இவ்வளவு திறமைய வச்சிக்கிட்டு இந்தாளு எங்க டா போனான்..படமே இல்ல.."

"இந்த மாதிரி படம் நடிக்க சொன்னா மாஸ் மண்ணாங்கட்டின்னு போயி கடுபெதிட்டான் யா.."

"ஆனா ஒன்னு மட்டும் சொல்றன்,இந்த சரண்,மாஸ் படம் அது இதுன்னு போகாம இந்த மாதிரி படம் நடிச்சான்னு மட்டும் வை,அவன் தாண்டா டாப்பு.."

"திரும்ப வருவார் டா எங்க ஹீரோ..கெத்து காட்ட தான் போறாரு நீயும் பாக்க தான் போற"

இது போன்ற கருத்து தான் பலரிடமும் நிலவியது.இவற்றை கேட்க கேட்க சரண் உணர்ச்சிவசபட்டான்.தன்னை அறியாமலேயே கண் கலங்கி விட்டான்.

"இவன் திரும்ப வந்துட்டாலும்..போடா..பிரபாவதி ரூபாவதின்னு  எவ கூட என்ன பண்ணிட்டிருக்கானோ.. அவன் டைம் எல்லாம் முடிஞ்சி போச்சு"

இப்படி சிலர் ஏளனம் பேசவும் தவறவில்லை.இவை அனைத்தையும் கவனித்து விட்டு சரண் மீண்டும் பேருந்தில் ஏறினான்.மெரினா கடற்கரையில் தனியே நடக்க தொடங்கினான்.அன்று மக்கள் நடமாட்டம் அதிகமில்லை. திடீரென மணலில் அமர்ந்து கடலையே உற்று நோக்க தொடங்கினான். அலைகளையே கவனமாக பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வையில் ஏதோ ஒரு அர்த்தம் இருந்தது.ஏதோ ஒரு 'pattern'ஐ கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அலைகள் உயர எழும்பின பின்னர் விழுந்தன.மீண்டும் உயர எழும்பின மீண்டும் விழுந்தன.மீண்டும் எழுந்தன மீண்டும் விழுந்தன..

சரண் எழுந்தான்.தன்னை தானே ஒரு முறை நோட்டம் விட்டு கொண்டான்.வீட்டைச் சென்றடைந்த பின் நிம்மதியாக உறங்கினான்.

மறு நாள் காலை வழக்கம் போல சரணை எழுப்ப வந்த விவேக் அதிர்ச்சி அடைந்தான்.படுக்கையில் சரணை காணவில்லை.அலமாரியில் இருந்த மது பாட்டில்கள் மொத்தமும் மாயமாய் மறைந்திருந்ததை கண்டு வியப்படைந்தான்.நேற்று ஆத்திரத்தில் சரண்,  மது பாட்டில்களை உடைத்தது நினைவிற்கு வர விவேக்கிற்கு உள்ளூர ஒரு பயம் பற்றி கொண்டது.ஒரு வேளை சரண் ஏதேனும் விபரீதமான முடிவை மேற்கொண்டு விட்டானோ என. ஆனால் விவேக்கிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

முகத்தை முழுச் சவரம் செய்திருந்த சரண் வந்து சேர்ந்தான்.ஜிம்மிற்கு சென்று கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளான் என்பதை விவேக் உணர்ந்தான்.இது உண்மையில் விவேக்கிற்கு அதிர்ச்சி தான். ஆனால் இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

"பாஸ் You are just awesome today..Full shave, இவ்வளவு காலையில exercise,பாட்டில் எதுவும் காணோம்.. பார்க்கிறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு" - விவேக்

"விவேக் இது தான் என்னோட பிளான்..இன்னும் ஒரு மாசத்துல இந்த தொப்பைய முழுசா குறைக்கணம். உடம்புக்கு full fitness கொண்டு வரணம்.அப்புறம் ஆரம்பிக்கலாம் நம்மளோட செகண்ட் இன்னிங்க்ச"

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி தெளிவாக பேசிய சரணை கண்டதில் ஏக மகிழ்ச்சி அடைந்தான் விவேக். 'நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது' என குடுகுடுப்பைக்காரன் பேசும் வசனம் தொலைகாட்சியில் தற்செயலாக ஒளிபரப்பாக,விவேக்,பக்குவமாக புன்னகைத்து விட்டு நகர்ந்தான்.


                                                       ***************************



ண்ணப்பன் தயாரிக்கும் படத்தை இயக்க போவது ஸ்ரீதர் தான் என்பது உறுதியாகி விட்டது.படத்திற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டாகி விட்டது.படத்திற்கு பிரம்மாண்டமான பூஜையும் போடப்பட்டு விட்டது. தான் இன்று ஒரு இயக்குனராக பெரிதும் உதவிய காதர் பாய்,நடிகை ஜோயித்தா மற்றும் ஸ்ரீதரின் குருநாதர் சுகுந்தன் என அனைவரும் பூஜையில் கலந்துகொண்டனர்.இந்த ஜோயித்தாவை பார்த்த வாசுவிற்கு வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறிய கதையாக மனதிற்குள் ஆபாச எண்ணங்கள் ஓட தொடங்கின."பேசாம படத்துக்கு இவளை ஹீரோயனா select பண்ண்யிருக்கலாம்..ஆயிரம் சொல்லு செம்ம கட்டை டா இவ..சரி பரவாயில்லை இப்போ select பண்ணியிருக்கிற ஹீரோயினும் அதுக்கு பொருத்தமாத் தான் இருப்பா" - மனதிற்குள் நினைத்து கொண்ட வாசு ஜோயித்தாவை பார்த்து பெருமூச்சு விட்டான்.ஜோயித்தாவோ வாசுவை கண்டுகொள்ளாமல் ஸ்ரீதருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினாள்.

படத்தின் கதை கண்ணப்பனுக்கு பிடித்து விட்டது. வாசுவுக்கும் இந்த கதையை விளக்கி விட்டான் ஸ்ரீதர்.ஆனால் வாசுவோ ஸ்ரீதர் சொன்ன கதையையோ அல்லது கதையை சொன்ன ஸ்ரீதரை வெகுவாக ரசிக்கவில்லை.இதை ஸ்ரீதரும் கவனிக்கத் தவறவில்லை.இவற்றை விட ஸ்ரீதருக்கு எரிச்சலூட்டிய விஷயம் என்னவென்றால் தான் சொன்ன கதையை கேட்டு அந்த கதையில் வாசு சொன்ன மாற்றங்கள் தான். கதைக்கு சற்றும் சம்மந்தமே இல்லாமல் கதாநாயகியுடன் முத்த காட்சிகள்,படுக்கையறை காட்சிகள்,கதாநாயகியுடன் ஒரு மிக நெருக்கமான மசாலா பாடல் என அனைத்தையும் சேர்க்க வேண்டுமென வற்புறுத்தியது ஸ்ரீதருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.தான் சொல்லும் பெண்ணைத்தான் கதாநாயகியாக்க வேண்டுமென திட்டவட்டமாக கூறி விட்டான் வாசு.கண்ணப்பனும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.இவர்கள் இருவரின் 'எதிர்பார்ப்புகளை' அனைத்து விதத்திலும் 'பூர்த்தி' செய்திருந்த அந்த கதாநாயகியை மாற்ற வேண்டுமென ஸ்ரீதர் சொன்னால் உடனடியாக மாற்றி விடுவார்கள்.கதாநாயகியை அல்ல,படத்தின் டைரக்டரை. மிகுந்த ஆர்வத்துடன் கதை சொல்ல வந்த ஸ்ரீதர் ஏமாற்றத்துடன் தான் திரும்பி வந்தான்.

சுவாரஸ்யமாக ஏதோ புத்தகங்களை புரட்டி கொண்டிருந்த காதர் பாயிடம் நடந்தவற்றை எல்லாம் மிகுந்த வேதனையோடு சொல்லி முடித்தான் ஸ்ரீதர்.

"தம்பி இவ்வளவு நாள் சந்திச்சது சோதனை இல்லை..இது தான் ஆரம்பம்..இன்னும் நீ நிறைய பார்க்க வேண்டி இருக்கும்"

"பாய்,இந்த ஹீரோ கம்மினாட்டி தன்னோட ஆசையை எல்லாம் தீர்த்துக்கனம்னு என் கதையை கண்ணா பின்னான்னு மாத்த சொல்றான் பாய்..இவன் சொல்றபடி செஞ்சா என் கதை 10% தான் இருக்கும், பாக்கி 90% கதை அந்த வாசுவோட கதையா தான் இருக்கும்.."

"நீ ஒன்னும் prove பண்ண டைரக்டர் இல்லையேப்பா.."

"அதுக்காக?"

"அதுக்காக நீ சில compromises பண்ண வேண்டி இருக்கும்..என்னை பத்தி உனக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்றன் கேளு..உன்னை மாதிரி தான் நானும் இங்க வந்தேன்..டைரக்டராகனோம்,சாதிக்கனம்னு தான் கிளம்பி வந்தேன்..இப்படி ஒரு ஹீரோ கேட்டதுக்கு ஒத்துழைக்க மாட்டேன்னு சொன்னதோட விளைவு தான் இன்னைக்கு வெறும் துணை நடிகர்கள் ஏஜண்டாவே இருக்கேன்..வாய்ப்பு வர்றப்போ பயன்படுத்திக்கோ"

"ஆனா பாய் அந்தாளு சொல்றதெல்லாம் எப்படி...?" - என இழுத்த ஸ்ரீதருக்கு அறிவுரை சொல்ல தொடங்கினார் காதர்.

"அவன் சொல்றதெல்லாம் சேர்த்தா என்ன?உன் கதை வெறும் 10% தான் வருதுன்னு சொன்னியே..அதுல கவனம் செலுத்து..பெரிய ஹீரோ படம்..நல்ல பப்ளிசிட்டி இருக்கும்..ஒரு ஹிட் கொடுத்துட்டா போதும்..நாளைக்கி நீ தான் டாப்..இல்லைன்னு அடம் பிடிச்சா நேத்து எப்படி ஒரு காதரோ இன்னைக்கி அப்படி ஒரு ஸ்ரீதர்னு கதை முடிஞ்சிடும்" - என காதர் பாய் சொன்ன அறிவுரையை கேட்ட ஸ்ரீதர்,ஓரளவு convince ஆனான்.


                                                       ***************************


 ன் படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நடிகை தேடிக்கொண்டிருந்தான் ஸ்ரீதர்.ஸ்ரீதரின் எதிர்பார்ப்பு என்னவென்றால் வெறும் சிவந்த தோல் பெண்ணாக இருந்தால் போதாது.சற்று குண்டாக, அதே சமயம் சற்று அழகாகவும் வயது குறைவாகவும் இருக்க வேண்டும்.முக்கியமாக இதுவரை படங்களில் அறியப்படாத  நடிகையாக இருக்க வேண்டும் ஏனெனில் ஸ்ரீதரின் கதையில் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு தனி முக்கியத்துவமுண்டு. நடிக்க சான்ஸ் கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்த ஒரு சில பெண்களின் ஸ்டில்ஸை(stills) பார்த்தான்.தன் எதிர்பார்ப்புக்கேற்ற பெண் கிடைக்கவில்லை. ப்ரொடக்ஷன் மேனேஜர் உதவியுடன் சான்ஸ் கேட்டு காத்திருக்கும் பெண்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றான் ஸ்ரீதர்.

அங்கே சிவப்பு நிற சேலையை அறையும் குறையுமாக உடுத்தி இருந்த ஒரு பெண்ணை கண்டான்.சென்னை தமிழின் பொன்னான வார்த்தைகளில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தால் அந்த பெண்.

"அய்யே கசுமாலம் எப்டி பொது பாத்தியா..பையில மொத்தமா பத்து ரூவா இல்ல,இது மொகறைக்கெல்லாம் பொம்பள சுகம் கேக்குது..ஈத்தர நாயிங்க கண்டவன் காசுல குச்சிட்டு எவ கிடைப்பான்னு கொயுத்து போயி அலையறானுங்க.. துத்தேறி நாரப்பய மொவன்..."

"இந்த பொண்ண நடிக்க வைச்சா வசனம் எழுதிற வேலை கூட மிச்சம் போலே" - என எண்ணிய ஸ்ரீதர் மனதில் ஏதோ ஒரு குழப்பம் தோன்றியது.அந்த பெண்ணை அருகில் நெருங்க நெருங்க ஸ்ரீதருக்கு குழப்பம் அதிகமானது..முந்தானை விலகி முழங்கால் தெரியுமளவு புடவையை தூக்கி கட்டியிருந்த அந்த பெண் தலைவிரி கோலமாக நின்றதை கண்டு ஸ்ரீதர் திகைத்து போய் நின்றான்.

"அட..யார்பா நீ...அப்டி பாக்குற..சட்ட பேண்டு கூலிங் க்ளாசு எல்லாம் போட்டுகினு ஷோக்கா கீறியே..ஈரோவா நடிக்க போறியா" - என கேட்ட அந்த பெண் பாக்கு போட்டு துப்பினாள்.

"நீ..நீங்க?" - என இழுத்தான் ஸ்ரீதர்

"அட இன்னாயா வேணும்..சொல்லி தோழா அத்த வுட்டு இப்டி இஸ்துனுக்கீறியே"

"உன்னை நான் பார்த்திருக்கன்..'அத்தை மகள் ஆனந்தி' பட ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்திருக்கேன்..நீ நீ  நடிக்க சான்ஸ் கேட்டு வந்த ராணி தானே?"

இதை கேட்ட அந்த பெண் சற்று நிலைகுலைந்து போனாள்.பிறகு பதிலளிக்க தொடங்கினாள்.

"அது அப்போ நைனா..இப்போ நான் ராத்திரில மட்டும் தான் ராணி.."

"நீ எப்படி இப்படி ஆனே ராணி?உன்னோட ஆல்பத்தை நீ அன்னைக்கு தவற விட்டுட்டு போய்ட்ட..உன்னோட அந்த அப்பாவித்தனமான முகமும் முழியும் இன்னும் கண்ணிலேயே இருக்கு எனக்கு..நான் துணை நடிகனா இருந்தப்போ உன்னை பத்தி ஒரு ரெண்டு மூணு தடவை விசாரிச்சிருக்கேன்..but கண்டுபிடிக்க முடியல..ஏன் இப்படி ஆய்ட்ட?" - திடீரென ராணியை இந்த கோலத்தில் கண்ட ஸ்ரீதர் ஏதோ ஒரு குழப்பத்திலேயே கேள்வி கேட்டான்.

இந்த நான்கு வருடங்களில் தன்னிடம் இந்த கேள்வியை ஒருவர் கூட கேட்டதில்லை.ஸ்ரீதர் உண்மையான அக்கறையுடன்  இப்படி கேட்கவே தன்னையறியாமல் கண் கலங்கி விட்டாள் ராணி.நடந்ததெல்லாம் ஒரு சில நிமிடங்கள் ராணியின் மனத்திரையில் ஓடின.சினிமா ஆசையில் அப்பாவின் பேச்சை மீறி யாரோ ஒரு மாமா பையலின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறிய அன்று பிடித்தது இந்த தரித்திரம். ஸ்க்ரீன் டெஸ்ட் என்கிற பெயரில் அன்று கண்ணப்பன் செய்த அட்டூழியங்கள் ராணியின் நினைவிற்கு வந்தன.

"அதாவது குட்டி..உன் பேரென்ன சொன்ன,அஆன் ராணி..நீ அழகா இருக்க ஆனா நீ ஹீரோயின் ஆகனமுன்னா இன்னும் நிறைய கத்துக்கணம்"  - என கூறி இடையில் கை வைத்த அன்றே கண்ணப்பன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை கொடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா? "நீ என்னை கவனிச்சிகிட்டன்னு வை உன்னை நான் கவனிச்சுக்குவன்" - என தன்னையும் அணைத்து விளக்கையும் அணைத்த அன்றே தன் வாழ்க்கையும் இருட்டாகிவிட்டதை எண்ணிய போது இப்போதும் கூட ராணியின் உள்ளம் பதறியது.இவை அனைத்தையும் ஸ்ரீதரிடம் சொல்லி முடித்தாள்.

"இவ்வளவு ஆனதுக்கப்புறமும் அவன் உனக்கு சான்ஸ் தரலையா?நீ போய் பாத்தியா அந்தாளை?"

"பாக்காம என்ன..போனதுக்குத்தான் அந்த கெழவன்,'நீ செஞ்ச வேலைக்கி நேத்திக்கே உனக்கு சம்பளம் குடுத்துட்டனே இன்னும் என்னன்னு' நக்கலா பேசி அனுப்சிட்டான்..

"போலீஸ்ல  complain பண்ண வேண்டியது தானே?"

"போலீசா..அட இன்னாபா நீ இம்மாம் பெர்சா வளந்துக்கிற..கொயந்தயாட்டும் பேசறியே..இங்க முக்காவாசி போலீஸ்காரனுங்க நம்ம customer தான்"

இதை கேட்ட ஸ்ரீதருக்கு ஆத்திரம் பொங்கியது..அதை கவனித்த ராணி,

"நீ எதுக்குய்யா டென்ஷன் ஆயினுக்கீர..எல்லாம் விதி..ஒழுங்கா அப்பா பேச்ச கேட்டு காலேஜ்ல படிச்சிருந்தா இந்நேரம் B.Ed படிச்சிருப்பேன்..இப்போ என் பொயப்பு இப்படி ஆய்போச்சி.."

"நீ ஏன் திரும்ப வீட்டுக்கு போல?"

"போவாம என்ன..அதுக்குள்ள எவனோ ஒரு ஊடுகொளுத்தி 'உன் பொண்ணு அந்த மாமா பைய சலீமோட ஓடி போயிட்டா'ன்னு எங்கப்பனாண்ட வத்தி வச்சிட்டான்..அந்தாளு ஒரே பேச்சா சொல்லிட்டான்,சினிமா படத்துல வர்ற மாதிரி.. "உன்ன நாங்க தல முழுகி ஒரு வாரம் ஆச்சு"ன்னு சொல்லிட்டான்..எங்க சித்தி மூதேவி ஒன்னு போதுமே,
"இந்த வீட்ல இன்னொரு படிக்கிற பொண்ணு இருக்கா.. அவ வாழ்க்கையையும் கெடுத்திராதே..இனிமே இந்த வீட்டு பக்கம் வந்துடாதே"ன்னு ஒரே போடா போட்டாளே பாக்கலாம்.."

"சரி ஒரு தபா நடந்துர்ச்சு,இனிமே என்ன நடந்தாலும் சரி,எவனாச்சு புடிச்சு எப்டியாச்சு ஹீரோயினி ஆய்டலாம்னு பார்த்தேன்..ஏன் ஆட்டமெல்லாம் பலிக்காம போச்சு..அதுக்கெல்லாம் ராசி வேணும்யா..அழகா இருந்தா மட்டும் பத்தாது.." - என சற்று உணர்ச்சி வசப்பட்டு கலங்கிய ராணி,திடீரென சுதாரித்து கொண்டு பேசலானாள்,

"என்ன பெத்தவன் கூட இம்புட்டு அக்கறையா பேசினதில்ல..நீ ஒருத்தன் தான் பேசியிருக்க..ஆமா நீ யாரு,இன்னா matteru எங்க வந்துக்கீற?"

"இல்லை என் படத்திலே ஒரு characterல  நடிக்க ஒரு பொண்ணு வேணும்..இங்க சான்ஸ் கேட்டு வர்ற பொண்ணுங்க தங்கியிருக்கிறதா ப்ரொடக்ஷன் மேனேஜர் சொன்னார்..அதான் வந்தேன்.."

"ஹ்ம்ம்..நீயாச்சு நடிக்க வைய்யா..ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்கிறேன்னு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கிராத.."

"ராணி இப்போவும் படத்திலே நடிக்கிற ஆசையிருக்கா உனக்கு?"

வெறியோடு தேடிய போது கிடைக்காத சந்தர்ப்பம்,வாழ்க்கையே திசை மாறி போன பின் கிடைத்தென்ன பயன் என நினைத்து கொண்டால் ராணி.ஆனாலும் நடிகையாகி விடடால் ஒரு சில வசதிகள் உண்டென்பதை உணர்ந்திராமல் இல்லை ராணி.அவள் உல் மனத்திலும் நடிகையாக வேண்டுமென்ற ஆசையும் அடியோடு அழிந்து விடவில்லை..

"இன்னாய்யா டமாஸ் பண்றியா"

"இல்லை நிச்சயம் உனக்கு என் படத்திலே நான் வாய்ப்பு தர்றேன்..ஆனா.."

"ஆனா இன்னாய்யா?"

"ஆனா 2 கண்டிஷன்..உனக்கு என்னோட அடுத்த படத்திலே தான் வாய்ப்பு தருவேன்..அதுக்குள்ள நீ இந்த தொழிலை நிறுத்தனம்"

"அப்போ சோத்துக்கு நா இன்னா செய்றதாம்..சோகா சொல்றியே தொயில நிறுத்துன்னு"

"ஏன் ஊருலகத்திலே வேற பொழப்பே இல்லையா என்ன?நீ இதுக்கு சம்மதிச்சா என்னோட அடுத்த படத்திலே உனக்கு நிச்சயம் ஒரு part உண்டு"

"சரி வாத்தியாரே..try பண்றேன்..இதெல்லாம் அம்மாம் சீக்கிரம் உட முடியாது..ஆனா கஷ்ட பட்டா சாதிச்சிடலாம்னு வச்சிக்கோ..ஒரு கேள்வி.."

"என்ன?"

"இந்த படத்திலே ஏன்னா வேசத்துக்குயா ஆள் தேடினிக்கீற?"

"Prostitute"

தேடி வந்த கதாபாத்திரம் கூட விலை மாது கதாபாத்திரமாகத் தான் வந்ததை எண்ணி சற்றே நொந்து கொண்டாலும், அவளுக்கு ஸ்ரீதரின் வார்த்தை நம்பிக்கயூட்டும்படியாக இருந்தது.

(தொடரும்...)  

Monday, January 23, 2012

மாஸ் மீடியா - 7

மாஸ் மீடியா -7
                                                            Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)


உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டே ஸ்ரீதர் தனக்கு தெரிந்த திரையுலக பிரமூகர்கள் மூலம் தனியாக படம் இயக்க வாய்ப்பு கேட்டு கொண்டுத் தானிருந்தான்.ஒரு படம் இயக்க கதை மட்டுமே போதுமென நினைத்து கோடம்பாக்கத்துக்கு வந்த ஸ்ரீதருக்கு, தன் எண்ணம் தவறு என்று விளங்கவே சில வருடங்கள் தேவைப்பட்டது. ஒரு திரைப்படம் வெற்றி பெற நல்ல கதை மட்டுமே போதாது,தரமான இசை,கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர்கள், சிறப்பான ஒளிப்பதிவு,சாமார்த்தியமான மார்க்கெட்டிங் என பல விஷயங்களும் எத்தனை அவசியம் என்பதை உணர்ந்தான் ஸ்ரீதர்.நேரடியாக உதவி இயக்குனராகாமல் பல வித இன்னல்களுக்கும் ஆளாகி, கோடம்பாக்கத்தில் இருக்க ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு,ஹீரோ,ஹீரோயின்,இயக்குனர், ப்ரொடக்ஷன் மேனேஜர் என அனைத்து தரப்பினருக்கும் டீ-காபி கொண்டுவருவது,ஆப்பிள் ஜூஸ் கொண்டுவருவது, கார் துடைப்பது போன்ற பல எடுபிடி வேலைகளும் செய்த பிறகு தான் இன்று உதவி இயக்குனராகி இருக்கிறான். இப்படி பல தரப்பினருடனும் பழகியதால் ஒவ்வொரு தொழிலாளியின் கஷ்டத்தையும் உணர்ந்திருந்தான்.

ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் வயதான ஹீரோவுக்கு ஒரு விதமான சண்டைக்காட்சிகள் அமைக்க வேண்டும், நடுத்தர வயதுள்ள ஹீரோக்களுக்கு ஒரு விதமாகவும் மிக இளம் வயதினராக இருப்பவர்களுக்கு ஒரு விதமாகவும் அமைக்க வேண்டும்.இதில் சில ஹீரோக்கள் தங்கள் 'ரசிகர்களை' திருப்தி படுத்த அந்தரத்தில் பறந்து கொண்டே வில்லன்களை அடிப்பது போன்ற காட்சிகளும் வேண்டுமென்று demand செய்வதுண்டு.ஒரு சில நடிகர்கள் அபாயகரமான சண்டைக் காட்சிகளிலும் கூட doupe இல்லாமல் தாங்களே நடிக்கவும் செய்வார்கள்.அப்படி doupe இல்லாமல் இந்த நடிகர் நடித்து விட்டார் என்று அதையே கூட ஒரு விளம்பரப் பொருளாக்கி அதை வைத்தும் publicity தேடும் கதைகளும் கோடம்பாக்கத்தில் இல்லாமல் இல்லை.ஒரு சில நடிகர்கள் 40 மாடி கட்டிடத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் risk  இல்லாமல் doupe போட்டு நடித்து விட்டு, "'doupe' போடாமல் நானே நடித்தேன் என்று சுய தம்பட்டம் அடித்து கொள்ளும் நகைச்சுவைகளும் இல்லாமல் இல்லை.

ஆங்கிலப்படங்களை அப்படியே தமிழில் உல்டா செய்யும் இயக்குனர்களும் இல்லாமல் இல்லை.அந்த படங்களில் வரும் வசனங்களைக் கூட அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்து படமெடுத்து விட்டு தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு உயர்த்தி விட்டதாக மார்தட்டி கொள்வதும் ஒரு வித  fashion இப்போது. ஒரு முறை தன் குருநாதர் சுகுந்தனே சில காட்சிகளை ஒரு கொரிய படத்திலிருந்து அப்படியே உல்டா செய்து தனது படத்தில் வைத்திருந்ததை கண்ட ஸ்ரீதருக்கு ஒரு வித disappointment. அப்போது இப்படித்தான் சுகுந்தன் பதிலளித்தார்,

"ஸ்ரீதர், 'The secret to creativity is knowing how to hide your sources.' - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. இதெல்லாம் ஒன்னும் தப்பில்லை.. இங்க யாருடைய கதையும் 100% உண்மையான கதை இல்லை."

"அதெப்படி?" - ஸ்ரீதர்

" There will be an inspiration behind every imagination. அந்த inspiration எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.ஒருத்தர் வாழ்க்கைல நடந்த சம்பவமோ,இல்லை நாம படிச்ச புஸ்தகமோ இல்லை நாம பார்க்கிற ஏதோ ஒரு விஷயமோ..இப்படி எதுவா வேணும்னாலும் இருக்கலாம்..ஒத்துக்குறியா ஸ்ரீதர்?"


ஸ்ரீதர், ஆமோதிப்பது போல் தலையசைத்தான்.

"அதே தான் இதுவும்.So எல்லாமே ஒரு வித inspiration தானே ஸ்ரீதர்" - இப்படி பேசி ஸ்ரீதரின் வாயை அடைத்து விட்டார் சுகுந்தன்.

இத்தனை விஷயங்களை பார்த்ததாலோ என்னவோ சினிமாவைப் பற்றி முழுவதும் புரிந்து கொண்டு விட்டதாக எண்ணினான் ஸ்ரீதர்.அவனுடைய வாய்ப்பு வேட்டை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு எதிர்பாராத செய்தி அவனுக்காக காத்திருந்தது.

ஸ்ரீதரின் Cellphone ஒலித்தது.அறிமுகமில்லாத நபரிடமிருந்து அழைப்பு.ஒரு வேளை Kotak Mahindra வங்கியின் சேமிப்பு திட்டத்தை பற்றி பேச, வரும் வழக்கமான இம்சையோ என நினைத்து அழைப்பை துண்டிக்க நினைத்தான்.ஆனால் அப்படிச் செய்யாமல் அழைப்பை ஏற்று பேசினான்.

பேசி முடித்த சில நிமிடங்கள் ஸ்ரீதர் ஆகாயத்தில் பறப்பதை போலவே உணர்ந்தான்.இது நிஜம் தானா? இல்லை இன்னும் உறக்கத்தில் தான் இருக்கிறோமா என கூட தன்னை கிள்ளி சோதித்து கொண்டான்.பெற்ற இன்ப அதிர்ச்சியால் சிறிது நேரம் செய்வதறியாமல் தவித்த ஸ்ரீதர் பிறகு சுதாரித்து கொண்டு சுகுந்தன் வீட்டில் இருக்கிறாரா என தெரிந்துகொண்டு,உடனே அவர் வீட்டுக்கு புறப்பட்டான்.

"என்னய்யா ஸ்ரீதர் இப்படி திடீர்ன்னு வந்து நிக்கிற? என்ன சமாச்சாரம்?" - சுகுந்தன்

"சார் ஒரு முக்கியமான விஷயம்.ரொம்ப சந்தோஷமான விஷயம் சார்.கண்ணப்பன் சார் எனக்கு phone பண்ணார்.."

"சீக்கிரம் சொல்லுப்பா என்ன விஷயம்..நல்ல விஷயம்னு வேற சொல்ற..கேட்கிறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன்"

"நான் எழுதி வைச்சிருந்த ஒரு கதைய கொஞ்ச நாளைக்கு முன்னாடி கண்ணப்பன் சார் கிட்டே narrate பண்ணியிருந்தேன்...அது விஷயமாத்தான் phone பண்ணாரு"

என்ன பேசியிருப்பார்கள் என ஒருவாறு ஊகித்துவிட்டார் சுகுந்தன்.ஆனாலும் ஸ்ரீதர் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தார்..ஸ்ரீதர் தொடர்ந்தான்..

"அவர் அடுத்து தயாரிக்கிற படத்துக்கு என்னையே டைரக்டரா போடறதா முடிவு பண்ணிட்டாங்களாம் சார்.. இத்தனைக்கும் என்ன recommend பண்ணது 'Silver Star' வாசு தானாம்..கூடிய சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிக்க போறாங்களாம்..என்னை நாளைக்கு அவரோட officeல வந்து பார்க்க சொல்லியிருக்காரு.."

"தனியா படம் டைரக்ட் பண்ண போறியா?" - சுகுந்தன் உண்மைலேயே அதிர்ச்சி அடைந்துத் தான் போனார்.

"ஆமாம் சார்..திடீர்னு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சதும் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை..எனக்கு சினிமாவிலே நுழையறதுக்கு pass வாங்கிக்கொடுத்தவரு நான் பெருசா மதிக்கிற காதர் பாய்..ஆனா சினிமான்னா என்னன்னு கத்து கொடுத்த குரு நீங்க தான் சார்..அதான் உங்க கிட்டே ஆசீர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்"

"உனக்கு சினிமா பத்தி என்ன தெரியும்?ஒரு படம் தனியா டைரக்ட் பண்றதுக்கு தேவையான அனுபவம் உனக்கு  இல்லை..நீ இன்னும் நிறைய கத்துக்கணம்..அதுவும் கண்ணப்பன் தயாரிக்கிற படத்துலயா டைரக்டரா அறிமுகமாகுற?இது நல்லதுக்கே இல்லை" - இப்படித் தான் சொல்ல நினைத்தார் சுகுந்தன். ஆனால் தான் இதைச் சொன்னால் ஸ்ரீதர்,கிடைத்த வாய்ப்பை தான் கெடுப்பதாகவும்,ஸ்ரீதரின் முன்னேற்றத்தை தடுப்பதாகவும் தான் எண்ணிக்கொள்வான்.அதனால்,

"ரொம்ப சந்தோஷம் தம்பி.நீ நிச்சயம் பெரியாளா வருவா..உனக்கு என்னோட ஆசீர்வாதம் எப்போவும் உண்டு..வாழ்த்துக்கள்"

ஸ்ரீதர்,சுகுந்தனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.தட்டி கொடுத்து எழுப்பினார் சுகுந்தன்.விடை பெற்று சென்ற ஸ்ரீதர் வாசலை அடைந்த போது,திடீரென சுகுந்தன்,

"ஸ்ரீதர்,இந்த படத்துக்கு உன்னை யாரு recommend பண்ணதா சொன்னே?"

"'சில்வர் ஸ்டார்' வாசு சார்..இந்த படத்துக்கு ஹீரோவும் அவர் தான்"

                                                     ***************************

குடித்து விட்டு படுக்கையறையில் விரக்தியாக விழுந்து கிடந்தான் சரண்.இப்போது அவனிடம் மிச்சமிருப்பது இந்த வீடும் தன்னுடைய காரும் மாட்டும் தான்.அரசியல் ஒரு மனிதனின் வாழ்க்கையை பல விதத்தில் திசை திருப்பும் வல்லமை கொண்டது.அதுவும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரென்றால் கேட்கவே வேண்டாம்.அரசியலுக்கு வந்தாலும் குற்றம் வராவிட்டாலும் குற்றம்.அரசியல்வாதி ஆதரித்தாலும் சரி, எதிர்த்தாலும் சரி,ஒரு வித ஆபத்து நம்மை நெருங்குகிறது என்றே பொருள்.கடும் புயல் ஏராளமான நாச காரியங்களை செய்த பிறகு நிலவும் ஒரு வித அசவுகரியமான நிலை தான் இங்கும் நிலவுகிறது.தர்மராஜ் தனது தந்தைக்காக பிரச்சாரத்திற்காக அழைத்த போது அதை மறுத்து விட்டான் சரண்.ஆனால் தர்மராஜோ விடாமல் வற்புறுத்த தொடர்ந்து சரண் மறுக்க,வாக்குவாதம் எல்லை மீறி சென்று விட்டது.இருவருக்கும் இடையில் நடந்த இந்த சொற்போரால் கடும் பாதிப்புக்கு உள்ளானதென்னவோ சரண் தான்.

தன்னுடைய 'பன்னீர் செல்வன்' படம் தர்மராஜ் தரப்பால் கிடப்பில் போடப்பட்டது.சோழ ராஜாவாக தான் நடிக்க இருந்த 'அதிசய கனவு' படமும் பகல் கனவாகிவிட்டது.படம் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளது என்று பரவலாக பேசி கொண்டாலும்,இனி அந்த படம் தொடர்வதற்கு எந்த ஒரு சாத்தியக்கூறும் இல்லை.தர்மராஜோ அரசியல்வாதி,தனது புத்தியை காட்டி விட்டான்.

அது மட்டுமில்லை ஒரு வேளை வேற படம் ஒத்துக்கிட்டாலோ இல்லை இந்த படத்திலே நடிக்க மறுத்தாலோ படத்துக்காக ஆன மொத்த செலவும் வட்டியோட திருப்பி கொடுக்கனம்


இப்படி எழுதியிருந்த ஒப்பந்தத்தில் சரண் கையெழுத்து இட்டதால் அவனிடமிருந்து பல கோடி ருபாய் பிடுங்கி விட்டது தர்மராஜ் தரப்பு.மேற்கொண்டு சரனை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படமெடுக்க முன்வராத அளவிற்கு தர்மராஜ் தரப்பு வேலை பார்த்து விட்டது.தற்செயலாக சரணின் மற்ற சில வியாபாரங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.தன்னுடைய சொத்துக்கள் பலவற்றை விற்றுத் தான் அவற்றிற்கு ஈடு கட்ட வேண்டியிருந்தது.சுருக்கமாகச் சொன்னால் இன்று சரண் ஒரு 'மாடி வீட்டு ஏழை'.


இது போதாதென்று சரணுக்கு பிரபாவதி என்ற நடிகையுடன் இருந்த தொடர்பையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் தர்மராஜ்.அந்த பிரபாவதியை தனது பக்கம் சேர்த்து கொள்ள சில லட்சங்கள் செலவழித்த தர்மராஜ், அவளை வைத்தே சரணுக்கு இருந்த மதிப்பை முழுவதுமாக சீர்குலைத்தான் .இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில படங்களை, 'மூன்றாவது கண்' பத்திரிக்கையின் மூலம் வெளியிட செய்தான் தர்மராஜ்.இது போன்ற படங்களை வெளியிடுவதையே தொழிலாக கொண்ட அந்த பத்திரிகை,இந்த புகைப்படங்களை வைத்து இவர்களுக்குள் இருந்த உறவை எத்தனை ஆபாசாமாக சித்தரிக்க முடியுமோ அத்தனை ஆபாசாமாக சித்தரித்து ஒரு சில கட்டுரைகளை வெளியிட்டது.இது சரண் தான் செய்தான் எனவும்,தான் மிகவும் நம்பிய சரண் தன்னை ஏமாற்றி விட்டான் எனவும் பத்திரிக்கைகளில் கண்ணீர் மல்க பேட்டியளித்தாள் பிரபாவதி.இந்த பேட்டிக்கு பின்னணியில் இருந்ததும் தர்மராஜ் தான்.


பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்து,மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தையும் இழந்து,அடுத்து எந்த பட வாய்ப்புகளுமின்றி ஒரு ஜடம் போலத்தான் இருந்தான் சரண்.வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததைப் போல,பிரபாவதியுடன் தனக்கிருந்த தொடர்பு வெளிப்பட்டதால், மீதமிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் விட்டது. இன்று சரண் ஒரு தனிமரம்.அவனுக்கு இப்போது இரண்டே இரண்டு நண்பர்கள் தான்.ஒன்று மது மற்றொன்று விவேக், ஆனால் இவர்கள் இருவரில் சரண் தனக்கு மிக ஆறுதலாக கருதுவது மதுவைத்தான்.உண்மையில் சரணுக்கு நன்மை செய்வதென்னவோ விவேக் ஒருவன் தான்.அனைத்தையும் சரண் இழந்து விட்டபோதிலும் இன்று சரணிடம் இருப்பது தன் வீடு ஒன்று தான்.அதை காப்பாற்றிய புண்ணியம் விவேக்கைத் தான் சேரும்.இப்போதும் கூட தன்னால் இயன்ற வரை சரணுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.நாய்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் நன்றி உணர்வு உண்டென்று விவேக்கைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

"பாஸ் பாஸ்..எழுந்திறீங்க..இங்க பார்த்தீங்களா?இந்த நியுச?" - அரக்க பறக்க ஓடி வந்தான் விவேக்.சற்றும் அலட்டி கொள்ளாமல் எழுந்தான் சரண்.'தண்ணீரில் மிதப்பது' என்று கூறுவார்களே,அது சரணுக்குத்தான் பொருந்தும்.முழு மப்பில் எழுந்து உட்காந்தான்.

"என்னடா நியுசு..ஏன் இப்படி பறக்கிற,நிம்மதியா தூங்கக்கூட விடாதிங்க.." - ஏதோ எரிச்சலுடன் பேசினான் சரண்.

"பாஸ் உங்க அதிசய கனவு படத்த drop பண்ணிட்டாங்க.." - என தொடங்கிய விவேக்கை இடைமறித்து

"அது தான் எப்போவோ தெரியுமே..என்னவோ புது விஷயம் மாதிரி பேசற..இத சொல்லவா என் தூக்கத்தை கெடுத்த.."

"இல்லை பாஸ்..முழுசா கேளுங்க..உங்க படத்தை drop பண்ணிட்டு இப்போ திரும்ப தர்மராஜ் கம்பனிக்கு நீலகண்டன் ஒரு படம் டைரக்ட் பண்றாராம்.."

"அவன் எக்கேடு கேட்டு நாசமா போகட்டும்..இப்போ அதுக்கென்ன"

"அதுல அந்த தர்மராஜே ஹீரோவா நடிக்கிறானாம்..என்ன அநியாயம் பாஸ் இது"

"பரதேசி நாய்..அவன் மூஞ்ச பாரேன் விவேக்..எப்படி இருக்குன்னு" - ஆத்திரமும் விரக்தியும் கலந்த ஒரு சிரிப்புடன் சரண் தொடர்ந்தான்,

"எரிஞ்சிட்டிருக்கிற பொணத்தை(பிணத்தை), எழுப்பி அதுக்கு powder அடிச்சு விட்டா எப்படி தெரியுமா இருக்கும், இல்லை எப்படி இருக்கும் தெரியுமா? இதோ பேப்பர்ல சிரிசிகிட்டே pose கொடுத்திருக்கான் பாரு இந்த எச்சக்கலை பையன் இவன மாறித்தான் இருக்கும்..ஏன்டா இவனுங்க எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே பட மாட்டானுங்கள டா..கையில காசு,ஆட்சி, அதிகாரம் எல்லாம் இருக்குன்னு கண்ட கழிசாட பசங்களும் ஹீரோ ஆயிடறாங்க.."

"பாஸ் ரிலாக்ஸ்.." - சரனை சமாதானப்படுத்த முயன்றான் விவேக்,பலனில்லை..மீண்டும் மது அருந்திவிட்டு தொடர்ந்தான் சரண்,

"இந்த புறம்போக்கு நாயிக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியுமா விவேக்?இவனையும் வைச்சு படமெடுக்க ஒத்துகிட்டானே அவன சொல்லனம்..இல்லை பாவம் அவன் என்ன செய்வான்..இந்த கம்மனாட்டி பைய மிரட்டியிருப்பான்..ஒரே வார்த்தைல சொல்லட்டுமா? இந்த தர்மராஜ் ஒரு 'genuine bastard'..தா..." - வெறுப்பின் உச்சத்துக்கே போன சரணை,விவேக் இடைமறித்து,

"பாஸ் cool down பாஸ்..நீங்க தர்மராஜை இப்படி திட்டுவீங்கன்ற காரணத்துக்காக இதை நான் உங்க கிட்ட சொல்லலை..நீங்க நடந்ததையே நினைச்சி இப்படி வீட்டுக்குள்ளயே கிடந்தீங்கன்னா அதனால உங்களுக்கு ஒரு நல்லதும் நடக்க போறதில்லை"

"இல்லைன்னா மட்டும்..அட போயா"

"பாஸ் நீங்க கொஞ்சமாச்சு வெளி உலகத்தை பார்க்கணம்னு சொல்றேன்..உங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு எந்த தகுதியும் இல்லாதவன் தான் நான்..ஒத்துக்கிறேன்...ஆனா உங்க நண்பனா சொல்றேன்,தயவு செய்து நாலு இடத்துக்கு போயிட்டு வாங்க..எவ்வளவு பிஸி schedule இருந்தாலும் கூட நீங்க இளையராஜாவோட திருவாசகம் சிம்போனிய கேட்காம ஒரு நாள் கூட  இருந்ததில்லை..திரும்பவும் இதிலே எல்லாம் கவனம் செலுத்தனம்.. இது என்னோட request" - அடக்கமாக பேசி முடித்தான் விவேக்..

மீண்டும் மது அருந்தத் தொடங்கினான் சரண்.


(தொடரும்...)