Friday, December 30, 2011

மாஸ் மீடியா - 6

மாஸ் மீடியா -6
                                                            Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)

 'திசய கனவு' படத்தில் விக்ரம சோழன் கதாபாத்திரத்தில் கம்பீரமாய் தோன்ற வேண்டுமென்பதற்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டான்.ஒரு சில காதல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடித்துக்கொள்ளப்பட்டது.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கவில்லை. இதற்கிடையில் தீபாவளிக்கு வெளிவரவிருந்த தனது மாஸ் படமான 'பன்னீர் செல்வன்' படத்தை தர்மராஜே வாங்கிவிட்டார். படம் திட்டமட்டபடி தீபாவளிக்கு வெளியாகவில்லை. "படத்துக்கு promotion போதாது சரண்..நம்ம பேனர்ல மார்க்கெட் பண்ணா சப்ப படம் கூட சுப்பர் ஹிட்டாகும்.. அதனால படத்த அடுத்த மாசம் ரிலீஸ் பண்ணிடலாம்..அதுக்குள்ள நல்லா மார்க்கெட் பண்ணிடலாம்...." - என்று கூறி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தார் தர்மராஜ். இதில் சரணுக்கு சற்றும் உடன்பாடில்லை தான்.ஆனாலும் வேறு வழியில்லை ஏனெனில்,நல்ல விலை என்றதும் அந்த படத்தின் தயாரிப்பாளர், தர்மராஜுக்கு விற்றுவிட்டார்.

விவேக்கை கடுமையாக திட்டியதை எண்ணி வருந்தினான்.ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்பொழுது நடந்த வாக்குவாதம்:

"பாஸ் இந்த படத்த ஒத்துக்காதிங்க..ஆக்ரீமென்ட்ட நான் முழுசா படிச்சிட்டேன்.."  - விவேக்

"அப்போ நான் படிக்கலன்னு சொல்லுறியா?" - சரண்

"பாஸ் argue பண்றதுக்கு இது நேரமில்லை..இந்த படம் முடிக்கிறவரைக்கும் வேற எந்த படமும் commit  ஆகக்கூடாதுன்னு போட்டிருக்கு..அது மட்டுமில்லை ஒரு வேளை வேற படம் ஒத்துக்கிட்டாலோ இல்லை இந்த படத்திலே நடிக்க மறுத்தாலோ படத்துக்காக ஆன மொத்த செலவும் வட்டியோட திருப்பி கொடுக்கனம்னு போட்டிருக்கு..இது நல்லதுக்கே இல்லை.."

"விவேக்,இந்த படத்தோட பட்ஜெட் அதிகம்..அதனால ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும்..இதையெல்லாம் சகிச்சிகிட்டா தான் அடுத்த leagueல enter  ஆக முடியும்" - சற்று கடுமையாகவே சொன்னான் சரண்.

"அதுக்கு சொல்லல பாஸ்..நீங்க நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க.."  - என தொடர்ந்த விவேக்கை கோபமாக பார்த்த சரண்,

"எனக்கென்ன சினிமானா ஒண்ணுமே தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டியா விவேக்?You are a smart  PA.Agreed!!! பட் நீ என்கிட்டே வேலை பார்க்கிற அதை மறந்திடாதே..நீ இந்த 4  வருஷமாத்தான் எனக்கு PA.ஆனா அதுக்கெல்லாம் முன்னாடியே நான் சினிமாவிலே நிறைய பார்த்தவன்.இன்னைய தேதிக்கு சரண் படம்னா ஒரு மார்க்கெட் இருக்கு.. நீ எனக்கு புத்தி சொல்றத விட்டுட்டு உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.." - படபடவென பேசி பின் அமைதியானான்..விவேக்கும் மறுத்து பேசவில்லை..கடும் புயல் மழைக்கு பின் நிலவும் அமைதியைப் போல், அந்த அறையில் ஒரு வித அமைதி நிலவியது.பிறகு சுதாரித்து கொண்ட விவேக்,

"Sorry  பாஸ்..இனிமேல் இப்படி நடக்காது" - என்று பணிவாகவே பதிலளித்து விட்டு நகர்ந்தான்.

இப்படி பேசியதற்காக பல முறை வருத்தப்பட்டான் சரண்.தற்சமயம் படப்பிடிப்பும் இல்லை,வெளியாக வேண்டிய தனது படமும் வெளியாகவில்லை.இவை எல்லாம் சரணுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது.இது ஒருபுறமிருக்க தயாரிப்பாளர் தர்மராஜ் தனது தந்தைக்காக தேர்தல் பணிகளை கவனிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். சரணுக்கும் அரசியலில் சற்று ஆர்வம் உண்டென்றாலும் அதைப்பற்றி சிந்திக்க இது நேரமில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.இப்படியே தனது தேதியை வீணடிக்க கூடாதென்று நினைத்தான், தர்மராஜிடம் படப்பிடிப்பை துரிதபடுத்தும்படி கேட்க வேண்டுமென்று முடிவெடுத்தான்.தர்மராஜை அழைக்க தனது கைப்பேசியை எடுத்தான்,ஆனால் அது உடனே ஒலிக்க தொடங்கிவிட்டது.அழைத்தது சாக்ஷாத் தர்மராஜே தான்.உடனே சரணை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

உடனே புறப்பட்ட சரண்,தர்மராஜின் அலுவலகத்தை அடைந்தான்.

"சரண் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனம்" - ஒரு வித்தியாசமான தொனியில் பேசினார் தர்மராஜ். எதுவும் புரியாமல் விழித்தான் நமது ஹீரோ சரண்.

"நம்ம தொகுதியிலே இடைத்தேர்தல் வருது.இந்த முறை அப்பா இங்க MP  போஸ்ட்டுக்கு நிற்கிறாரு.."

"சரி,அதுக்கு?" - ஒன்று புரியாத சரண்

"Opposition candidate கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஆளு தான்.அதனால நீங்க ஒரு உதவி செய்யணம்"

"நான் என்ன உதவி செய்ய முடியும் தர்மராஜ் சார்?எனக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம்" - தெளிவாகவே சொன்னான் சரண்.

"சரண்,அரசியல்ல ரொம்ப முக்கியமான விஷயம் கூட்டம் சேர்க்கிறது தான்..என்னதான் காசு கொடுத்தும், பிரியாணி வாங்கி கொடுத்தும் கூட்டம் சேர்த்தாலும்,அது எல்லா கட்சிக்காரனும் செய்யறது தான்.நாம எப்போவுமே கொஞ்சம் differentன்னு உங்களுக்கு தெரியுமே"

"அதுக்கு என்னை என்ன செய்ய சொல்றீங்க Mr.தர்மராஜ்?" - என்று கேட்டான் சரண்.சரணுக்கு தர்மராஜின் நோக்கம் ஓரளவுக்கு புரிய ஆரம்பித்தது.

"நீங்க மக்கள் கிட்ட கொஞ்சம் பாப்புலரான ஆளு..நம்ம கூட படம் வேற பண்றீங்க..உங்களுக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு..நீங்க மட்டும் அப்பாவுக்காக இங்க பிரச்சாரம் பண்ணா வரலாறு காணாத வோட்டு வித்தியாசத்துல அப்பா ஜெய்ச்சிடுவார்"

                                                     ***************************


தவி இயக்குனராக நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தான் ஸ்ரீதர்.ஊரிலிர்ந்து கிளம்பும்போது இயக்குனராகியே தீர வேண்டுமென்கிற லட்சியத்தில் தான் கிளம்பினான்.ஒரு திரைப்படத்தை இயக்குவது என்றால் ஏதோ மேடை நாடகத்தை இயக்குவது போலத்தான் என்றெண்ணி கிளம்பி வந்த ஸ்ரீதருக்கு, டைரக்ஷனில் எத்தனை இருக்கிறதென்பது உதவி இயக்குனராக பணிபுரியும்போது தான் புரிந்தது. இரவும் பகலும் ஓயாமல் உழைத்தாலும் சரி,கதாநாயகனின் காலணிக்கு பாலிஷ் போடுவதென்றாலும் சரி, கதாநாயகியின் நாயை கவனித்துக் கொள்வதென்றாலும் சரி சற்றும் கலக்கமடைந்துவிடவில்லை.இயக்குனராகியே தீரவேண்டுமென்கிற தனது லட்சியத்தை அடையும் நாள் நெருங்கிவிட்டதென்றே நினைத்தான்.

அப்போது இசையமைப்பாளருடன் சுகுந்தன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.படத்தின் முழுக்கதையையும் விவரித்துக் கொண்டிருந்தார்,நீண்ட நேரம் உரையாடிய பிறகு வந்தார், ஸ்ரீதருக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

"ஸ்ரீதர் சொன்ன மாதிரி நூறு பொம்மை கழுதையை கொண்டு வந்துட்டியா?" - சுகுந்தன்

"எல்லாம் ரெடி சார்.நாளைக்கு ஷாட் எடுக்கறப்போ எல்லாத்தையும் வெளியில கொண்டு வந்துடலாம்." -  ஸ்ரீதர்

"Good good!!!சரி வா இப்போ கிளம்பலாம்..காலையில சீக்கிரம் வர வேண்டியிருக்கும்" - இருவரும் காரில் அமர்ந்தார்கள்.

"சார் எனக்கொன்னு மட்டும்  சுத்தமா புரியவே இல்லை" - ஸ்ரீதர்

"என்ன பா..என்ன புரியல?" - சுகுந்தன்

"மியுசிக் டைரக்டர் கிட்ட பாட்டு வர்ற situation மட்டும் explain  பண்ணா போதாதா?எதுக்கு மொத்த ஸ்க்ரிப்ட்டும் விளக்கணம்?" - ஸ்ரீதர்

"என்னப்பா இப்படி கேட்டுட்டே?நீ நினைக்கிற மாதிரி மியுசிக்னா சும்மா ஏதோ ரெண்டு டூயட்,ஒரு கில்மா பாட்டு,ஒரு டப்பாங்குத்து போட்டுட்டு போறதில்லை.. Music is lot more than தட்" - சுகுந்தன்

"என்ன சார்,2.30 மணி நேர சினிமாவிலே ஒரு அரைமணி நேரம் தான் பாட்டு..அதுக்கு இவ்வளவு importance அவசியமா?" - ஸ்ரீதர்

"ஸ்ரீதர்,இது ரொம்ப தப்பான ஒரு approach ..First  நீ சில விஷயத்த புரிஞ்சிக்கோ..ஒரு சூழ்நிலைக்கேற்ப பாட்டு போடறது ஒரு கலை..இந்த ஆர்டிஸ்ட்டுக்கு இந்த singer  பாடினா நல்லா இருக்குமென்கிற அளவுக்கு ஒரு இசையமைப்பாளர் யோசிக்கணம்.அதோட முக்கியம் சிச்சுவேஷனோட கரெக்டா பொருந்தனம். உதாரணத்துக்கு நீ வெள்ளி விழா படத்துல வர்ற "காதோடு தான் நான் பாடுவேன்"(click here to watch the song) பாட்ட எடுத்துக்கோ.. அந்த பாட்டு கேட்டிருக்கல்ல?"

"கேட்டிருக்கேன் சார்..நம்ம L R ஈசுவரி மேடம் பாடினது"

"Yes ..மியுசிக் டைரக்டர் யாருன்னு தெரியுமா?"

"என்ன சார் இது தெரியாதா..V Kumar தானே!!"

"கரெக்ட்..எங்க MSVன்னு சொல்லிடுவியோன்னு பயந்தேன்..அந்த பாட்டு எவ்வளவு melodiousஆ இருக்கும்.. அந்த பாட்டுக்கு,குமார் நினைச்சிருந்தா சுசீலா மேடமை பாட வைச்சிருக்கலாம்..ஆனா அவர் கொஞ்சம் வேகமான பாட்டெல்லாம் பாடுற ஈஸ்வரி மேடைமத் தான் select  பண்ணார்..அதான் ஒரு இசையமைப்பாளரோட sense of  observation..சுசீலா குரலோட ஈஸ்வரி மேடம் குரல் தான் அந்த பாட்டுக்கு பொருத்தமா இருக்கும்னு நான் சொல்றேன்..நீ என்ன சொல்ற?"

"இது வரைக்கும் நான் இப்படி யோசிச்சதில்லை..ஆனா L R ஈஸ்வரி மேடம் பாடினதோட நல்லா யாராலையும் அந்த பாட்ட பாடிட முடியாது"

"அந்த படத்தை டைரக்ட் பண்ண பாலச்சந்தர் சாருக்கு எப்போவுமே ஒரு நல்ல இசைஞானம் உண்டு"

"ஆமாம் சார்..அவரோட சிந்து பைரவி படத்திலே டிரைவரா வர்ற கவிதாலயா கிருஷ்ணன் கூட சங்கீத ஞானம் இருக்கிறவரா காட்டியிருப்பாரு.. அந்த scene(click here to watch the scene) பிரமாதமா இருக்கும் சார்..He is a real genius!!!..அதனால தான் MSV யோ இளையரஜவோ இல்ல மரகத மணியோ இல்ல நம்ம ரகுமானோ,யாரு மியுசிக் போட்டாலும் ஒரு class  இருக்கும்"

"Yes ..அப்படி பட்ட பாலச்சந்தர் சார் ஒரு மியுசிக் டைரக்டரோட முழுத்திறமையையும் பயன் படுத்துவார்..ஒரு பாடலாசிரியர் கிட்டயோ ஒரு மியுசிக் டைரக்டர் கிட்டயோ ஸ்க்ரிப்டை முழுசா விளக்குவாரு..அவர் மட்டுமில்லை இன்னும் சில டைரக்டர்சும் இப்படி செய்யறதுண்டு"

சுகுந்தன் பேசுவதை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர்,அப்படியா என்பது போல் பார்த்தான்.

"நீ பாட்டைப் பத்தி மட்டுமே பேசறியே BGM பத்தி உனக்கு கொஞ்சம் கூட யோசனையே வரலையா என்ன?பின்னணி இசை ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சிக்கோ..இப்போ எல்லாம் நிறைய மியுசிக் டைரக்டர்ஸ் பாட்டுல வாய்ச(voice) cut பண்ணிட்டு டியூன பின்னாடி ஓட விடறதுக்கு பேரு தான் BGMன்னு நினைச்சிட்டிருக்காங்க.. ஒவ்வொரு மூட்கும் எத்த மாதிரி இருக்கணம் மியுசிக்..action scenes வர்றப்போ கொஞ்சம் பரபரப்பா இருக்கணம், emotional scenes வர்றப்போ மனச உருக வைக்கிற மாதிரி இருக்கணம்,detective மாதிரியோ இல்ல suspense சீன்லையோ,audience அமைதியா உணர்ற மாதிரி இருக்கணம் ஆனா அதே சமயம் ஒரு haunting BGM இருக்கணம்,சத்தம் அதிகமா இருக்க கூடாது,ஒரு sensual - love making situation பொறுத்த வரைக்கும்,ஒரு போதை ஏத்திற மாதிரி BGM இருக்கணம்..இந்த மாதிரி சீன்ல சிணுங்கல் சத்தத்துல அதிகமா கவனம் செலுதிட்டா,அழகா ரீச் ஆக வேண்டிய காமம்,ஆபாசமா மாறிடும்,அது சில நேரத்திலே அருவருப்பாவும் போயிடும்..  " என்று ஒரு குட்டி சொற்பொழிவே நடத்தி முடித்தார் சுகுந்தன்.

இத்தனை விஷயங்களையும் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மெய்சிலிர்த்து போனது.சுகுந்தன் சொன்ன அத்தனை விஷயங்களையும் கற்பனை செய்து பார்த்தான்.சிறிது நேரம் பேச்சே வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பிறகு சுய நினைவு வந்தவனாய் பேசத்தொடங்கினான்,

"சார்,ஆனா Background musicன்னு சொன்னதுமே இளையராஜா தான் சார் என் நினைப்புக்கு வர்றார்"

"அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச ஒரு பொக்கிஷம்!!!கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரம்ன்னு கூட அவரைச் சொல்லலாம்..உனக்கு பின்னணி இசைன்னா அவர் ஞாபகத்துக்கு வர்றார்,நிறைய பேருக்கு இசைனாலே அவர் தான் ஞாபகத்துக்கு வருவார்,நான் உட்பட"

பிறகு இருவரும் அமைதியானார்கள்,மிதமான வேகத்தில் கார் நகர்ந்து கொண்டிருந்தது.


                                                     ***************************


னது சமீபத்திய படங்கள் பெரும் வெற்றி அடைந்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான் வாசு.இந்த உற்சாகமிகுதி  மெல்ல மெல்ல தலைக்கனமாக மாறியது. தயாரிப்பாளர் கண்ணப்பனின் அடுத்த படத்தில் வாசு தான் ஹீரோ. கண்ணப்பனும் வாசுவும் விரைவிலேயே நண்பர்களாகி விட்டார்கள். ஏனென்றால் இருவருக்கும் அத்தனை நல்ல பழக்கங்களும் உண்டு.இருவரும் தோட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

"வாசுன்னா வெற்றி வெற்றின்னா வாசு" - வாசு

"ஆமாம் தம்பி உங்க சமீபத்திய படமெல்லாம் சூப்பர் ஹிட்.சில்வர் ஸ்டார் வாசு தொட்டதெல்லாம் Gold ஆகிற நேரமிது" - கண்ணப்பன்

"இப்போ மட்டுமில்ல, இனிமே நான் தான் நிரந்தரமான டாப் ஹீரோ,எனக்கு ஈடு கொடுத்துட்டிருந்த ஒரே ஹீரோ சரண் தான்..இப்போ அவனும் field out...I am an incomparable Star..Silver Star" - வெறி பிடித்தவனை போல் கூச்சலிட்டான் வாசு.கண்ணப்பன் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. இப்படி பல சில்வர் ஸ்டார்களை பார்த்தவர் தான் இந்த கண்ணப்பன்.சில ஸ்டார்களுக்கு மது கூட ஊற்றி கொடுத்துத் தான் இன்றைக்கு தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

"Mr.கண்ணப்பன் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்" - வாசு

"என்ன?" - கண்ணப்பன்

"நானே ஒரு படம் டைரக்ட் பண்ண போறேன்..தமிழ் சினிமால...ம்ஹும்ம் இந்திய சினிமா சரித்திரத்திலேயே இப்படி ஒரு படம் வந்ததில்லைன்னு சொல்ற அளவுக்கு இருக்கும் அந்த படம்"

"தம்பி உங்களுக்கு ஜாஸ்தி ஆயடிச்சுன்னு நினைக்கிறேன்..நான் கிளம்பறேன்..நாளைக்கி காலைல பார்க்கலாம்" - வாசு போதையில் உளறுகிறான் என்றெண்ணி கிளம்ப நினைத்தார் கண்ணப்பன்.

"கண்ணப்பன் சார்,என்ன மப்புல பேசறன்னு பார்க்கிறீங்களா?நான் எப்போவும் steady.. இன்னைக்கி நேத்து இல்லை நானும் ரொம்ப நாளாவே ஒரு படம் எடுக்கனம்னு யோசிச்சிட்டிருக்கேன்..எனக்கிருக்கிற டேலண்ட கரெக்டா யூஸ்  பண்ற அளவுக்கு எந்த டைரக்டருக்கும் சரக்கில்லை சார்"

"தம்பி நீங்க டைரக்ட் பண்ணியே தீரனமா?தெளிவாத்தான் பேசறிங்களா?" - கண்ணப்பன் சற்று தெளிவாகவே கேட்டார்

"Yes ofcourse!!!நீங்க தயாரிக்கப் போற படத்தை நான் தான் இயக்கப் போறேன்..அப்போ தான் இந்த வாசு தமிழ் சினிமாவுக்குக் கிடைச்ச ஒரு மாபெரும் கலைஞன்னு தெரியும்"

இதை சற்றும் எதிர்பாராத கண்ணப்பன் திக்குமுக்காடிப் போனார்..இவரை வைத்து படம் பண்ணும் எண்ணத்தையே மாற்றி கொள்வது தான் நல்லதோ என்று கூட சிந்திக்க தொடங்கி விட்டார்..ஆனால் படம் பூஜை கூட போடவில்லை..வெறுமனே இவரை வைத்து படம் தயாரிக்கிறோம் என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டதற்கே படத்தை பல கோடி கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள்(distributors) நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு வந்தது இவர் நினைவுக்கு வந்தது..அப்போது அங்கே அமர்ந்திருந்த வாசுவின் காரியதரிசி நரேஷ்,

"வாசு சார் நீங்க டைரக்ட் பண்ணலாம்,ஆனா ரிஸ்க்கும் எடுக்க தேவை இல்லை..அதுக்கொரு ஐடியா இருக்கு.."



                                                                                                                                   (தொடரும்...)




No comments: