Friday, September 14, 2012

100 - It's a century!!!

This is my 100th blog post.To be honest this may not appear a great achievement.Anyway,in my opinion, it is definitely a small achievement.So now don't compare me with people who has written thousands of articles in their blogs/websites.As this is my 100th post I will try to give some explanations through this post.And if you have any questions,you can very well post them in the comments section.I am ready to answer.

Initially I used to blog about some funny incidents that happened in my life.Later on,I realized, considerable number of people follow blogs.I wanted to write some serious posts.Some of my friends too encouraged me to go for some serious posts.I started writing articles like this and this. Then I decided,it is possible to create an awareness through blogs.So I started writing political posts and someother serious articles.But it created an image to my blog like its a serious blog.Only some regular followers read my articles.The people to whom I wanted to reach out never bothered to read those serious articles.In-fact some people said that my blogs are too preachy and serious,so they are not interested in it.

That made me think.Being serious will not help all the time.So I tried making my blog colorful(through my articles not in design).To an extent I succeeded in it.I wrote some articles about love,some love stories etc. Infact I even went to the extent of writing a 10-part story.But this too didn't produce the expected outcome. What happened is those who are interested in current affairs,politics read those posts and those who expected some light hearted,funny articles restricted themselves with that.First of all I have to thank all you readers.Your encouragement makes me think more and write.Am not a great writer(atleast till now),but still people spare time for reading my blogs.It's a pleasure.Even if you bash me for writing in bad English or accuse me for being partial,it will only make me happy.My only request is - don't restrict yourselves with articles of a particular category.

I mentioned about love stories.Again there is a problem in writing love stories.Whenever I publish a love story,there are people who thinks that the story is also my personal life experience.Come on guys,I have written some 6 love stories in this blog itself.Do you people really think I have come across so many loves in my life?To be honest I am not worth for single love only :D.People understand this,I never use blog as a medium to seek personal vengeance or to express my feelings to people surrounding me.Every imagination will have some inspiration.But that inspiration need not necessarily come from my life or my friends' life. Moreover there are certain common qualities for every love.So while writing a love story,if something resembles a particular reader's character or experience,understand people, its purely co-incidental.

This is a problem being a blogger.If the same story gets published in a paper or book,none will(can) question the writer.In fact, people will feel proud saying the story is based on them.

This is my favorite(inspiration) writer Sujatha's answer to a similar question.

எழுத்தின் ஊற்றுக்கண் என்ன அனுபவமா,ஞாபகமா?உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் என்ன?

மறக்க முடியாத சம்பவங்களைத் தான் எழுதுகிறோம்... பெயர் மாற்றி,கற்பனை முலாம் தடவி, இடம் , காலம் மாற்றி, அதேபோல் எழுத்தின் ஊற்றுக்கண் மனதின் அடித்தளத்தில் படிந்த சம்பவங்கள், காட்சிகள் , காயங்கள் எல்லாமே அவை எப்போது எந்த வடிவத்தில் எந்தக் கலவையில் வெளிப்படுகின்றன என்பது எழுத்தாளனுக்கே சரியாகத் தெரியாது.

[Translation : What's the starting point of writing, is it experience or memories?Unforgettable incidents in your life?

We write only unforgettable incidents,by changing name,place,period etc..Some incidents,scenes, experiences etc will lie deep inside the heart.Even a writer will not know in what way it will come out].

He is perfectly right.

Sometimes I have used the corporate atmosphere and some known places in my story.Describing a known place is easy.That's the only reason for using known railway station names, corporate atmosphere etc. 


I got the above question-answer from his book 'Katradhum Petradhum'.It was kind of an auto-biography by him,though not exactly.He has shared so many information in that book and also has described some of his personal life incidents too.In fact,he has related the above answer too with some incidents that happened in his life.His younger sister died within days after her birth, while Sujatha and his family were traveling in a train. He says he doesn't remember anything about the incident and he came to know about this only through his mother,only after he became a matured young man.And he also mentions another incident.His first child was a girl child,which again died days after its birth.He related this with an incident in his novel Kanavu Thozhirchalai(கனவுத் தொழிற்சாலை).In this novel a kid, Louis Dominic Arumairasan,will die within days(18 days) after its birth.

This is what he wrote about the incidents happened in his life and the one that came in his Kanavu Thozhirchalai :

செத்துப்போன தங்கைக்கும் மரித்த மகளுக்கும் பல வருடங்கள் கழித்து ஒரு அழகான கிறித்தவ நல்லடக்கம் செய்தபின்தான் என் மனதின் அடித்தளத்தில் இருந்த அந்தச் சோகம் வடிந்தது.


Katradhum Petradhum is a informative book.Kanavu Thozhirchalai is a gripping and touching novel.I would recommend everyone to read these books.I would like to mention some other books too. 

The Miracle by Irving Wallce - it deals with the miracle cures happening in Lourdes.The story is kind of, based on the existence of God,excellent story.

Ponniyin Selvan by Kalki - historical novel.It has 5 parts and its centered around the great Chola king Raja Raja Cholan.Brilliant novel,

Irumbu Kuthiraigal by Balakumaran - the story is about Lorry business.The hero's horse poems(Kuthirai Kavithaigal) will be absolutely brilliant.

 Vidivadharkul Vaa by Sujatha, - this is based on the mandaikkadu riots between Hindus and Christians. Long back I shared a dialog from this book in facebook.This is the dialog, "is he a Hindu or Christian?", for which the hero replies,"he is dead".Hope this dialog is enough to assess the quality of the book.

Parthiban Kanavu by Kalki - another historical novel,this time centered around the strongest Pallava king Narasimmavarman.

24 roobaai theevu by Sujatha - this novel describes the life of a honest reporter.A fast packed action-detective story.Don't miss it.

I can share even more books,but then,I can't end this article properly.I would like to write an exclusive article about books and reading habit in particular.But to do this,I should read more.So when I feel I am eligible to write such a post,I will do it immediately.

By reading a good book we can get some peace of mind.The book may be of any genre,it may be humor,crime novel,horror,romance etc.Reading will give the much needed peace of mind to us.When I say reading books,what comes to my mind is people's instant enthusiasm towards books. I admit that I haven't read so many books and it is not possible for everyone to read all the books.Time factor has to be considered.But what really irks me is whenever people see books that you have,they will pretend as if they were waiting for it for a long time.And once you give the book to them,they will forget it.Leave alone the question of returning the book.What's the purpose of sharing a book?To have some discussion about its content.Such discussions will give immense pleasure.None understands this.

I share my blog links too, with my friends, for the same reason.I have asked some friends to read my blogs repeatedly(say 2 or 3 times).But if they are not going to read my blogs or articles,I don't mind actually.The reason is,if a product is worthy,it will attract consumers.Same way,if people are not interested with my blog posts,the fault lies with me.It will be highly unfair to blame people who don't read my blogs.The reason for mentioning this here is,sometimes people say I am torturing them by asking to read my blogs :D.When I started hearing such comments,I have almost stopped asking anyone personally, to read my blogs(though some exceptions are there).. As I mentioned above,if my articles are really worthy and if it syncs with people's taste,they will read it..Though a product is good,it needs some promotion..With proper promotion,the demand for a GOOD PRODUCT will increase. And that's the reason for sharing my links in facebook,twitter,google talk,orkut etc.

All said and done,I have completed 100 blog posts.Not all the articles written by me might be perfect. Still I have some followers who go through all my updates and provide a proper criticism.I would like to thank such people.Your support means a lot to me. I have given some explanations through this post.I didn't do this to hurt anyone. These are all just clarifications from my end.

And am ending this post with this.As I said in the beginning,if anyone has any question/questions, please go ahead and ask me.I will answer you..If you are going to ask anything personal :D,leave your mail id in the comments section,because personal answers will only be sent to mail.







Wednesday, September 12, 2012

சொன்னது நீ தானா ? - 3


Pic: Source

முதல் பாகத்தை இங்கே படிக்கலாம் (click here)

இரண்டாம் பாகத்தை இங்கே படிக்கலாம் (click here)


 அன்று தர்ஷனும் காயத்ரியும் அலுவலகத்தில் அவர்கள் வழக்கமாக அமரும் மரத்தடியில் அமர்ந்திருந்தார்கள்.  காயத்ரி சற்று ஆத்திரத்துடனே இருந்தாள்.

"ஹேய் என்ன ஆச்சு உனக்கு..மத்தியானம் லஞ்சுலையும்(lunch) உம்முன்னே இருந்தே..என்ன பிரச்சினை உனக்கு? சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்.." - சற்று விளையாட்டாகப் பேசி காயத்ரியை சகஜ நிலைக்குக் கொண்டு வர நினைத்தான் தர்ஷன்.

"கரெக்டு..நீ தீர்த்து வைச்சிடுவ..அதிலே எந்த சந்தேகமும் இல்லை..என்ன ஏதாவது சினிமா பார்க்கிறப்போ மட்டும் என் பிரச்சின எனக்குன்னு விட்டுடுவ..அப்படித் தானே?"

"Sigh..இன்னும் உனக்கு அந்தக் கோவம் தீரலையா..actualla அன்னைக்கி நான் வரலாம்னு  தான் நினைச்சேன்.."

"ஆனா படம் முடியல அதானே? இடியட்..அன்னைக்கி அவர் வராம இருந்திருந்தா என் நிலைமையை யோசிச்சிப் பாரு? பைத்தியக்காரி மாதிரி ரோட்ல நின்னுட்டிருந்திருப்பேன்..உன்னை ஒரு friendன்னு நம்பிக் கூப்பிட்டேன் பாரு.. என்னைச் சொல்லனம்"

"காயு உன் கிட்டே ஒன்னு சொல்லவா அன்னைக்கி ராத்திரி நான் வந்தேன்..உன் கிட்டே சும்மாச் சொன்னேன் தியேட்டர்ல இருக்கேன்னு..குளிச்சிட்டு கிளம்பி வர கொஞ்சம் நேரம் ஆயிடிச்சு.."

"வாய் பூரா பொய்யி..அந்த ராத்திரி நேரத்திலே இங்க நான் தனியா நிற்கிறதோட,உனக்குக் குளிச்சிட்டு ஸ்மார்டா  வர்றதுத் தான் முக்கியமாப் போச்சா?"

"நான் என்ன சொல்ல வர்றேன்னா காயு.."

"வெயிட் வெயிட்..இப்போப் புரியுது..அன்னைக்கி ராத்திரி குடிச்சிருந்தியா?"

ஆம் என்பது போல தர்ஷன் தலையசைத்தான்,அசடு வழிய நின்றான்,பிறகு தொடர்ந்தான்,

"இல்லை நான் பண்ணதுத் தப்புத் தான்..அன்னைக்கி ராத்திரி உனக்காகத் தான் அந்த பனியிலேக் கூட குளிச்சிட்டு வந்தேன்..வந்ததும் சாரி கேட்டு சமாதானப்படுத்திடலாம்னுத் தான் நினைச்சேன்..ஆனா அதுக்குள்ளே.."

காயத்ரி நம்பிக்கையில்லாமல் அவனை முறைத்துப் பார்க்க,

"என்ன காயு அப்படிப் பார்க்கிற,நான் சொல்றதிலே நம்பிக்கை இல்லையா? உனக்கே தெரியும் எனக்கு உன்ன எவ்வளவுப் பிடிக்கும்னு..உன்னை விட எனக்கு வேற என்ன முக்கியம்?"

காயத்ரி குழப்பத்துடன் பார்க்க,

"ஏன் காயு,நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாதா..? உனக்காகத் தானே காயு நான் பைக்ல, கார்ல வராம,பஸ்ல வந்தேன்,நீ பிடிக்கலைன்னு சொல்லித் திட்டினதாலேத் தானே 4 மாசம் கஷ்டப்பட்டு அந்நியன் விக்ரம் மாதிரி வளர்த்த முடிய கட் பண்ணினேன்..நீ எப்போ smoke பண்ற பசங்களைப் பிடிக்காதுன்னுச் சொன்னியோ அப்போவே சிகரட் பிடிக்கரதையே நிறுத்திட்டேன்..கொஞ்சம் டைம் கொடு குடிக்கறதையும் விட்டுடுவேன்.."

இதை சற்றும் எதிர்பாராத காயத்ரி அதிர்ந்துப் போனாள்..

"என்ன சொல்ற நீ?" - என காயத்ரி அலற,

படு ரொமான்டிக்காக முட்டிப்போட்டு,"I லவ் யு காயு.." - என்றான். காயத்ரி நிலைகுலைந்துப் போனாள்.பதில் பேச முடியாமல் திகைத்தாள்,ஓரளவு சமாளித்துக் கொண்டு,

"தர்ஷன்,என்னப்பா நீ இப்படி எல்லாம் பண்ற? இது எப்படி..இல்லை இது சரியா வராது..நான் சொல்றதக் கேளு" - காயத்ரி பேச முடியாமல் தடுமாறினாள்,

"என்ன காயு,வீட்டை நினைச்சி பயப்படுறையா?வீட்டிலே ஒத்துக்க மாட்டாங்க அதானே உன் பிரச்சினை?"

"ஆமாம்..ஆனா அது மட்டுமி..." - காயத்ரி பேசத் தொடங்க,

"இங்கே பாரு காயு,நீ இப்போவே இதுக்கு பதில் சொல்லனம்னு இல்லை.. Take your own time.. ஆனா நல்லப் பதிலாச் சொல்லு ப்ளீஸ்..நீ இல்லாம என் lifeல ஒண்ணுமே இல்லை..புரிஞ்சிக்கோ"

தர்ஷனின் இந்தச் செயல் ஏற்கனவே கடும் குழப்பத்திலிருந்த காயத்ரிக்கும் மேலும் மன உளைச்சலைக் கொடுத்தது. தன வேலைகள் பலவற்றை தர்ஷனைச் செய்யச் சொல்லிக் கேட்டிருக்கிறாள்.தனக்கொரு PPT presentation தயார் செய்யக் கூட தர்ஷனின் உதவியைத் தான் நாடினாள்.இப்படி அவர்களுக்குள் நிகழ்ந்த பல நிகழ்வுகள் அவள் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தன .. வேறு சில நினைவுகளும் காயத்ரியை வாட்டி வதைத்தன..

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..........." - என வெறி பிடித்தவளைப் போலத் தூக்கத்தில் கத்தினாள். அலறி அடித்துக் கொண்டு வந்த அவளது அம்மாவும் பாட்டியும் காயத்ரியை சமாதானப்படுத்தினார்கள்.

சில நாட்களாகவே பிரமைப் பிடித்தவளைப் போலிருந்த காயத்ரிக்கு அவளது அப்பா மேலும் ஒரு அதிர்ச்சி தரும் செய்தியைச் சொல்ல,காயத்ரிக்குப் படபடப்பு அதிகமாயிற்று.அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.நிலைமை மோசமடைந்து விட்டது என்பதை உணர்ந்தாள்.

ரமேஷ் சொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.

இப்படி ஒரு situationல கூட என்னைக் கூப்பிடனம்னு தோனலைல உனக்கு? 

மின்னல் வேகத்தில் செயல்பட்டாள்.


                                                                             ***



ழக்கமாக அவர்கள் சந்திக்கும் தேநீர் கடையருகே(டீக்கடை) நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் ரமேஷும் பிரேமும்.

"என்ன டா,அன்னைக்கி ராத்திரி அந்தப் பொண்ண பத்திரமா வீட்டிலே விட்டுட்டு வந்துட்டியா?" - பிரேம்

"ஹ்ம்ம்..ரொம்ப தேங்க்ஸ் டா..நல்ல நேரத்திலே வந்து பைக் தள்ளிட்டுப் போனே..உன் ரூம்மேட்டுக்கும் என் சார்பிலே ஒரு நன்றி சொல்லிடு மச்சி" - இதையும் கூட சற்று வருத்தமான குரலில் தான் ரமேஷ் சொன்னான்.

"ஏன் இன்னும் ஒரு பத்து நாள் கழிச்சி நன்றி சொல்றது தானே..பரதேசி..அவ கிட்ட என்ன introduce பண்ணியா டா நீ..ராஸ்கல் கை குடுத்தா முறைக்கிறே நீ"

"அட ஏன் டா நீ வேற..அவ என்னையே புதுசா அறிமுகமானவன் மாதிரித் தான் பார்க்கிறா..இந்த லட்சணத்திலே இவர வேற அறிமுகப்படுத்தணமாம்... நிலைமை தெரியாம நீயும் ஏண்டா கடுப்பேத்தற?"

"என்ன தான் டா உன் பிரச்சினை? அவ கூட எப்படியும் ஒரு 1 hour தனியாத் தானே இருந்தே.. மனசு விட்டு பேச வேண்டியது தானே..இப்படி புலம்பியே தீர்க்கிறதோட,கிடைச்ச சந்தர்ப்பத்திலே அவ கூட சந்தோஷமா பேசுவியா அதை விட்டுட்டு"

"என்ன டா பேசச் சொல்றே?அவ கிட்டே பேசறதும் அதோ இருக்கே காம்போண்டு சுவரு,அது கிட்டே பேசறதும் ஒன்னுத் தான்"

"எதுக்கு டா இவ்வளவு வெறுப்பா பேசற?"

"பின்னே என்ன டா..ராத்திரி அரை மணி நேரமா ரோட்ல தனியா நிற்கிறா,எனக்கு ஒரு கால் பண்ணலாம்னு கூட தோணலை..என் கூட அவ சரியாப் பேசறது கூட இல்லை டா...அவ என்னை லவ் பண்ணலைன்னாக் கூட பரவாயில்லை டா,ஒரு சாதாரண ப்ரெண்டா(friend) கூட மதிக்க மாட்டேன்கிறா.. அப்படி என்ன அவளுக்குக் கெடுதல் பண்ணிட்டனோ"

"ரெண்டு வாட்டி ப்ரபோஸ் பண்ணியே அதோடவா"

"இரண்டாவது தடவ நடந்ததுக்கப்புறம் அவளுக்கு ஒரு சின்ன தொந்தரவுக் கூட தரலை டா நான்"

"ஹ்ம்ம்..எனக்கென்னவோ இது வேற மாதிரித் தோணுது டா..ரெண்டு வாட்டி உன் காதலை ரிஜக்ட் பண்ணதாலையோ என்னவோ,அவ கொஞ்சம் கூச்சப்படரான்னுத் தோணுது..அவளுக்கு உன்னைப் பிடிக்காம இல்லை டா..கடைசியா இன்னொரு வாட்டி ட்ரை பண்ணிப் பாரேன் மச்சி"

"சில விஷயம் எல்லாம் ஒரு வாட்டி போனா போனது தான்..என் பாழாப்போனக் காதலும் அப்படித்தான்"

"சரி..இப்போ அவளே உன் கிட்டே வந்து உன்ன லவ் பண்றதா சொன்னா ஒத்துக்க மாட்டியா என்ன?"

"நான் அப்படிச் சொல்லலை டா"

"அசடு வழியுதே மூஞ்சிலே.."

"ஆனா நீ சொல்றது கனவிலே கூட நடக்காது நண்பா..அவ என் கூட சேர்ந்த மாதிரி 10 நிமிஷம் பேசறதே அபூர்வம்... அதனாலே நீ சொல்றது நடக்கறதுக்குச் சான்ஸ் இல்லை மச்சி"

"Lifeல எல்லாத்துக்கும் ஒரு turning point வரும் டா"

பேசிக்கொண்டே இருக்க,திடீரென ரமேஷின் மொபைல் ஒலித்தது..காயத்ரி தான் அழைப்பது..

"ரமேஷ், evening ஒரு ஆறு மணிக்கு நம்ம காலேஜ் கிரௌண்டுக்கு(ground) வாங்க ப்ளீஸ்..உங்க கிட்டே முக்கியமான விஷயம் பேசணம்" - எதா படபடப்புடனும் குழப்பத்துடனும் பேசினாள் காயத்ரி.

"என்ன விஷயம்?" - ரமேஷ் கேட்க முற்பட,

"நேரிலே வாங்க..மறந்துடாதீங்க..காத்துக்கிட்டிருப்பேன்" - எனச் சொல்லி அவசராமாக அழைப்பைத் துண்டித்தாள்.

"இந்த phone call கூட உன் காதலுக்கு ஒரு turning பாயிண்ட்டா இருக்கலாம்"

பிரேம் இப்படிச் சொன்னாலும்,ரமேஷ் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை மட்டும் உணர்ந்தான்.


                                                                             ***


சென்னை அரசுப் பேருந்து ஒன்றில் வந்துகொண்டிருந்தாள் காயத்ரி. நெருக்கடியான சூழ்நிலை.உள்ளுக்குள் ஒரு வித குற்ற உணர்ச்சி கலந்த பயம்.ஆனால் இது தான் முடிவெடுக்க வேண்டிய தருணம்.ஓய்வின்றி யோசித்துக் கொண்டிருந்தது அவளது மூளை.

காயத்ரி நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளைச் சந்திக்க வருமாறு கூறியது,ரமேஷுக்கு ஒரு வித சந்தோஷத்தைக் கொடுத்தாலும்,இந்த கல்லூரி மைதானம் அவனுக்குள் ஒரு பீதியைக் கிளப்பியது.இங்கு தான் இரண்டு முறையும் காயத்ரியிடம் தனது காதலைச் சொன்னான்,இரண்டு முறையும் மறுத்து விட்டாள்.இதே இடத்திற்கு சம்மந்தமே இல்லாமல் வரச் சொன்னதற்கான கரணம் என்னவாக இருக்குமென ரமேஷ் யோசித்துக் கொண்டிருக்க,

"இதை இந்த இடத்திலே வைச்சிக் கொடுக்கிறதுத் தான் சரின்னு பட்டது.வந்துடுங்க எனக்கு திடீர்னு marriage fix ஆய்டிச்சு" - காயத்ரி பத்திரிக்கையை நீட்ட,ரமேஷ் உறைந்துப் போனான்.

திடீரென அவனது மொபைல் ஒலித்தது,காயத்ரி தான் அழைப்பது."ச இங்கயுமா கனவு வரும்..தூ தூ.."

"ஆமாம் காயு,நம்ம வழக்கமா உட்கார்ற மரத்தடியிலேத் தான் இருக்கேன்..வா வா..ஒன்னும் அவசரம் இல்லை"

கையில் மொபைலுடன் வந்தாள்.பச்சை நிறச் சுடிதார் அணிந்திருந்தாள்.அதிக ஒப்பனைச் செய்து கொள்ளவில்லை என்பது அவளுடைய எளிமையானத் தோற்றத்திலிருந்துத் தெளிவாகத் தெரிந்தது. அவளின் படபடப்பை உணர்ந்த ரமேஷ்,சுற்றி வளைத்துப் பேசாமல்,பக்குவமாக,அன்பாகக் கேட்டான்,

"என்ன காயு..எதுக்கு இவ்வளவு படபடப்பு..whats wrong with you?"

"அது எப்படி சொல்றதுன்னுத் தெரியல..இப்போ.. போன வாரம்..அந்த..தர்ஷன்.. தர்ஷன்.." - தயங்கினாள்,

"தர்ஷன்? ஏதாவது பிரச்சினை பண்றானா? என்னன்னு சொல்லு..நான் வேணும்னா கேட்கவா?" - ஆதரவாகப் பேசினான்..

"இப்போப் பேசலைன்னா எப்போவுமே பேச முடியாது..பேசிடு பேசிடு..." - மூளை கட்டளையிட்டது.. தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.,

"ஆமாம் ரமேஷ்..அந்த தர்ஷன் கூட பெரிய தொல்லையாப் போச்சு..திடீர்னு என்ன லவ் பண்றதா சொல்லிட்டான்.. "

ரமேஷின் முகம் வியர்த்து விட்டது.ஒரு வேளை சற்று முன்பு கண்ட கனவை விடவும் விளைவு விபரீதமாக இருக்குமோ எனப் பயந்தான்..பதற்றத்தை முகத்தில் காட்டாமல்,சர்வ சாதரணமாக கேட்டான்.,

"அதுக்கு நீ என்னச் சொன்னே?"

"யோசிக்கக் கொஞ்சம் டைம் கேட்டேன்" - ரமேஷின் முகத்தைக் கூர்ந்துக் கவனித்தாள்..ரமேஷின் முகம் சுருங்குவதை உணர்ந்தாள்..சற்று உற்சாகமடைந்தாள்.மேலும் தொடர்ந்தாள்,

"இப்போ நீங்க தான் ஹெல்ப் பண்ணனம்" - கேலியாகப் பேச,ரமேஷ் உண்மையில் சற்று ஆத்திரமடைந்து விட்டான்..

"என்ன ஹெல்ப் பண்ணனம்? அவனுக்கென்ன நல்லா கார்ப்பரேஷன்ல நாய்ப் புடிக்கிறவன் மாதிரி இருக்கான்.. கல்யாணம் பண்ணிக்கோ..நல்ல வருவ நீ எல்லாம்" , இப்படி ரமேஷ் பேசியதும் காயத்ரி வாய் விட்டுச் சிரித்தாள்.. ரமேஷ் தன்னைத் தான் இன்னும் விரும்புகிறான் என நினைத்து மகிழ்ச்சியுடன் பேசினாள்.

"ரமேஷ் பிரச்சினையே என்னன்னு இன்னும் நான் சொல்லலையே.." - பேசி முடிப்பதற்குள் ரமேஷின் மொபைல் ஒலித்தது,ஆத்திரமே வடிவாக இருந்தவன்,திடீரென சாந்த ஸ்வரூபியாகி விட்டான்..சிறு புன்னகையுடன்,

"don't worry Pooja..nothing is more important for me..I will be there in Bangalore on Friday evening..ya sure..will call you back yaar.."

அது வரை அவனுடைய ஆத்திரத்தையும் படபடப்பையும் ரசித்துக் கொண்டிருந்தவள்,திடீரென கோபமடைந்தாள்..

"யாரு பூஜா? உங்களைப் போயி நல்லவர்னு நம்பினேனே..என்ன ரமேஷ் இப்படிப் பண்ணிட்டிங்க.." - ஏறக்குறைய அழும் நிலைக்கு வந்துவிட்டாள்.. திடீரென தான் வித்தியாசமாக நடந்து கொண்டதை உணர்ந்தாள்.

சுதாரித்துக் கொண்ட ரமேஷ்,காயத்ரியின் மன நிலையை சற்று உணர ஆரம்பித்தான். ஆனால் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. இரண்டு முறை ஏற்பட்டக் கசப்பான அனுபவமே இதற்குக் காரணம்..

"காயு..இது பூஜா..பெங்களூர்ல எனக்குக் கிடைச்ச ஒரு நல்ல friend..அவங்க ஏன் call பண்ணாங்கன்னா.."

"Oh ப்ரெண்டா(friend)..ரமேஷ் இனியும் நான் தாமதிக்க விரும்பலை.." உணர்வு பூர்வமாகப் பேச ஆரம்பித்து விட்டாள்..

"ரமேஷ், உங்களுக்குத் தெரியுமா..நீங்க செகண்ட் டைம் ப்ரபோஸ் பண்ணிட்டுப் போனதுக்கப்புறம் நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன்னு.. நீங்க எனக்காகக் கணேசன் சாரைத்  திட்டினது,எனக்காக தீபக் கிட்டே பேசி விஜய் டீவிலே பாட நம்ம காலேஜ் சார்பா என்னையே செலக்ட் பண்ண வைச்சது,உங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்காத சேத்தன் பகத்(Chetan Bhagat) கிட்டே,எனக்குப் பிடிக்குமென்கிற ஒரே  காரணத்துக்காக ஆட்டோகிராப் வாங்கிக் கொடுத்ததுன்னு நிறைய விஷயத்த யோசிச்சி உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?"

ரமேஷ் ஏதோ சொல்ல முற்பட்டான்..ஆனால்,தானாக அமைந்த இந்த நல்ல சந்தர்ப்பத்தைத் தன் தவளை வாயால் பேசிக் கெடுத்துவிட வேண்டாமென நினைத்து அமைதியானான்,காயத்ரி தொடர்ந்தாள்,

"காலேஜ் ஸ்ட்ரைக் அப்போ நடந்த பிரச்சனையிலே நான் சொன்னதை என் கிளாஸ்மேட்ஸ்(classmates) கூட நம்பலை.. நீங்க மட்டும் தானே என் சைடுல நின்னிங்க..தனியாளா என்னை support பண்ணிங்க..மோடிவேட்(Motivate) பண்ணிங்க.. நீங்க மட்டும் அப்போ என் கூட இல்லாம இருந்திருந்தா நிலைமை எவ்வளவு மோசமா போயிருக்கும்? Infact நான் place ஆனப்போ உங்களுக்குச் சொல்லனம்னு எவ்வளவு ஆசையாய் இருந்தேன் தெரியுமா..?"

காயத்ரி தன்னைப் பற்றி இப்படி அன்பாகப் பேசி ரமேஷ் என்றுமே கேட்டதில்லை..எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்த ரமேஷ் பேசினான்...

"ஏன் காயு..என்ன இவ்வளவு பிடிக்குமா உனக்கு? அப்புறமும் எதுக்கு நான் ப்ரபோஸ் பண்ணப்போ அவ்வளவு ஹார்ஷா பேசினே?"

"அன்னைக்கிப் பேசினப்புறம் தான் அது தப்போன்னுத் தோணித்து.. அதுக்கப்புறம் உங்களைப் பற்றிப் பல தடவை யோசிச்சிருக்கேன்..பேசனம்னு நினைச்சாலும் உங்க நம்பர் இல்லை..நீங்க எங்கே போனிங்கன்னும் தெரியல.."

ரமேஷ் காயத்ரியையே பார்த்துக் கொண்டிருக்க,அவள் தொடர்ந்தாள்,

"உங்களைக் கம்பெனியிலே பார்த்த நாளிலேர்ந்து ஏதோ வித்தியாசமா உணர ஆரம்பிச்சேன்..உங்களைப் பார்க்கிறப்போ எல்லாம் நிறையப் பேசணம்ன்னுத் தோணும்..ஆனா என்னமோ தெரியல, பேச்சே வராது.. அதான் தர்ஷன் கூட நிறைய பேசுவேன்..அப்படிப் பேசிக் கொஞ்சம் நார்மலா இருக்கிற மாதிரி manage பண்ணிடுவேன்.. உங்க கிட்டே ஏதாவதுக் கேட்கவும் கொஞ்சம் உறுத்தும்..'என் லவ் மட்டும் வேண்டாம்,ஆனா என்னோட ஹெல்ப் மட்டும் வேணுமான்னுக்' கேட்டுட்டா  என்னப் பண்றது" - அப்பாவித்தனமாகச் சொன்னாள் காயத்ரி.

"காயத்ரி என்னை நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுத் தானா? நான் உன்னை உயிருக்குயிரா லவ் பண்றேன்.. உனக்குன்னா என்ன வேணும்னா பண்ணுவேனே காயு..உன் மனசுக்குப் பிடிக்காத எதுவும்,எப்போவும் செய்ய மாட்டேன்.. ஒன்னு சொல்றேன் புரிஞ்சிக்கோ, உனக்குப் பிடிக்கலைன்னா, என் காதலையே கூடத் தூக்கி எறிஞ்சிடுவேன் ..உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.. உன் மேல  எவ்வளவு பிரியம் வைச்சிருக்கேன் தெரியுமா?"

"தெரியும் :-)..நான் தான் உங்களைப் புரிஞ்சிக்காமப் பல தடவை hurt பண்ணிட்டேன்..ஆனா அவ்வளவும் பொறுத்துக்கிட்டு எனக்கு ஒண்ணுன்னா துடிச்சி போறீங்களே..அன்னைக்கி ராத்திரி என் பைக் ரிப்பேர் ஆனப்போ உங்கக் கண் எவ்வளவு பேசிச்சு..ராத்திரித் தனியா நிற்கிறேனேன்னு ஒரு பதற்றம்,இந்த நிலைமைலேக் கூட உங்களைக் கூப்பிடலையேன்னு ஒரு ஏமாற்றம்,பத்திரமா வீட்டிலே விடனம்னு ஒரு பொறுப்புணர்ச்சி, எல்லாத்துக்கும் மேல ஒரு வித affection.. நான் என்ன அவ்வளவு நல்லவளா..?" - ரம்மியமானக் குரலில் கேட்க,

"Tujh mein rab dikhta hai Yaara mein kya karu(I see my God in you,I don't know what to do :-) ).." - உணர்வு பூர்வமாக லேசான புன்னகையுடன் இந்த இரு வரிகளையும் பாடுவது போலப் பேசினான்.அவள் மிக அழகாக, லேசாகப் புன்னகைத்தாள், நாணத்துடன் தலை குனிந்தாள்,

"இப்போ கூட அந்த தர்ஷன் உன் கிட்டே ப்ரபோஸ் பண்ணலைன்னா ஏன் கிட்டே இவ்வளவுப் பேசி இருக்க மாட்ட இல்லே"

"ஐயோ ரமேஷ்..அது அதோட முடியலே..அவன் சரியான இம்சையா இருக்கான்..அப்பா காலைல வாக்கிங் போறப்போ அவங்கப்பாவ மீட் பண்ண வைச்சிருக்கான்..அவங்க அப்பா பேச்சு வாக்கிலே தர்ஷனுக்கு என்ன கொடுக்கச் சம்மதமான்னு கேட்டிருக்காரு..எங்கப்பாவும் நல்ல இடம் தானே என்னம்மா சொல்றேன்னு கேட்கிறார்.. கிட்டத்தட்ட பத்து நாளா பயங்கரமான மெண்டல் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்..என்ன பையன் அவன்..இப்படி ஏன் விருப்பம் கூட இல்லாம அப்பா கிட்டே பேசி இருக்கான்?"

"சரி விடு அவனை ஏன் திட்டுறே..உன்னை மிஸ் பண்ண யாருக்குத் தான் மனசு வரும்..இனிமே இதைப் பற்றி நீ கவலைப்படாதே..எங்கப்பாவும் காலைல வாக்கிங் போவாரு"

"சார் நிலைமை சீரியஸ்..காமெடி பண்ணிடாதிங்க..ஆமா என்னவாம் உங்க ப்ரெண்டுக்கு(friend)?"

"யாருக்கு?"

"அதான் 'nothing is more important for me..I will be there in Bangalore' அவளுக்கு.."

"ஐயோ காயு,அன்னைக்கி அவளுக்கு கல்யாணம்..மறக்காம ரிசப்ஷனுக்காச்சு வந்துடுன்னு கூப்பிட்டா"

காயத்ரி சிரித்தாள்,

"இன்னும் சொல்லவே இல்லையாம்,அதுக்குள்ள 1008 கேள்வி வேற"

"என்ன sollanam" - போலியான குழப்பத்துடன் காயத்ரி கேட்க,"இப்போவாச்சு சொல்லு காயு..ப்ளீஸ்..கிட்டத்தட்ட இரண்டரை  வருஷம் வெயிட் பண்ணிட்டேன்.."

காயத்ரி முகமெல்லாம் மலர்ந்தது..கண்களில் பளிச்சென்று ஒரு ஒளி தோன்றியது..ரமேஷைப் பார்த்தாள்..அருகில் வந்தாள்..

"I love you" - மீண்டும் அந்த ரம்மியமான குரலில் அழகாகச் சொன்னாள்..

இது உண்மைதான்..கனவில்லையே..சொன்னது நீ தானா - ரமேஷ் மனதில் நினைத்துக் கொண்டான்.

"ரமேஷ் உங்களை இறுக்கமாக் கட்டிக்கணம் போல தோணுது.."

"நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்" 

இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள்,

"I love you Gayu "


(முற்றும்)

Friday, September 7, 2012

சொன்னது நீ தானா ? - 2

முதல் பாகத்தை இங்கே படிக்கலாம் (click here)

ந்நிலையில் காயத்ரிக்கு கேம்பஸ் இன்டர்வியு மூலம் ரமேஷ் பணி புரியும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதை காயத்ரி ரமேஷிடம் தெரிவிக்க விரும்பினாள்.ஆனால் ரமேஷ் சென்னை தொலைபேசி எண்ணை உபயோகிப்பதில்லை.அவனது பெங்களூர் எண்ணை  பிரேம் மற்றும் ஒரு சில நண்பர்களுக்கே கொடுத்திருந்தான்.

காயத்ரிக்கு ரமேஷை பிடிக்காமல் இல்லை.அவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் நெருக்கமான நண்பர்கள் என்றே சொல்லலாம்.ரமேஷ் மற்றவர்களை விடவும் காயத்ரியிடம் அதிகம் அக்கறை செலுத்துவதையும் அன்பு காட்டுவதையும் உணர்ந்தான்.தன் காதலை வெளிப்படுத்தினான்.ரமேஷ் இரண்டு முறை தன் காதலை வெளிப்படுத்தியது,இனி தன்னை தொந்தரவு செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டதும் இன்று வரை தொடர்பு கொள்ளாதிருப்பது என அனைத்து விஷயங்களையும் சில நிமிடங்கள் நினைத்துப் பார்த்தாள்.

"ஒரு ஆத்திரத்திலே சொல்றது தான்..இனிமே இந்த எண்ணத்தோட என் கூட பேசாதேன்னு..மூணு மாசமாச்சு ஒரு மெசேஜ் இல்லை,போன் கால் இல்லை,மெயில்,சாட் எதிலேயும் காண்டாக்டே இல்லை டா அவர் கிட்ட இருந்து" - தன் நண்பன் ஒருவனிடம் உண்மையான வருத்தத்துடன் சொன்னாள்.

"நீ தான் அவரைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டல்ல..இம்சை விட்டதுன்னு நினைச்சிக்கோ.. "

"இப்படி அவரை மரியாத குறைவா பேசாதே.."

"தோ பாரடா..கோவம் எல்லாம் வருது..உள்ளுக்குள்ள லவ் இருக்கு,ஆனா ப்ரொபோஸ் பண்ணா ரிஜக்ட் பண்ணிட வேண்டியது.."

"இப்போ நான் அவரை லவ் பண்றேன்னு யார் சொன்னது? இடியட் மாதிரி பேசாதே..எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.. அவர் மேல எனக்கொரு மரியாதையும் உண்டு..ஆனா அதை நீ லவ்வுன்னு புரிஞ்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை"

"இந்த பொண்ணுங்களே இப்படித்தான்..உன்னை மாதிரி பொண்ணுங்க இருக்கிறதாலத் தான் முக்கால்வாசி பசங்க டாஸ்மாக்கே கதின்னு இருக்கானுங்க.."...தனது நண்பனின் இந்த பேச்சுக்கு காயத்ரி அதிக முக்கியத்துவம் தரவில்லை.பணியில் சேர ஆவலாய் இருந்தாள். அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

சில மாதங்களுக்குப் பிறகு,

"பிரேம்!!!"

"ரமேஷ்!!சொல்லு டா..எப்படி இருக்க..என்ன மச்சி ரெண்டு மூணு மாசமா போன்,மெசேஜ் எதுவும் இல்லை..நானா போன் பண்ணினாலும் அப்புறம் பேசறன்னு சொல்லி கட் பண்ணிடுவ..என்ன ஆச்சு?அவ்வளவு பிசியா"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை டா..எனக்கு இங்க அசைன்மென்ட் ஓவர்..ப்ரொஜெக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணிட்டாங்க..வீக்கென்ட் இங்க friends கூட என்ஜாய் பண்ணிட்டு சண்டே நைட் சென்னைல இருப்பேன்.."

"டேய் சீக்கிரம் வரலாம்ல..அம்மா உன்ன ரொம்ப எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க டா.."

"முக்கியமான விஷயம் மச்சி..நான் வரப்போற விஷயத்த அங்க யார் கிட்டேயும் சொல்லிடாதே.. அம்மா-அப்பாக்கு இது ஒரு 'ஸ்வீட் சர்ப்ரைசா' இருக்கட்டும்..bye dude..சண்டே நைட் மறக்காம ஸ்டேஷனுக்கு வந்துடு "

"என்ன ஆச்சு இந்த பையனுக்கு?மூணு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் ஜகத்குரு ஜக்கி வாசுதேவ் ரேஞ்சுக்கு தத்துவமா சொல்லி தீர்த்தான்..இப்போ என்னடான்னா என்ஜாய் பண்ணிட்டு வர்றேன்னு சொல்றான்..ம்ஹ்ம்ம்.. ஒரு வேளை பெங்களூர்ல ஏதாவது புது பிகர் செட்டாயிருக்குமோ ?" - இவ்வாறு யோசித்தான்.. பிறகு,"ச ச நம்மாளு அவ்வளவு வொர்த் இல்லை..",என நினைத்துக் கொண்டான்.

ஆறு மாதத்திற்கு பிறகு சென்னையை பார்ப்பது ரமேஷுக்கு ஒரு இனம்புரியாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது. பல நாட்கள் கழித்து சொந்த ஊரைப் பார்க்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.

"Hi dude..Welcome back.."

ரமேஷ் புன்னகைத்தான்.ரமேஷ் கடும் உடற்பயிற்சியின் மூலம் உடல் இளைத்திருப்பது தெரிந்தது.மீசையை ட்ரிம் செய்திருந்தான்.லேசான தாடியுடன் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருந்தான்.

"என்ன டா போகும்போது தேவதாஸ் மாதிரி இருந்த,இப்போ என்னடான்னா மாடல் ரேஞ்சுக்கு ஆயிட்ட.. ஆனாலும் இந்த ராத்திரி நேரத்திலே அந்த கூலிங் கிளாஸ் தேவை தானா.ரொம்ப ஓவரா இருக்கு டா.."

சட்டென்று ரமேஷுக்கு ஒரு அழைப்பு வந்தது.

"yeah I have reached yaar..On the way to my home.. ya sure sure..thank you thanks a lot"

அழைப்பைத் துண்டித்து விட்டு,லேசாக புன்னகைத்தான்.

"யாரு டா இந்த நேரத்திலே call பண்றது?"

"பூஜா டா..பெங்களூர்ல என்னோட close friend ஆய்ட்டாங்க"

"பசங்க எவனும் க்ளோஸ் ஃபிரெண்டே ஆக மாட்டானா இவனுக்கு.. இவனுக்குன்னு வந்து சேர்றாளுகளே..நமக்கு ஒன்னு கூட செட் ஆக மாட்டேங்குது" - பிரேம் முணுமுணுத்தான்..

"என்ன சொன்னே?" - ரமேஷ் குழப்பத்துடன் கேட்க,

"சும்மா மச்சான்..நீ இல்லாம ரொம்ப போர் அடிச்சிடிச்சி டா..அதான் சொல்லிட்டிருந்தேன்".


ரமேஷின் வீட்டை அடைந்தார்கள்.திடீரென ரமேஷையும் பிரேமையும் ஒன்றாகக் கண்டதும் ரமேஷின் அம்மா இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.

"என்ன டா இப்படி சொல்லாம கொள்ளாம திடு திப்புன்னு வந்து நிக்கிற?" - அம்மா அப்பா இருவரும் கேட்டார்கள்.

"சும்மா உங்களுக்கு சர்ப்ரைஸ் தரலாமேன்னு தான்.. சரி லேட் ஆய்டிச்சு தூங்குங்க..காலைல ஆபீஸ்ல ரிப்போர்ட் பண்ணனம்"..

ரமேஷின் இந்த நடவடிக்கை அவன் அம்மாவிற்கு சற்று வித்தியாசமாய் பட்டாலும்,அது அவளுக்கு சந்தோஷத்தையே தந்தது..பெங்களூர் செல்லும் முன் சோகமே உருவாய் இருந்த தன் மகனை,எப்போதும் இப்படி சந்தோஷமாகப் பார்க்கவே விரும்பினாள்.ஆறு மாத காலத்தில் ரமேஷ் எவ்வளவோ மாறி இருந்தான்.

மறு தினம் வழக்கம் போல அலுவலகுத்துக்குச் சென்று தனது பெங்களூர் ப்ராஜெக்ட் குறித்த தகவல்களை விவரித்தான்.சரியாக ஒரு மணிக்கு மதிய உணவு சாப்பிட 'cafetaria' சென்றான். தான் கொண்டுவந்திருந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டுக் கை கழுவினான்.

"ஹேய் ரமேஷ்..இங்க இந்த பக்கம் பாருங்க..பின்னாடி திரும்புங்க"

மிக அழகான ஒரு பெண் குரல்..ரமேஷுக்கு நன்கு பழக்கப்பட்டக் குரலும் கூட..

"ஹேய் காயு!!!!"

"பரவாயில்லையே பேர் எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க"

"ஹலோ..நான் கூட பழகற யாரையும் மறக்கிறதில்லை..ஆனா என் கூட பழகினவங்க தான் என்னை ஞாபகம் வைச்சிக்கிறதில்லை"

"ஹேய் இன்னும் இப்படி பெருசா வசனம் பேசி மொக்கை போடறதை விடலையா நீங்க?"

இந்த கேள்வி ரமேஷுக்கு சற்று ஏமாற்றத்தைத் தந்தது..இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டான்.காயத்ரியும் சிரித்துக் கொண்டிருக்க,தன்னை அறியாமல் ரமேஷ் அவளின் அழகிய சிரிப்பை ரசித்துக் கொண்டிருந்தான்.

"ம்ம்ம்..சரி நீ எப்படி இங்கே..இங்க place ஆன விஷயத்தக் கூட சொல்லவே இல்லைல என் கிட்ட?" - ரமேஷ் கேட்டான.

"எப்படி சொல்ல முடியும்?உங்க நம்பருக்குக் கால் பண்ணா 'switched off'ன்னு வருது.. உங்க பிரெண்ட்ஸ் கிட்டயும் புது நம்பர் இல்லைன்னு சொல்லிட்டாங்க.."

"ஒரு மெயில் அனுப்பி இருக்கலாம்ல? சரி அதை விடு..என்ன சாப்பிடற? ஜூஸ்? மில்க்ஷேக்?"

"இல்லை எதுவும்.."

"It's ok..நான் pay பண்றேன்..OCல வாங்கித் தந்தா வாங்கிக்க மாட்டியா என்ன?"

"அசிங்கப்படுதிட்டிங்க..சரி போகட்டும் விடுங்க, மூனு சாக்லேட் மில்க்ஷேக் சொல்லுங்க"

"மூனு எதுக்கு? ஒன்னு உனக்கு,ஒன்னு எனக்கு,இன்னொன்னு?"

"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? மூன்றாவது ஜூஸ் இவனுக்குத் தான்..ஹி இஸ் தர்ஷன,my friend"

சற்றே உயரமாக,சிவப்பாக கையில் iPhoneல் தப்புத் தப்பாக அரை குறை ஆங்கிலத்தில் மிக தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டே வந்தான்.கையில் தங்க மோதிரம், விலையுயர்ந்த கடிகாரம், கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தான். ரமேஷ் அவனை ஏற்ற இறக்கமாகப் பார்த்தான். அவனைப் பற்றி சில கணக்குகள் போட்டான்.உடனே அவனது கவனம் காயத்ரியின் பக்கம் திரும்பியது.தன்னை இவனிடம் என்னவென்று அறிமுகப் படுத்தப் போகிறாள் என்று ஆவலாகப் பார்த்தான்.ஆனால் காயத்ரி அவனை அறிமுகப்படுத்தவே இல்லை.

"என்ன மில்க்ஷேக் ஆர்டர் பண்ணலையா இன்னும்?" - ரமேஷைப் பார்த்துக் கேட்டாள்.

"ஹேய் யார் இவரு..மில்க்ஷேக் வாங்கித்தான்னு சொல்றியே?" - தர்ஷன்

"ஓ உனக்கு தெரியாதுல்ல,இவர் தான் ரமேஷ்..என் காலேஜ் சீனியர்" - அறிமுகப்படுத்தினாள். இது ரமேஷுக்கு சற்று ஏமாற்றமளித்தது.He is my friend என்று அறிமுகப்படுத்தி இருந்தால் கூட சற்று ஆறுதலாக இருந்திருக்கும். இருந்தும் காயத்ரி தன்னோடு பேசுவதே அதிகம் என எண்ணிக்கொண்டான். மூவரும் மில்க்ஷேக் குடித்தார்கள். வழக்கம் போலவே காயத்ரி நிறைய பேசினாள்.ஆனால் ரமேஷ் அளவாகப் பேசினான்.

"என்ன நீங்க மணிரத்னம் படத்திலே வர்ற மாதிரி one word answer கொடுத்துட்டிருக்கீங்க? எப்போவும் போல நல்லா பேசலாம்ல?"

ரமேஷ் லேசாக புன்னகைத்தான்.பிறகு பேசினான்,

"எந்த பிளாக்?"

"5th பிளாக், நீங்க?'

"1st பிளாக்..1st  பிளாக் 3rd  floor ரெண்டு பெரும் ஒரே ப்ரொஜெக்டா?"

"ஆமாம்..இப்போ training போயிட்டிருக்கு..ஆமாம் இந்த..." - காயத்ரி ஏதோ சொல்ல முற்பட்டால்,ரமேஷ் குறுக்கிட்டு,

"ஹேய் ஹேய்.. எனக்கு டைம் ஆச்சு..ஒரு கால் இருக்கு..நம்ம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்..bye bye" - என வேகமாக புறப்பட்ட ரமேஷை நிறுத்தினாள், "உங்க நம்பர் கொடுத்துட்டுப் போங்க" - எனக் கேட்டாள்.

"9843323034 " - நம்பர் கொடுத்து விட்டு வேகமாகச் சென்றான்.


அவனுடைய இந்தச் செயல் காயத்ரிக்குச் சற்று வித்தியாசமாய்ப் பட்டது.பிறகு இவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேச ஆரம்பித்தார்கள். உணவு இடைவேளையில் பெரும்பாலும் ரமேஷும் இவர்கள் ஒன்றாகவே உண்பார்கள்.

ரமேஷுக்கு காயத்ரி மீது எப்போதும் ஒரு தனி பாசம் உண்டு.அவள் அவனதுக் காதலை ஏற்காவிட்டாலும் கூட, ரமேஷுக்கு அவள் மீதிருந்த பாசம் சற்றும் குறையவில்லை.ஒரு முறை சாதரணமாக ஏதோ கேட்கப் போக,காயத்ரி சற்று  வருத்தமடைந்தாள்.இதை அறிந்த ரமேஷ் அவளை விடவும் வேதனயடைந்தான். அதை நினைத்து ஒரு சில நாட்கள் தூங்காமல் கூட இருந்ததுண்டு.அவனுக்குக் காயத்ரி என்றால் உயிர்.அவளுடைய ப்ராஜெக்ட் பற்றி சில விபரங்களைச் சேகரித்துக் கொண்டான். அவள் அறிமுகப்படுத்திய தர்ஷனைப் பற்றியும் விசாரித்ததில்,அவன் தவறானவன் இல்லை என்று புரிந்து கொண்டான். இவை அனைத்தும் காயத்ரிக்குத் தெரியாமல் செய்தான்.தெரிந்தால் தன்னுடன் பழகவே மாட்டாள் எனப் பயந்தான்.

காயத்ரியின் நடவடிக்கைகளில் ஒரு சில மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.ஓரளவிற்கு ரமேஷ் அவளிடம் பேச வேண்டுமென அவள் எதிர்பார்ப்பது புரிந்து கொள்ளக்கூடியதே.ஆனாலும் கூட,தர்ஷனுக்குத் தரும் முக்கியத்துவத்தில் ஒரு விழுக்காடு கூட ரமேஷுக்குக் கிடைப்பதில்லை.

"பெங்களூர்ல இருந்தப்போ இவளை மறக்க முடியலன்னா கூட மற்ற விஷயத்திலாவது கவனம் செலுத்த முடிஞ்சுது.."

"கரெக்டு..பூஜா மாதிரி ஒரு friend இருந்தா எந்தக் கவலையும் தெரியாதுல்ல" - கேலியாகப் பேசினான் பிரேம்.

"நீ கொஞ்ச நேரம் மூடிகிட்டிருக்கியா?நானே கடுப்புல இருக்கேன்.."

"Cool down Cool down.."

"என்னாலையும் control பண்ண முடியலடா..நான் லவ் பண்ணப் பொண்ணுக்  கூட வேற ஒருத்தன் கடலை போடறதப் பார்த்தா பத்திகிட்டு வருது"

"நீ ஏன் சும்மா இருக்க?உனக்கு அவ மேல அவ்வளவு ஆசை இருந்தா நீயும் பேச வேண்டியது தானே?"

"நான் பேசினா எங்க மச்சான் மதிக்கிறா"

"நீ அவ கிட்டயும் போயி என் கூட பேசற மாதிரி மாலிக் கபூர் பத்தியும் மொத நாள் ராத்திரி படிச்ச ஏதோ ஒரு கதைய சொன்னா கேட்பாளா?ஏதோ நான் கேட்கறன்னா அது வேற..அதுக்காக எல்லாரும் என்னை மாதிரி தியாகிகளா இருப்பாங்களா என்ன?"

"உன்னைப் போயி ஒரு நண்பன்னு நம்பி பேசறன் பாரு..அதே மாலிக் கபூர் பற்றி அந்த தர்ஷன் பேசினா கை தட்டி ரசிக்கிறா டா..இந்த விதி இருக்கே என் வாழ்க்கைல மட்டும் ஏன் தான் இப்படி 3 stump நட்டு வச்சி batting bowling fieldingன்னு எல்லாத்தையும் தானே பண்ணி இப்படி விளையாடுதோ.. எங்கேயோ இருந்த என்னை மறுபடி இதே லொக்கேஷனுக்கு வர வைச்சி,அவளுக்கும் அங்கயே ப்ராஜெக்ட் கிடைக்க வைச்சி மறுபடியும் அவ கிட்ட எதையாவது எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற வைக்குது.. "

"டேய் சரி விடு..டென்ஷன் ஆகாதே"

"ஆனா ஒன்னு மச்சி..உன் மனசுக்கு புடிச்சவங்க உன் பாசத்தைக் கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம இருக்கிற வேதனை இருக்கே,நரக வேதனை டா.."

"நீ ஏன் மறுபடி அவளுக்கு ப்ரபோஸ் பண்ணக் கூடாது"

"ஏதோ ஒரு முடிவுல இருக்கடா நீ..அவ கூட நான் friendlyயா பழகறேன்னு நம்பிப் பேசிகிட்டிருக்கா..இன்னொரு வாட்டி ப்ரபோஸ் பண்ணா மூஞ்சிலையே முழிக்க முடியாது"

"அப்போ ஏண்டா அவளையே நினைச்சிட்டிருக்க இப்படி..உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு?"

"என்ன டா பண்றது.. T ராஜேந்தர்(TR) எழுதின மாதிரி, 'விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்'.. "



 பிறகு ஒரு நாள் ரமேஷ் கிளம்ப சற்று நேரமாகி விட்டது.சுமார் இரவு 10 மணி இருக்கும்.அன்று வானிலை மிகக் குளிர்ச்சியாக இருந்ததால் ரமேஷ் வழக்கமாக செல்லும் குறுக்குப் பாதையில் செல்லாமல்,சுற்றிக் கொண்டு போனான். இது போல இயற்கையை ரசிப்பது ரமேஷுக்கு மிகவும் பிடிக்கும்.அப்போது சாலையில் அவன் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றான்.

"காயத்ரி..என்ன ஆச்சு..இந்த நேரத்திலே இங்க என்ன பண்றே?Any problem?"

"பைக் நின்னுடுச்சி..திரும்ப ஸ்டார்ட் பண்ணவே முடியல..பக்கத்திலே யாராவது ஹெல்ப்புக்குக் கூப்பிடலாம்னு பார்த்தாலும் பயமா இருக்கு..இங்க யாரையும் காணோம்"

"எவ்வளவு நேரமா இங்கேயே நிக்கிறே?"

"Half an hour "

உடனடியாக ரமேஷ் பிரேமை அழைத்தான்."பிரேம் இங்க ரெண்டு பைக் இருக்கு..நைட் உன்னோட ரூம்ல இருக்கட்டும்.. உடனே கிளம்பி வா..மற்றதை நேரிலே சொல்றேன்" - என அவர்கள் இருந்த இடத்தின் விபரங்களைச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

"ஏன் காயு,இவ்வளவு நேரமா இங்க இருக்கிறதுக்குப் பதில் உன் 'best friend' அந்த தர்ஷனை வரச்சொல்லி இருக்கலாம்ல?"

"அவனுக்கு phone பண்ணி வரச்சொன்னேன்..ஆனா அவன் 'நண்பன்' நைட் ஷோ பார்த்துகிட்டு இருக்கானாம்.. அதனால வர முடியாதுன்னு சொல்லிட்டான்.."

"சரி விடு..இதுக்குத் தான் இந்த விஜய் fans கூட எல்லாம் சேராதேன்னு சொல்றது..எங்க கேக்கற நீ" - என அவன் சொன்னதும் வாய் விட்டுச் சிரித்து விட்டாள் காயத்ரி..பிறகு,

"ரமேஷ்,எதுக்கு ரெண்டு பைக்கும் உங்க frienda கொண்டு போகச் சொன்னீங்க?உங்க பைக் நல்லாத்தானே இருக்கு?"

"அது இருக்கு,ஆனா நீங்க என் கூட பைக்ல வந்துட்டுத் தான மறு வேலை பார்ப்பீங்க?இப்படி ஒரு situationல கூட என்னைக் கூப்பிடனம்னு தோனலைல உனக்கு? உன்னை என்னால கொஞ்சம் கூட புரிஞ்சிக்க முடியல"

பிரேம் தன் ரூம்மேட்டோடு வந்தான்."இவங்க தான் அந்த காயத்ரியா.. 'Glad to meet you' எனக் கை கொடுக்க முற்பட்டான் பிரேம்..ரமேஷ் சற்று கடுமையாகப் பார்ப்பதை உணர்ந்ததும்,கையை விளக்கிக் கொண்டான்.. "It's ok.. நான் இன்னொரு நாள் intro வாங்கிக்கிறேன்..கடமை தானே நமக்கு முக்கியம்..வண்டியைத் தள்ளுடா போலாம்.."

இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள்.

"பரவாயில்லை நான் போயிருவேன் ரமேஷ் உங்களுக்கெதுக்கு வீண் ஷ்ரமம்"

"இந்த சீன் போடறத விட்டுட்டு உள்ளே போ..வீட்டிலே யாருக்காச்சு phone பண்ணி வரச்சொல்லி இருக்கலாம்ல"

"வீட்டிலே பாட்டி மட்டும் தான் ரமேஷ் இருக்காங்க..அப்பா-அம்மா ரெண்டு பெரும் கும்பகோணம் போயிருக்காங்க.. நல்ல வேளை நீங்களாச்சு வந்தீங்களே..எப்படி thanks சொல்றதுன்னே தெரியல.."

மீண்டும் மீண்டும் அவள் தன்னை அன்னியமாக நினைத்துப் பேசுவது ரமேஷுக்குப் பிடிக்கவில்லை..ஆனாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு காயத்ரியுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் அவனுக்கு பெருமகிழ்ச்சி.. அடிக்கடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...இருவர் மனதிலும் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பதை அவர்களின் கண்கள் தெளிவாக்கின.."சார் இந்தத் தெருவுல எந்த வீடு சொன்னீங்க?" - ஆட்டோக்காரன் குரல் கேட்டு இருவரும் தன்னிலைக்கு வந்தார்கள்,"அந்த Santro car நிக்குதுல,அதுக்கடுத்த வீடு..."

அவளை வீட்டில் பத்திரமாகச் சேர்த்து விட்ட திருப்தியில் வீட்டிற்கு வந்து படுத்தான்.எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்வு அவனுக்கு அன்றிரவு நிம்மதியானத் தூக்கத்தைக் கொடுத்தது.ஆனால் அவன் எது நடந்து விடக் கூடாது என பயந்தானோ அதுவே நடக்கப் போகிறது என்று தெரியாமல் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறான்.

                                                                                          -தொடரும்  
 

Tuesday, September 4, 2012

Namasthe Guruji




This is my 3rd article about Teachers and my 2nd in this blog.As we know we will be celebrating the Teachers day on 5th September,this is again a tribute to teachers.

A teacher is someone who teaches something to us.This is the general definition we can find for the word teacher.One who teaches us good habits,good things is called a good teacher and the one who doesn't, is called a bad teacher.Nowadays this profession is taking a different route.Gone are the days where a teacher used to get enormous respect in towns and villages.The main reason for this change is, the behavior of teachers.Newspapers report lot of disgusting news items about the teachers.Parents of adolescents are scared of teachers.

Adolescent age is the most important part of one's life.Whatever we learn in our adolescent age might influence us throughout the entire life.It is during this age teachers should handle children with utmost care. Students should be delicately handled.But nowadays what the teachers are doing?They are behaving like perverts.

Teachers threaten students with internal marks.And in some cases they go to the extent of awarding poor internal marks too.This will create a very bad impression about the teacher in the student's mind.If the student commits a mistake,it is the duty of the teacher to correct it.Instead our teachers prefer to take revenge against them.Unfortunately this happens in colleges too.When a professor or lecturer does this to their students,for a moment they should think of their own children.One day your son or daughter will be in the same position.Don't forget,what you sow is what you reap.

Intellectuals in India speak volumes about the standard of education here.They say we memorize the answers and just vomit it in the paper.We hardly apply our mind.This is an allegation against the Indian education system.Let us not bother about the system being followed.First of all we need some qualified teachers to educate us.See this startling fact :

"Raising concerns about the poor calibre of teachers in taking competitive tests, less than 1% of candidates who sat for the Tamil Nadu Teacher Eligibility Test on July 12 passed.". - source

The teachers themselves are not able to get through the eligibility test.Just imagine the plight of students to whom these people teach.This is the harsh reality.This happens mainly because,most of them choose the teaching profession for an easy life.Few people choose teaching with real interest.The main reason why people choose teaching is - working hours 9-6,Saturday & Sunday - holiday,summer vacation, semester holidays etc.,with a good salary.They concentrate only on this comfort zone,but they forget the basic fact that teaching is an art.

I have seen lot of old teachers,for whom,the day will not begin without The Hindu or Indian Express.Their English will be beautiful.You can't find a single grammar mistake in their language.The Tamil teacher will not use a single English word in his class room.They were passionate towards teaching.The teacher will do proper homework before starting the class.If you observe the classes of these teachers,atleast for 10 minutes,they will discuss some general happenings.They will relate their subjects to current affairs,cinema, sports etc.Students will not forget the matter taught by him.Atleast they will not forget the example,so that they can recollect what the teacher taught,while preparing for exams.If you are studying under such teachers, I would say you are lucky.Nowadays its too difficult to find such teachers.

Ofcourse,these teachers have their own reasons for not getting through the exams.But still the pass percentage is alarming.A better preparation could have seen them getting through the exams.

Earlier(Say atleast some 10 years ago),if a student commits a mistake,he/she will be scared to face their teachers.It was, because of the respect,they had towards their teachers.Nowadays if a teacher beats a student with a stick,the next day the parents file a case against him.The situation was not the same atleast before 12 years.I have seen teachers beating students for almost half-an hour continuously.Neither the students complained about nor the parents.He is their son outside the campus, and he is a student inside the campus,where only the teacher has the control over the boy and not the parents.The main problem with the current generation teachers is they don't understand the basic difference between arrogance and responsibility.

During my school days,Vijayakumar sir(my Maths sir) used to bring a long stick while distributing papers.If the performance of the student is not upto mark,he will beat only once.It will be very painful.And the same Vijayakumar sir will discuss about cinema,songs,the marriage he attended the previous day etc. and he will even relate these to mathematical concepts while teaching.He handled mathematics to us when we were in 7th and 8th standards.There was also another teacher,who used to beat students,to 'impress' the lady staff. I have got beatings on such occasions and I was made to stand out for the whole period(naanga thaan outstanding students aache :D).I don't want to name him though :P.Hope these 2 examples differentiates between responsibility and arrogance.

Coming back to the adolescent age theory,nowadays we come across this disgusting news, about teachers, quite often.Illegal affair between the teacher and student.To be frank,it is natural to get attracted towards the other sex.Due to various reasons this attraction happens.I read this somewhere, why does a girl gets attracted towards a male teacher?It is because,next to their fathers,only the teachers show the same amount of care and control.Generally girl children will be very affectionate towards their fathers.Psychologically this brings a respect towards the male teacher.And an adolescent girl will not only by influenced by psychological factors,but also by 'biological' factors.These 2 factors together make them propose their love to their teachers.What a responsible teacher must do?He should make the girl understand her mistake and he should not stop with just advising the girl,instead, he should also keep her parents informed about this behavior of the girl.

This applies to male teacher and girl student issue.Nowadays,another disturbing news is hitting headlines in local papers.Woman teacher ran away with 11th standard boy,women teacher's illegal relationship with her student.I don't want to get into any psychological reason behind this.There can be only one reason for such relationships - lust.People who involve in such acts should be punished severely.Not only the teachers,but also the students.Another serious problem of this kind is,teachers giving sex torture to students,flirting with girl students etc.Such teachers are disgrace to the profession.I just have a simple question to these morons - 'will you accept if your sister/daughter undergo the same amount of torture?'. Society considers teachers above God(Matha,Pitha,GURU and God).It is difficult for everyone to be Gods,but atleast they can refrain from being demons.

A doctor can serve this society by treating poor people without getting money.An Engineer can serve this society in so many ways.A policeman,army man,writer etc., can serve the nation in their own ways.What makes the teachers special?A teacher can create a doctor,engineer,policeman,collector,MLA,MP,Prime Minister,President etc.The interest a teacher creates, in a student's mind, at an young age, will definitely influence him/her.A teacher can rewrite the fate of a student.He can prevent a student becoming an anti-social element.

Students will wish 'Good Morning sir' to English teacher, 'Vanakkam Thamizhannai' to Tamil teacher and 'Namasthe Guru ji' to Hindi teacher.This is a formality followed in schools and colleges.If the teacher really deserves it,students will do it whole heartedly,with real respect and affection.If not,they will tell a good morning in front of the teacher's face and will curse them at their back.Discipline is not something restricted to students,it very well includes teachers as well.If the teachers serve as a proper example,students will follow you.Good or bad,definitely a teacher's behavior influences students.

If you go to any school/college, you can find a bunch of students imitating their teachers.So naturally the teacher becomes a role model for the students.My only request to teachers - don't be a bad example.If you are going to be a bad example,you are spoiling a generation.Be a good example and inspire your students. Behave like Dr.Radhakrishnan,Dr.Abdul Kalam.I have my own Radhakrishnans and Abdul Kalams as an inspiration to me.

I studied in a small town called Tindivanam.There I had a Vijayakumar sir,from whom I learnt the meaning of professionalism,I had a Muthaiyyah ji from whom I learnt the meaning of social consciousness,I had a Sinthamani miss who taught me the effect of consistency,from my Arun Mozhi sir I could learn the effect of preparation,I had a Vijayaraghavan sir who served as an epitome of hardwork and professionalism.In college too, I had some good professors and lecturers.Nithya mam's name comes to my mind immediately.She was a friendly mam,she was not harsh,still she was strict.I had no fear towards her,I only had/have lot of respect for her. I learnt lot of things from my good teachers and am surviving with what they taught me.

I didn't write this article to insult the teachers.As I said earlier,teaching is a divine profession.Its getting spoiled because of some undeserving elements.This post is just an outburst against such elements and not against the teacher community.People who want to take up teaching profession,make it sure that you truly deserve the 'Namasthe Guruji' chants of your students.

And one more point,I didn't write anything against the students in this post.It doesn't mean the current generation students are saints.There are serious problems associated with them too.I will write about in a separate post.

Happy Teachers Day!!!!!


Sunday, September 2, 2012

சொன்னது நீ தானா ? - 1

நண்பர்களே,இதுவரை நான் தமிழில் காதல் கதைகள் எழுதியதில்லை.இது எனது முதல் முயற்சி. இது நிஜமல்ல வெறும் கதை.


                         Pic : courtesy link                                     

"I love you"

"ரமேஷ் நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லிட்டேன்,இது சரியா வராதுன்னு"

"காயு ப்ளீஸ்..நீ நல்லா யோசி,நம்ம பழகினது கண்டிப்பா  வெறும் friendshipப்பா இருக்க முடியாது..கொஞ்சம் யோ.." - என ரமேஷ் தொடங்க,அவன் பேசி முடிப்பதற்குள் காயத்ரி,

"ரமேஷ்,இத பத்தி நாம ஏற்கனவே பேசி இருக்கோம்.லுக் ரமேஷ், இன்னக்கி வரைக்கும் உங்களோட நான் அந்த எண்ணத்திலே ஒரு நாளும் பழகினதில்லை..Try to understand.. please, இனிமே இத பத்தி பேசி என்னை torture   பண்ணாதிங்க.."

 "நீங்க ஒரு பிரெண்டா எப்போ வேணும்னாலும் என்னை பார்க்க வரலாம்,என் கூட பேசலாம்..பட் இந்த மாதிரி எண்ணத்தோட இனிமே என்ன பார்க்க வராதிங்க..அப்படி வந்தா அதுவே நாம பார்க்கிற கடைசி தடவையா இருக்கும்"

சொல்லிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் காயத்ரி. ரமேஷ்,கவலை தோய்ந்த முகத்துடன் அந்த நீண்ட மைதனாத்தையே சற்று நேரம் வெறுப்புடன் பார்த்து கொண்டிருந்தான்.

*****

கால்லிங் பெல் சப்தம் கேட்டு,ரமேஷின் அம்மா கதவை திறந்தார்.

"ஹலோ ஆன்ட்டி..எப்படி இருக்கீங்க,என்ன விஷயம் ஆன்டி,போன் பண்ணி கூப்பிடற அளவுக்கு என்ன ஆச்சு? ரமேஷ் இருக்கானா?"

"இல்லை பிரேம்..நீயே அவன் ரூமுக்கு போயி பாரு..எப்படி இருக்குன்னு"

ரமேஷின் அறை முழுவதும் புத்தகங்கள். கல்கி,Agatha Christie,Charles Darwin,Jeffrey Archer,Chetan Bhagat,தி.ஜானகிராமன் , சுஜாதா, பாலகுமாரன் என ஏகப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் சரமாரியாகக் கிடந்தன.அவனிடமிருந்த புத்தகங்களின் தொகுப்பைப் பார்த்த பிரேமுக்கேக் கூட படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

"இவ்வளவு புத்தகத்தையும் படிச்சிட்டானா?"

"அதை ஏன் பா கேக்கற..ரமேஷ் ரெண்டு வாரமா வீட்டிலே யார் கிட்டேயும் சரியா பேசறதில்ல..காலைல பதினொரு மணிக்கு கிளம்பி ஆபீஸ் போறான்,சாயங்காலம் 5.30 க்கு வந்துடறான்..கிளம்பறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி வரைக்கும் ஏதோ ஒரு புத்தகத்த வாசிக்கிறான்..திரும்ப வந்ததும் நேரா இந்த ரூமுக்கு வர்றான்,மறுபடி கதவை சாத்திட்டு,படிக்க உக்காந்துட்றான்..சாப்பிடறப்போ மட்டும் தான் அவனை பார்க்கவே முடியுது"

"ஏன்?என்ன ஆச்சு?"

"கேட்டா,ஒண்ணுமில்ல,am alright..புத்தகங்கள் பழைய நண்பர்கள் போலன்னு சுஜாதா எழுதி இருக்கார்..அதை படிக்கிற சுகமே சுகம்னு வசனம் பேசிட்டு போயிடுறான்..என்னவோ நடந்திருக்கு.. ஏன் கிட்ட சொல்ல கூச்சப் படலாம்..நான் ஆயிரம் தான் அவன் கூட ஒரு சிநேகிதி மாதிரி பழகினாலும் கூட,அம்மா அம்மா தானே.. அதான் உன் கிட்ட கண்டிப்பா சொல்லி இருப்பான்,என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்கலாம்னு தான் வரச்சொன்னேன்."

"ஆன்ட்டி நானே அவன் கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு..சரி நீங்க கவலைய விடுங்க நான் பார்த்துகிறேன்.."

ரமேஷ் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக(Software Engineer) பணிபுரிகிறான்.சேர்ந்து ஓராண்டே ஆகிறது. காயத்ரி அவனுக்குக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் ஜூனியர்.

பிரேம், ரமேஷின் பால்ய சிநேகிதன்.ஒரே பள்ளியில் படித்தவர்கள்.இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே தேதியில் வேலைக்குச் சேர்ந்தார்கள்.கல்லூரி நாட்களிலேயே கூட ரமேஷுக்கு காயத்ரி மீதிருந்த காதல் பற்றி பிரேம் நன்கு அறிவான்.அப்போதே காயத்ரி ரமேஷின் காதலை ஏற்க மறுத்தது,என அனைத்தும் அறிந்தவன் தான் இந்த பிரேம் .

இவையெல்லாம் நடந்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது.ரமேஷைப் பற்றி பிரேமுக்குத் தெரியாத ஒரே விஷயம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரமேஷ் காயத்ரியிடம் மீண்டும் காதலைச் சொன்னது மட்டுமே.

"டேய் நீ என் கூட கொஞ்சம் வர்றியா..உன் கிட்ட பேச வேண்டி இருக்கு"

"எங்க?"

"நம்ம ஏரியா போலீஸ் பார்க் போலாம்"

"இல்லைடா ஒரு முக்கியமான defect fix பண்ண சொல்லியிருக்காங்க..இப்போ ஒரு status call வேற attend பண்ணனம்.."

"ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன் டா..இவரு ப்ரோஜெக்ட்லையே இல்லையாம்..இவரு status call,defect fix எல்லாம் பண்ண போறாராம்.."

"இது அப்படி இல்லை டா.." - ரமேஷ் பேச்சை பொருட்படுத்தாமல் பிரேம் கணினியை அணைத்தான்..ரமேஷ், மறுப்பு சொல்ல இயலாமல் வேறு வழி இன்றி பிரேமுடன் சென்றான்.

அந்த பூங்காவில் வெகு சிலரே இருந்தனர்.வழக்கம் போல அருகிலிருந்த கடையில் காபி வாங்கி குடித்துக் கொண்டிருக்கும்போது,


"சரி சொல்லு..என்ன பிரச்சினை.." - பிரேம் உரிமையுடன் கேட்டான்.

"யாருக்கு?"

"உனக்குத் தான் டா..என்ன டா,IT ல மார்க்கெட் சரி இல்லைன்னு சைடு பிசினஸ்ஸா புக் ஸ்டோர் ஏதாவது ஓபன் பண்ண போறியா?உன் ரூம் பூரா அவ்வளவு புஸ்தகம்.."

"ஓ வீட்டுக்கு போயிருந்தியா.அதெல்லாம் ஒண்ணுமில்லை டா பெஞ்ச் ல இருக்கனா,வெறுப்பா இருக்கு,அதான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிச்சிடலாம்னு முயற்சி பண்றேன்..மத்தபடி I am alright மச்சி..ஒன்னும் பிரச்சினை  இல்லைடா.."

ரமேஷ் சொல்லுவதை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தான் பிரேம்.குடித்த காபிக்கு பணத்தை கொடுத்துவிட்டு, சர்வ சாதாரணமாக,ரமேஷைப் பார்த்துக் கேட்டான்,

"சரி சொல்லு என்ன பிரச்சினைன்னு"

"ஒன்னும் இல்லை டா" - தனது காதலை காயத்ரி மீண்டும் நிராகரித்த கதையை விலாவரியாகச் சொல்லி முடித்தான்.

அனைத்தையும் பொறுமையுடன் கேட்டாலும்,பிரேமுக்கு இது சற்று அதிர்ச்சி தரும் செய்தியாகவே இருந்தது. ஏனெனில் கடந்த ஒரு வருடத்தில் ரமேஷ் ஒரு முறை கூட காயத்ரியைப் பற்றி தன்னிடம் பேசியதில்லை.

"அடப்பாவி!!!இதுக்காக மறுபடி காலேஜ் வரைக்கும் போனியா?என்ன டா இதெல்லாம்? நான் என்னவோ நீ அவளை மொத்தமா மறந்துட்டன்னு நினைச்சேன்,ஆனா நீ என்னடான்னா ஒரு தனி ட்ராக்ல போயிருக்க"

"எப்படி டா மறக்க முடியும்..ரெண்டு வருஷ லவ் ஆச்சே"

"ஆனா ஒன் சைடு லவ்(one side love) தானே மச்சி.."

"இருக்கலாம்..அவ என் கூட பழகினது வெறும் friendship தான்னு ஒதுக்கிட முடியாது பிரேம்" 

"டேய் நான் உன் கிட்ட பல தடவை சொல்லிட்டேன்..ஒரு பொண்ணு சிரிச்சிப் பேசறதை மட்டும் வச்சி அதை லவ்வுன்னு நினைக்கிறது முட்டாள்தனம்"

"ஹ்ம்ம்..வாஸ்தவம் தான்..ஆனா அவளுக்கு என் மேல நட்பையும் தாண்டி ஒரு உணர்வு இருக்குன்னு தான் தோணுது.."

"எதை வச்சி அப்படி சொல்ற நீ?"

ரமேஷ் சில விஷயங்களை விளக்கினான்..காயத்ரி தன்னுடன் பேசியவை, அவர்கள் இருவருக்குமிடையில் நடந்த சில விஷயங்கள் என அனைத்தையும் விவரித்தான். இதை கேட்டதும் இத்தனை நேரம் உபதேசம் செய்து கொண்டிருந்த பிரேம் சற்று குழப்பமடைந்தான்..பிறகு ஆத்திரமடைந்தான்..

"என்ன டா பொண்ணு அவ..இவ்வளவு தூரம் பழகிட்டு இது வெறும் பிரெண்ட்ஷிப்புன்னு சொல்றாளா? இந்த மாதிரி ஒரு கேவலமான பொண்ணு மிஸ் ஆனதே நல்லதுன்னு நினைச்சிக்கோ டா"

"டேய்..இன்னொரு முறை அவளை தப்பா பேசாத டா..ஆத்திரத்திலே ஏதாவது சொல்லிடுவேன்"

"இல்லை டா,இது உன்ன அலையை விட்டுட்டு பிஸ்கட் போட்ட மாதிரி இருக்கு..அதான்.." - என பிரேம் இழுத்தான்..  நிதானமாக பதிலளித்தான் ரமேஷ்,

"அவ வளர்ந்த சூழ்நிலைக்கு அவளுக்கு இதெல்லாம் சாதரணமாப் படலாம்..அவ நான் அவளுக்கு பொருத்தமானவன் இல்லைன்னு கூட நினைக்கலாம்..எனக்கு அவளை பிடிச்சிருக்கு,அதுக்காக அவளுக்கும் என்னை பிடிக்கனம்னு இல்லையே மச்சி..ஆனா ஒன்னு டா,She is a gem..இப்படி ஒரு நல்ல பொண்ணுக்கு என்னை பிடிக்கல.. அது ஒன்னு தான் என் வருத்தம்.."

"ஹ்ம்ம்.."

"அதான் கொஞ்சம் டிஸ்டர்ப்டா(disturbed) இருக்கு..இந்த கவலைய மறக்கனம்னு தான் ரெண்டு வாரமா புஸ்தகமா படிச்சி தள்றேன்.."

"நான் லவ் failure ஆனதால குடிக்கிறவன பார்த்திருக்கேன்..ஆனா படிக்கிறவன இன்னைக்கித் தான் பார்க்கிறேன்"

"என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய்"  - என வானத்தை நோக்கிக் கூறிய ரமேஷ்,

"நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்திலே இருந்து கவனத்தை திசை திருப்பனம்னா, நமக்கு பிடிச்ச இன்னொரு விஷயத்திலே கவனத்தை செலுத்தனம்.. குடிக்கறதோ,இல்லை மேல இருந்து குதிக்கிறதோ இதுக்கு ஒரு தீர்வாகாது.."

"இந்த வசனமெல்லாம் நல்லா வக்கனையா பேசு..இங்க இவ்வளவு பேசத் தெரியுதுல்ல..வீட்டிலே ஏன் டா எப்போ பார்த்தாலும் மூஞ்ச தூக்கி வைச்சிருக்க"

"இல்லை டா,அவ ஞாபகமாவே இருக்கு..அதான் யாரோடையும் பேச பிடிக்கல"

"அதெல்லாம் அப்படித் தான் இருக்கும்..நீ அவளை உன் மனசில இருந்து தூக்கி எறி..அது தான் உனக்கு நல்லது"

"அது அவ்வளவு சுலபம் இல்லை மச்சி..உனக்கென்ன ஈசியா சொல்லிட்ட..என் இடத்திலே இருந்து யோசிச்சிப் பாரு அப்போ புரியும்"

"இதுக்காக கூடுவிட்டு கூடு பாயவா முடியும்?அவ தான் உன்ன வேண்டாம்னு ஒதுக்கிட்டால்ல, அப்புறமும் என்ன டா feelings ..அவளை மறந்துட்டு போவியா..அதை விட்டுட்டு.."

"உனக்கெல்லாம் இது எங்க புரிய போகுது..எந்த பொண்ண பார்த்தாலும் இஷ்டத்துக்கும் திட்றவன் தான நீ..bloody misogynist "

"உனக்கு அட்வைஸ் பண்ணன் பார்த்தியா எனக்கு வேணும்..ஆனா ஒன்னு சொல்றன் நல்லா ஞாபகம் வைச்சிக்கோ மச்சி,எந்தப் பொண்ணும் ஒரு பையனோட உண்மையான பாசத்தைப் புரிஞ்சிக்கிறதே இல்லை"

ரமேஷ் முறைத்தான்..
 

"சரி உன் கிட்ட இன்னொரு விஷயம் கேட்கணம்னு நினைச்சேன்..ரூம்ல என்ன டா திங்க்ஸ்(things)  எல்லாம் பாக் பண்ணி வச்சிருக்க..எங்கயாவது டூர் போறியா என்ன?"

"பாக்கிங்(Packing) எல்லாம் முடிஞ்சுது..என்னோட books மட்டும் bagல வைக்கணம்"

"எங்க போறேன்னு கேட்டன்ல?"

"பெங்களூர்ல ஒரு short term project கிடைச்சிருக்கு..முதல்லையே கேட்டாங்க.. போக தேவை இல்லைன்னு தான் நினைச்சேன்.. ஆனா ஒரு சேஞ்சுக்கு பெங்களூர் போனா நல்லா இருக்கும்னு பட்டது.. அதான் காலையில தான் ஓகே சொன்னேன்.. இன்னும் அம்மா அப்பாக்குக் கூட சொல்லலை.."

"அடப்பாவி..பெங்களூர் போனா இந்த சம்பளம் பத்தாது டா..அம்மாக்கு தெரிஞ்சா கத்தப் போறாங்க பாரு.."

"பார்த்துக்கலாம் நம்ம அம்மா தானே..by the way,accommodation,allowance எல்லாம் தந்துடுவாங்க.. so செலவு பத்தி பிரச்சினை இல்லை.."

"எப்போ கிளம்பிறதா பிளான்?"

"சண்டே"

*****

மேஷ் பெங்களூருக்குச் செல்லும் செய்தியை காயத்ரியிடம் தெரிவிக்க விரும்பினான்.பிறகு மனதை மாற்றிக் கொண்டான்.காயத்ரியை மறப்பதென்பது இயலாத காரியம்.அவளிடம் பேசாமல் இருந்தாலாவது ஓரளவுக்கு மனமாற்றம் ஏற்படும் என நினைத்தான்.'நானாக அவளிடம் பேசினால் தான் உண்டு..அப்படியே ஊருக்குப் போறேன்னுச் சொன்னாலும் 'அப்படியா,ஓகே'னு சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவா..அவள் நிச்சயம் என்னிடம் பேசப்போவதும் இல்லை,என்னைப் பற்றி நினைக்கப் போவதும் இல்லை' - சற்று வருத்தப்பட்டான்.

பெங்களூரில் அலுவலகத்திற்குச் சென்ற உடன் தனது மேலாளர் கொடுத்தப் பணியை செய்ய ஆயத்தமானான். அங்கு தனக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண்ணின் இடத்திற்குச் சென்றான்.

"Hi..I am Ramesh.."

"Oh yeah..I am Pooja,was expecting you..Welcome"


ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.உயரமாக,சிவப்பாக மிக அழகாக இருந்த பூஜாவைக் கண்டதும் அவனுக்குக் காயத்ரியின் நினைப்புத் தான் வந்தது.அவனால் காயத்ரியை மறக்க முடியவில்லை.

அவன் பெங்களூரில் இருந்தாலும்,அவன் நினைப்பு முழுக்க காயத்ரியின் மீதே இருந்தது.ஒரு முழு நாள் அவளுடன் பேசாமல் இருப்பதே ரமேஷிற்கு மிகக் கடினம்.அவளும் அவனை தவிக்கவிட்டதில்லை.ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். மொபைல்,facebook,google talk,yahoo messenger என ஏதோ ஒன்றில் அவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்.ரமேஷ் தன் அலுவலகப் பணிகளுக்கிடையிலும் கூட காயத்ரியை மறந்ததில்லை.

ஆனால் காயத்ரியை பொறுத்த வரை நிலைமையே வேறு.காயத்ரியுடன் எப்போதும் பல பேர் அரட்டை அடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். ரமேஷும் அவர்களில் ஒருவன்.இது ரமேஷுக்குப் புரிய நீண்ட காலம் ஆயிற்று.கடந்த சில நாட்களாக ரமேஷ் அவளை தொடர்பு கொள்ளவில்லை.அவளும் ரமேஷைத் தொடர்பு கொள்ளவில்லை.

இப்போது சில நாட்களாக அவன் இணையத்தில் அரட்டை(chat) அடிக்கும் தளங்களுக்கும் செல்வதில்லை.இன்றோடு தனது செல்போன் எண்ணையும் மாற்றிவிட வேண்டுமென்று உத்தேசித்திருந்தான். ஒரு வேளை காயத்ரியிடமிருந்து ஒரு forward sms வந்தாலும் கூட அவளுக்கு தனது புதிய எண்ணைக் கொடுக்கலாம் என நினைத்தான். விரும்பிய நபரிடமிருந்து வரும் சாதாரண மெசேஜ் கூட நமக்கொரு தனி சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவளிடமிருந்து எந்த ஒரு அழைப்போ செய்தியோ வரவில்லை.ஏமாற்றமடைந்தான்.



இந்நிலையில் காயத்ரிக்கு கேம்பஸ் இன்டர்வியு மூலம் ரமேஷ் பணி புரியும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

-தொடரும்