Wednesday, November 23, 2011

மாஸ் மீடியா - 3

மாஸ் மீடியா - 3
Start Camera Action


முதலாம் பாகத்தைப் படிக்க இங்கே செல்லவும் (click here)


இரண்டாம் பாகத்துக்கு இங்கே செல்லவும்(click here)


னக்கே உரிய பாணியில் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தான் வாசு. ஆளை மயக்கும் வாசம் வீசும் சென்ட் அடித்துக் கொண்டான்.பார்ட்டி வேர் டிரஸ்சஸ் என்று சொல்லப்படும் உடைகளை அணிந்திருந்தான்.பெண்களின் அலங்காரத்துக்குத் தான் வெகு நேரம் பிடிக்கும் என்றில்லை,பெண்களை எப்படியாவது மயக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களுக்கும் வெகு நேரம் பிடிக்கும்.வரிசையாக விதவிதமான கார்கள் வந்து நின்றன.சில முக்கியப் பிரமுகர்கள் வந்திறங்கினார்கள்.ஒரு சில பத்திரிக்கையாளர்களும் காணப்பட்டனர்.எத்தனை பேர் வந்தாலும் அவன் ஆவலுடன் எதிர்ப்பார்த்தது என்னவோ ஜோயித்தவைத் தான்.அவன் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

கருப்பு நிற BMW காரில் பந்தாவாக வந்திறங்கினாள் ஜோயித்தா.கருப்பு நிற புடவை அணிந்து,அதற்கு பொருத்தமான கருப்பு நிற ப்ளௌஸ் அணிந்து ஒரு அழகிய சிற்பம் போல் நடந்தாள்.தங்கம் போன்ற அவளது நிறத்துக்கு இந்த கருப்பு நிற ஆடை கச்சிதமாகப் பொருந்தியது.பெண்கள் அதிகமாக ஆடை அணிந்தாலும் கூட அழகாகத் தான் தெரிவார்கள் என்று போதையில் தத்துவம் கூறினான் கூட்டத்தில் நின்ற எவனோ ஒருவன். கவர்ச்சியான உடை அணிவதற்கும் ஆபாசமாக உடை அணிவதற்கும் நிறையவே வேறுபாடு உள்ளது.ஜோயித்தாவை கண்டு பெரும்பாலானோர் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார்கள்.அவள் பின்னால் மாலதியும் நடந்தாள்.மாலதியும் அழகு தான்.சூரியன் உதித்ததும் மற்ற நட்சத்திரங்கள் மறைந்து விடுவதைப் போல, ஜோயித்தாவின் அழகு மற்ற அனைவரின் அழகையும் மறைத்து விட்டது.ஜோயித்தா மலர்ந்த முகத்துடன் மாலதியிடம் மெலிதான குரலில் பேசிக்கொண்டே நடந்தாள்:

"மாலு அந்த லூசு இப்போ நான் அவன் பக்கம் திரும்பினதும் தலை முடிய சரி பண்ற மாதிரி சீன் போடுவான் பாரேன்" - என்று வாசுவைப் பற்றி சொல்லிக்கொண்டே நடந்தாள், முகத்தில் புன்னகையுடன் மற்றவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டே.

"அட ஆமாம்" - என்றாள் மாலதி வாசுவை பார்த்தபடி 

" Idiot,அவன பாக்காத டீ.என்ன பாரு அந்த மானம் கெட்டவன எவ்ளோ திட்டினாலும் முகத்துல ஒரு smile maintain பண்றேன்ல,அதே மாதிரி நீயும் maintain பண்ணு" - என்றாள் அவளுடைய வசீகரப் புன்னகை மாறாமல்.

"ஓகே,ஆனா அவன் இப்போ இருக்கிற கண்டிஷன்ல இதை எல்லாம் கவனிக்க மாட்டன்.சரக்கே அடிக்க ஆரம்பிக்கல அதுக்குள்ள fullஆ போதை ஏறிப் போச்சு..உன்ன பாத்ததுக்கே" - என்று சொல்லி கிண்டலாகச் சிரித்தாள் மாலதி.

சிரித்துக் கொண்டே நடந்தாள் ஜோயித்தா.நேரே சென்று வாசுவுடன் கைகுலுக்கினாள்.இதற்காகவே காத்திருந்தவனைப் போல ஆர்வமாக அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டான் வாசு.சற்று சிரமத்துடன் கையை விடுவித்துக் கொண்டாள் ஜோயித்தா.

"கங்க்ராட்ஸ் மிஸ்டர் வாசு.ஹாட்ரிக் ஹிட்ஸ் குடுத்திருக்கீங்க..இப்போ இருக்கிற கண்டிஷன்ல ஹாட்ரிக் ஹிட்ஸ் குடுக்கறது ரொம்ப பெரிய விஷயம்"

"Yeah, you know what we have put in a lot of hardwork. Especially அந்த ஓடற ட்ரெயின்ல இருந்து jump பண்ற scene சீன் இருக்கே பயங்கர ரிஸ்க்" ௦-என்று அளந்து கொண்டே போனான் வாசு.

"டூப் போட்டு நடிச்சிட்டுப் பேச்ச பாரு" - என முனுமுனுத்தாள் ஜோயித்தா.

"என்ன சொன்னீங்க"

"இல்ல உங்க ஹர்ட்வொர்க்க நினைச்சாலே ஆச்சரியமா இருக்குனு சொன்னேன்"

"Oh is it?Ok come,lets have drinks!!- என சொல்லிக்கொண்டே மது அருந்தத் தொடங்கினான் வாசு.

"ஹ்ம்ம் குடிங்க ஜோயித்தா" - என அவளையும் வற்புறுத்தினான் 

"நோ தேங்க்ஸ். இன்னைக்கி நவராத்திரி,சோ நான் ட்ரிங்க்ஸ் சாப்பிட விரும்பலை"

அவளின் இந்த பதிலைப் பொருட்படுத்தாமல் குடிக்கத் தொடங்கினான் வாசு.

"You look simply mindblowing.You are hot Joyithaa.Very hot" - என்று வழியத் தொடங்கினான்.

"ஒ இஸ் இட்" என கூறி பொய்யாக சிரித்தாள் ஜோயித்தா.

"Come lets go for a walk" - என அவள் தோள் மீது கை போட்டான் வாசு.

செல்போனில் பேசுவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டே ஜோயித்தா அவனிடமிருந்து விலகி நடந்தாள்.

"பேசிகிட்டிருக்கன்ல எங்க போற" என கையைப் பிடித்து இழுத்தான் வாசு.

ஓங்கி ஒரு அரை அறைந்தாள்."பொறுக்கி நாயே நீயெல்லாம் ஒரு டாப் ஹீரோ வேற industryல.என்னமோ நீதான் நடிச்சி கிழிக்கற அளவுக்கு industryல உன்னைப் பத்திப் பேசிக்கிறாங்க.ஆனா பார்க்கற பொண்ணெல்லாம் உனக்கு வேணும். தூ இப்டி வாழறதுக்கு.." - இப்படி ஒரு காட்சி அவள் மனதில் ஒரு சில வினாடிகளில் ஓடி முடிந்தது. "Come on darling" - என்று வாசு அனைத்துக் கொள்ள முயற்சித்தப் பொழுது,திடீரென முழிப்பு வந்ததைப் போல் தன்னை உடனடியாக விடுவித்துக் கொண்டு,

"சாரி வாசு,இப்போ தான் போன் வந்தது,ஜானிக்கு உடம்பு சரி இல்லையாம்.நான் உடனே போகனம்" - என்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

"Hey ஜோயித்தா ஜானி யாரு" 

"என் வீட்டு நாயி" - என சற்று கடுமையாக கூறிவிட்டு நடந்தாள் ஜோயித்தா.

காரில் கோபமாக அமர்ந்திருந்த ஜோயித்தாவிடம் பேச்சுக் கொடுத்தாள் மாலதி.

"ஒரு வழியா தப்பிச்சிட்ட போல. ரிலாக்ஸ் டியர்.இந்தா இதைக் குடி,உன் கோபமெல்லாம் சீக்கிரமே போய்டும்"

"ஹ்ம்ம்" - ஸ்டைலாக க்ளாசில் ஊற்றி மதுவருந்தத் தொடங்கினாள்

"ஏன் ட்ரிங்க்ஸ் சாப்பிடமாட்டேன்னு சொன்ன அவன் கிட்ட?"

"குடிக்காம இருக்கிறப்பவே இப்படி நடந்துக்கிறானே,ஒரு வேளை குடிச்சிருந்தன்னு வச்சிக்கோ,நாளைக்கு காலைல அவன் பெட்ரூம்ல இருந்து கிளம்பி வர்ற நிலைமையே வந்திருக்கும். Bloody Womanizer :x"

"ஆனா இண்டஸ்ட்ரீல இவன மாதிரி நிறைய வாசு இருக்காங்க" - என்றாள் மாலதி.

"அதுக்காக இவன் செய்யறது சரின்னு சொல்றியா? இல்லை இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் என்ன போக சொல்றியா?"  - என்று பொங்கினாள் ஜோயித்தா.

"அப்படி சொல்லல.. அங்க நிறைய பத்திரிக்கைக்காரங்க,மீடியா ஆளுங்கல்லாம் இருந்தாங்களே அவங்க முன்னாடி கூச்சல் போட்டிருக்கலாம்ல"

"வெறும் நாலு பேருக்குத் தெரிஞ்ச விஷயத்த நாடே தெரிஞ்சிக்கணம்.என்னையும் அந்த வாசுவையும் வச்சி மீடியால ஒரு ரெண்டு மூணு வாரம் கவர் ஸ்டோரி ஒடனம்.இதானே உன் எண்ணம்?"

"அதுவும் ஒரு வித பப்ளிசிட்டி தான ஜோயித்தா" என்றாள் மாலதி, சற்றே குறும்புடன்.

"இதுவும் ஒரு பொழப்பு..நீ என் பொறுமய ரொம்ப சோதிக்கிற மாலு..Stop it please"


"ஆல்ரைட் டியர்,ரிலாக்ஸ் ரிலாக்ஸ்".


                                                     ***************************

றத்தாழ ஒரு வருடமாகி விட்டது ஸ்ரீதர் சென்னைக்கு வந்து.பல விதமான மனிதர்களையும் பார்த்து விட்டான்.தன்னைப் போல் இயக்குனராகும் கனவுடன் வந்த பலர் சிங்கிள் டீக்கே அவஸ்தைப் படுகிறார்கள், இசையமைப்பாளர் கனவுடன் வந்தவன் ரோட்டோரப் பாடகனாகத் திரிகிறான்,இவர்களை மணிரத்தினத்திடமும் ஏ.ஆர்.ரகுமானிடமும் அழைத்துச் செல்கிறேன் பேர்வழி என்று ஏமாற்றி பிழைப்பவன் பெனஸ் காரிலும் ஏ.சி அறையிலும் ஆனந்தமாக வாழ்வைக் களிக்கிறான்..ஆனால் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலையில் வாழ்ந்தவர்கள் சிலர்  தங்கள் அபார திறமையினாலும்,விடா முயற்சியினாலும்,இறைவன் அருளாலும் மாபெரும் இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் ஆன வரலாற்றையும் தெரிந்து கொண்டிருந்தான் ஸ்ரீதர்." 'நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்' என்ற எண்ணம் கொண்டவன் உயர்ந்த நிலைக்குச் செல்கிறான்,தடைகற்களை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றத் தெரியாமல் மனதால் தளர்ந்து போபவனே தோற்றுப் போகிறான்" - என்று உறுதியாக நம்பினான் ஸ்ரீதர்.

பல முக்கியப் புள்ளிகளின் அறிமுகம் அவனுக்குக் கிடைத்திருந்தாலும்,ஜோயித்தாவின் அறிமுகம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது.ஜோயித்தா,மற்றவர்களைப் போல் துணை நடிகர்களை கேவலமாக நடத்த மாட்டாள். ஸ்ரீதரின் கள்ளம் கபடமற்றப் பேச்சு அவளுக்கு ரொம்பவே பிடித்து விட்டது.ஸ்ரீதருக்கும் ஜோயித்தாவுக்கும் இடையில் ஒரு உன்னதமான நட்பு உருவாகி இருந்தது.லொகேஷனில் இருவரும் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் நகைச்சுவையாகப் பேசுவது வழக்கம்.அப்படித்தான் அன்றும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"ஸ்ரீதர்,அந்த பைக்குள்ள என்ன வச்சிருக்க? உன்ன பாக்கறப்போ எல்லாம் கேட்கனம்னு நினைப்பேன்,ஆனா மறந்துடுவன்.எப்பவுமே இந்தப் பையும் கையுமா அலையிறியே என்ன விஷயம்" - சற்று ஆர்வத்துடனே கேட்டாள் ஜோயித்தா.

"என்னோட எதிர்காலமுங்க" - என்றான் முகத்தில் ஒருவித மலர்ச்சியுடன்.

"எதிர்காலத்த பைக்குள்ளயே அடிச்சி வச்சிருந்தா எப்படி?அது என்ன மாதிரியான எதிர்காலம்ன்னு என்கிட்டே சொல்லலாமா சார்" - என்றாள் சற்றே செல்லமாக.

"உங்க கிட்ட சொல்லாமலா.தமிழ் சினிமால பெரிய டைரக்டர் ஆகர ஆசைல கிராமத்துல இருந்து கிளம்பி வந்தேன். நான் எழுதி வச்சிருக்கிற கதை இதெல்லாம்.எல்லாம் என்னோட ஸ்கிரிப்ட்"

"டைரக்டர் ஆக வந்தீங்களா?நீங்களா? நீங்க சொந்தமா ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி இருக்கீங்களா?" - என்று அவள் ஆச்சர்யமாகக் கேட்டது ஸ்ரீதருக்கு வியப்பைத் தரவில்லை."அப்புறம் ஏன் துணை நடிகனானீங்க?"

"வேற வழி இல்லாமத் தான்.நம்பி வந்தவன் டாட்டா காட்டிட்டான்.காதர் பாய் மட்டுமில்லைன்னா தெரு தெருவா நாய் மாதிரி அலைஞ்சிட்டு ஊரு போயி சேர்ந்திருப்பன்.ஏதோ அவர் புண்ணியத்துல இன்னக்கி இந்த நிலைமைலாச்சு இருக்கேன்"

"அப்போ அவர் தான் உங்களைக் கெடுக்கறதா?" - என்றாள் சற்று கிண்டலாக.

"என் கெட்ட நேரம் பார்த்திங்களா,என்னால அட்லீஸ்ட் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரா கூட ஆக முடியல.என் கதைய கேட்டுட்டு நல்ல இல்லைன்னு சொன்னாக் கூட பரவாயில்லை.அதை கேட்கவே ஆளில்லைன்னு நினைக்கர்ப்போத் தான் ஒரு சின்ன வருத்தம்.."

"எங்க எதாச்சு ஒரு கதைய சொல்லுங்களேன் பார்ப்போம்.For time being நான் free தான்.வருங்கால இயக்குனர் என்ன கதை வச்சிருக்காருன்னுத் தான் பார்ப்போமே"

திடீரென ஸ்ரீதருக்குள் ஒரு புதுவித உற்சாகம் பிறந்தது,"நிறைய கதை இருக்கு,எதை சொல்றது மேடம்",என்று பக்குவமாகக் கேட்டான்.

"வித்தியாசமா எதாச்சு ஹீரோயின் oriented subject இருந்த சொல்லுங்களேன்.நானே உங்களை டைரக்டர் ஆக்கிடறேன்" - என்ற அவளது குரலிலிருந்த கிண்டலை உணர்ந்தாலும்,கோடம்பாக்கத்தில் தன கதையை கேட்க விரும்பிய ஒரே ஜீவன் ஜோயித்தா தான் என்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

"இருக்குங்க.Infact ஏன் கிட்ட இருக்கிறதுலேயே அது தான் பெஸ்ட்.இது ஒரு Musical Thriller"

"Interesting Genre" - என்றாள் உண்மையாகவே ஆர்வத்துடன்.

"ஆமாம் மேடம்.மியூசிக் தான் படத்துல மெயின்.கதை மியுசிக்க சுத்தி தான் நடக்கும். இது தான் ஒபெநிங் சீன்.ஒரு பெரிய கூட்டம்,ரொம்ப பெரிய கூட்டம்,ஆடிடோரியம்ல கை தட்டி ஒரே என்ஜாய் பண்றாங்க.யாரையோ எதிர்பார்த்து மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்யுது.அப்போ தான் camera stageக்கு move ஆகுது.ஹீல்ஸ் போட்டிருக்கிற கால்ல இருந்து cameraவ மேல கொண்டு போகறோம்.நீல கலர் சுடிதார்ல ஒரு தேவதை ஒரு மயக்கற வசீகரமான குரல்ல 'நான் பூமிக்கு வந்த வானவில்'னு பாடறாங்க..அந்த தேவதை..."

"நான் தானே?கதையோட சேர்த்து கவிதையும் எழுதுவிங்களோ?" 

"Sometimes"

அவன் கதை சொன்னதைக் கேட்டு உண்மையில் ஜோயித்தா மயங்கித் தான் போனாள்.கதை சற்று வித்தியாசமானக் கதை.அதை ஸ்ரீதர் சொன்ன விதம் உண்மையில் அவளுக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது.ஒரு நிமிடம் இவனையே இயக்குனராக்கி இந்த கதையில் நடித்து விடலாமா என்று கூட யோசித்தாள்.அத்தனை தூரம் அவன் கதையாலும் கதை சொல்லும் திறனாலும் ஈர்க்கப் பட்டிருந்தாள் ஜோயித்தா.

"ஹ்ம்ம் ஓகே ஸ்ரீதர் கதை பரவாயில்லை.Not bad.. "

"அவ்வளவு தானா" என்றான் சிறிய ஏமாற்றத்துடன்.

மீண்டும் ஒரு வசீகரப் புன்னகையுடன் ஜோயித்தா,"ஸ்ரீதர், ஈவினிங் நீ ஹோட்டல் பார்க் வந்துடு. அங்க மீட் பண்ணலாம்"

"எதுக்குங்க..அங்க எல்லாம் நான் எப்படி..உள்ள விடுவாங்களா என்ன?"

"ஹ்ம்ம்..சாயங்காலம் ஷூட்டிங் முடிச்சிட்டு போறப்போ நானே உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன்.. ஏன் எதுக்குன்னு யோசிக்காதே..அது suspense.." - என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

                                                                                                                              (தொடரும்)

Thursday, November 17, 2011

மாஸ் மீடியா - 2

மாஸ் மீடியா - 2
                                                         Start Camera Action


முதலாம் பாகத்தைப் படிக்க இங்கே செல்லவும் (click here)






மேடையில் இயக்குனர்கள்,பிரபல கதாநாயகர்கள், கதாநாயகிகள், தயாரிப்பாளர்கள் என பலரும் அமர்ந்திருந்தனர்.'நவீன அகராதி' படப் பாடல் வெளியீட்டு விழா அது.பலப் பிரபலங்கள் இருந்தாலும் நமது நாயகி ஜோயித்தா தான் center of attraction கழுத்திலிருந்துத் துவங்கி முழு உடலையும் மறைக்கும்படி ஒரு கவர்ச்சியானச்  சிவப்பு நிற gown அணிந்து, தலை முடியை ஸ்டைலாகப் பறக்க விட்டபடி அமர்ந்திருந்தாள்.முழு உடலையும் மறைக்கும்படி உடை அணிந்தாலும்,நமது நாயகியைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் போதை ஏறும்.அப்படி ஒரு வசீகரமான முகம்.பாடல்களை வெளியிட்டப் பின்பு இயக்குனர் செங்குட்டுவன் மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்கினார்.

"நவீன அகராதின்னு தமிழ்ல அழகாத் தலைப்பு வச்சிருக்கீங்க.அதுக்கே மொதல்ல உங்களைப் பாராட்டனம். இப்போல்லாம் தமிழ் சினிமால தமிழப் பார்க்கறதே ரொம்பப்  பெரிய விஷயமா இருக்கு.அதுலயும் நம்ம ஹீரோயின்ஸ் பத்திச் சொல்லவே வேண்டாம்.நூத்துக்கு எண்பது பேரு பாம்பேல இருந்து வந்தவங்க.அவங்க பேச்சுலத் தமிழ் தினம் தினம் வாழுதுடா சாமி.." - என அடுக்கிக்கொண்டே போனார் field out ஆகிவிட்ட இயக்குனர் செங்குட்டுவன்.

இந்தப் பேச்சு ஜோயித்தாவுக்கு ஆத்திரமூட்டியது."இவனுங்களுக்கு இதே வேலையாப் போச்சு.தன்னோட self publicityக்கு they are using Tamil. இவங்களுக்கு படத்துல கண்டபடி டிரஸ் போட்டுக்கனம், அரைகுறையா வந்து ஆடனம்,அசிங்கசிங்கமா டயலாக் பேசனம்,அப்படிப் பேசறப்போ சில பேர் ஒழுங்கான அர்த்தத்தைக் கூடச் சொல்ல மாட்டானுங்க.அப்போ மட்டும் தமிழ் தெரியாத ஹீரோயின் வேணும்.ஆனா stageல பேசறப்போ மட்டும் நாங்க தமிழ் தெரிஞ்சிக்கணம்.தமிழ்ல நாலு வார்த்தைத் தெளிவாப் பேசத் தெரியாதவன் எல்லாம் இங்க டாப் ஹீரோ,தமிழ் சினிமா எடுத்துட்டுப் படம் பூரா English dialogs வைக்கிறவன் இங்க டாப் டைரக்டர்,  அவனுங்கள எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டானுங்க..ஆனா ஹீரோயின்னாப் போதுமே.. bloody male chauvinism.." - இவ்வளவு ஆத்திரம் உள்ளூரப் புகைந்தாலும் உதட்டில் அந்த வசீகரமானப் புன்னகையை மட்டும் வைத்துக் கொண்டு கேமராக்களுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஜோயித்தா.உண்மையில் தேர்ந்த நடிகை தான் இவர்.

விழா முடிந்து,ஷூட்டிங்குக்குப் புறப்பட்டாள் ஜோயித்தா.காரில் செல்லும்போது தன் உதவியாளரிடம் அன்றைய நிகழ்ச்சிகளைப்பற்றியும் வேறு சில விஷயங்களைப் பற்றியும் விசாரித்துக் கொண்டேச் சென்றாள்.

"மாலு இன்னைக்கி இந்த ஷூட்டிங் முடிஞ்சப்புறம் என்னோட schedule என்ன?"

"சாயங்காலம் டைரக்டர் வால்ட்டர் உங்க கிட்ட கத சொல்ல அப்பாஇன்ட்மென்ட்(appointment) கேட்டிருக்காரு.உங்களைக் கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன்"

"Oh no!!.அந்தாளு படத்துல எல்லாம் நடிக்க முடியாது" - ஜோயித்தா

"ஏன் என்னாச்சு?"- மாலு 

"அவர் படத்தோட க்ளைமேக்ஸ்ல ஹீரோ ஹீரோயினோட ரெண்டு கையையும் வெட்டி நெருப்புல போடற மாதிரி scene வச்சிருக்காராம்" 

"அதனால என்ன?தேசிய விருதே கிடைக்கச் சான்ஸ் இருக்கே" 

"ஒரு வேளை உண்மையிலேயே ரெண்டு கையும் வெட்டிட்டா?"

"Don't be silly"

"அந்தாளு செஞ்சாலும் செய்வான் அவனப் பத்தி உனக்குத் தெரியாது..He is a perverted idiot..அது மட்டுமில்ல அவார்டுக்கெல்லாம்(award) own voiceல பேசனம்..நான் பேசற தமிழுக்கும் அதுக்கும் ரொம்ப தூரம் மாலு.. சரி வேற என்ன?"

"அப்புறம் நைட் 'சில்வர் ஸ்டார்' வாசுவோட பார்ட்டி இருக்கு"

"சில்வர் ஸ்டார்.. My foot ..Heroines பின்னாடி நாய் மாதிரி அலையறவனுக்கு சில்வர் ஸ்டார்னு title ஒரு கேடு..Nonsense..சரி எங்க பார்ட்டி?" - என்றாள் ஒரு வித சலிப்போடு.

"அவரோட farm ஹவுஸ்ல"

லொகேஷனுக்கு வந்துச் சேர்ந்தார் ஜோயித்தா..

தன்னுடைய டேக் முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது வேறொரு காட்சிப் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

"போராடுவோம் போராடுவோம்" என மாபெரும் தொழிற்சாலைத் திறப்பதைக் கண்டித்து ஒரு ஊரே போராட்டம் நடத்துவதுப் போன்ற காட்சி.சுமார் ஐநூறு பேர் இருப்பார்கள் அந்தக் கூட்டத்தில். அந்த ஐநூறு பேர்களில் ஒருவனாக அமர்ந்து "போராடுவோம் போராடுவோம்" என கத்திக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

காதர் பாய் உதவியால் சென்னையை நன்கு புரிந்து கொண்டான் ஸ்ரீதர்.தற்காலிகமாகத் துணை நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறான். முதலில் துணை நடிகனாக நடிக்க மறுத்தாலும் பிறகு மணி சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன."நீங்க வெளியில இருந்துப் பார்க்கிற சினிமா வேற ஆனா இங்க நடக்கறது வேற". அப்படி என்ன தான் வித்தியாசமிருக்க முடியுமென்று தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பு உதவும்.மேலும் இயக்குனராக வேண்டுமெனில் ஒரு சில பிரபலங்களின் அறிமுகம் நிச்சயம் தேவை என்பதை உணர்ந்து துணை நடிகனாகச் சம்மதித்தான். துணை நடிகனாக நடித்தாலும் பெரும்பாலும் இயக்குனர்கள் பின்னாலேயே திரிந்துக் கொண்டிருப்பான். எந்த ஒரு முக்கியப் பிரமூகரைச் சந்திக்கும் வாய்ப்பையும் நழுவ விட மாட்டான்.அனைவரிடமும் கலகலவெனச் சகஜமாகப் பழகுவதால் ஸ்ரீதரைக் கோடம்பாக்கத்தில் பலருக்கும் தெரிந்திருந்தது.

"ஆப்பிள் ஜூஸ் கேட்டு எவ்ளோ நேரமாச்சு..குமார் எங்க போனான்னு பாரேன்" என்று குடை பிடித்தவனிடம் சொல்லிக்கொண்டிருக்க ஒரு கை ஆப்பிள் ஜூசை நீட்டியது.

"என்ன மிஸ்டர் ஏற்கனவே நீங்க 'எக்ஸ்ட்ரா' ஆர்டிஸ்ட்டு தான்..இதுல இப்படி எக்ஸ்ட்ரா வேலை எல்லாம் வேறயா"

"ஜோயித்தா மேடம பார்த்துப் பேசற சான்ச தமிழ் நாட்டுல எவனாச்சு மிஸ் பண்ணுவானா"

"நல்லாப் பேசிறியே..உன் பேர் என்ன"

"ஸ்ரீதர்"

                                                     ***************************

டப்பிடிப்புக்கிடையில் கிடைத்த நீண்ட இடைவேளையில் தன புதிய படமொன்றிற்கு இயக்குனரைத் தேர்வுச் செய்யும் பணியில் ஆர்வமாக இருந்தான் சரண்.தன்னைப் பார்க்கக் காத்திருந்த இயக்குனர்களை அழைத்தான்.

"சார் ஒரு அழகான கிராமம் சார்" - என்று இயக்குனர் கதை சொல்ல ஆரம்பித்ததும் சரண் அந்த இயக்குனரை ஏற்ற இறக்கமாகப் பார்த்தான்."அங்க அப்பா,அம்மா ஒரு செல்லமான அக்கானு குடும்பத்தோட இருக்கீங்க.அக்கா மேல உங்களுக்கு அப்படி ஒரு பாசம்.அக்கா காலேஜ்ஜுக்குக் கிளம்ப கொஞ்சம் லேட் ஆயடுச்சின்னதும் நீங்க உடனே குறுக்குப் பாதையில ஓடிப்போய் ஓடிகிட்டிருக்கிற ட்ரெயின்ல ஏறி அதை நிறுத்திடுறீங்க.அக்கா வந்ததும் தான் ட்ரெயின் எடுக்க விடறீங்க..அப்போ பாருங்க..."

"Stop அங்க இருந்து ஹீரோ,அதாவது நான்,சென்னைக்குப் போறேன். சென்னையில இருக்கிற வில்லனுங்கக் கூட சண்ட போடனம்.இதுக்கு நடுவுல அப்போப்போப் பாட்டு வேணும்.அதனால நான் ஒரு பணக்காரப் பொண்ணு கூட romance பண்றன்.கடைசில வில்லன்னுங்கள அழிச்சி,அக்காவக் காப்பாத்தி,ஹீரோயின கல்யாணம் பண்ணிக்கிறேன்..இதான கதை"

"ஆமாம் சார்..இந்தக் கதை எப்படி உங்களுக்கு?அய்யய்யோ என் கதைய யாரோ திருடிட்டாங்க.."

"ஆமாம் படத்தோட பேர் என்ன சொன்னீங்க?"

"விருத்தாசலம். படத்துல ஹீரோ பெரும் அதான் சார்"

"உங்க பேரு?"

"சிற்றரசு"

"நீதானா அந்த சிற்றரசு..மொதல்லயே இதச் சொல்லியிருக்கலாம்ல..இவ்ளோ நேரம் waste பண்ணியிருக்க மாட்டேன் பாரு..இவர் கதைய திருடிட்டாங்களாம்"

"விவேக் அடுத்த ஆளை வரச்சொல்லு" - என்று தன் பீ.ஏவை அதட்டினான்.

"பாஸ் இங்க இருக்கிற எல்லாருமே கிட்டத்தட்ட இதே மாதிரி story தான் சொல்றாங்க. பிரபல டைரக்டர் எம்.எஸ்.நீலகண்டன் உங்களைப் பார்க்க அப்பாஇன்ட்மென்ட் கேட்டிருந்தார்.நைட் பதினொரு மணிக்கு வரச்சொல்லிட்டேன்"

"டாய் இப்போல்லாம் நீயே என்ன கேக்காம எல்லாத்தையும் பண்ண ஆரம்பிச்சிட்டியா"

"இல்லை பாஸ்.அவர் சொன்ன story line ரொம்ப இன்டரஸ்டிங்கா இருந்துச்சு.என்ன பட்ஜெட் தான் தாறுமாறா இருக்கும் அந்த கதைக்கு... ஆனா ஹிட்டானா உங்க மார்க்கெட் எங்கயோ போய்டும்"

"பட்ஜெட் பத்திக் கவலை இல்லை.இன்னைய தேதிக்கு டாப் பிரொடியூசர் தர்மராஜோடப் படம்.அட்வான்சும் வாங்கியாச்சு " என்று சோம்பல் முரித்துக்கொண்டேச் சொன்னான் சரண்.

"தர்மராஜா?பாஸ் He is a dangerous fellow. அவர் கூடப் படம் பண்றது பயங்கர riskனு விஷயம் தெரிஞ்சவங்க சொன்னாங்க"

"Come on விவேக்.இண்டஸ்ட்ரீல இந்த மாதிரி ருமர்ஸ்(rumors) வர்றதெல்லாம் சகஜம் தானே.அவரோட recent releases கூட பெரிய ஹிட் தானே"

"பாஸ் ஆர் யு சீரியஸ்? அந்தப் படமெல்லாம் முதல் ஒரு வாரத்துக்கப்புறம் தியேட்டர்ல ஈயடிக்க ஆரம்பிச்சிடுச்சுவெத்து விளம்பரத்துக்காக ஓடாதப் படத்த ஓடிச்சுன்னு சொல்லிக்கிறான்"

"என்னடா அவரே படம் ஹிட்,இவ்வளவு கலெக்ஷன்னு ஸ்டேட்மென்ட் எல்லாம் குடுத்திருக்காரு"

"பாஸ் நீங்க அட்வான்ஸ் வாங்கிட்டோமேன்னு இப்படியெல்லாம் பேசறீங்கன்னு நல்லா தெரியுது. அந்த producer கூட படம் பண்றது எனக்கென்னவோ நல்லதாப் படலை"

"ஆல்ரைட். நீலு சார் கிட்டப் பேசிட்டு இதைப் பத்தி யோசிச்சிக்கலாம்" - என்று அந்தப் பேச்சை அதோடு நிறுத்தினான் சரண்.விவேக் சொன்னது சரணுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தினாலும்,அவருடன் படம் பண்ணுவதில் ஆர்வமாகத்தான் இருந்தான்.

இந்தக் குழப்பம் மனதிற்குள் இருந்தாலும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என இயக்குனர் சொல்லி முடித்ததும், சரண்  கதாபாத்திரமாகவே மாறிவிட்டான். He is a true professional.


                                                     ***************************


"Had a nice time with you Honey.ஷூட்டிங்ல பார்க்கலாம்.bye bye" - என சொல்லிவிட்டு ஏளனச் சிரிப்போடு உடை மாற்றிக் கொள்ளத் துவங்கினான் வாசு. 'சில்வர் ஸ்டார்' வாசு.


அந்த வளர்ந்து வரும் கதாநாயகி அங்கிருந்துக் கிளம்பிச்செல்ல "என்ன வாசு சார் இன்னக்கி இவங்க தான் எனக்கு அண்ணியா" - என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் அவனுடைய காரியதரிசி நரேஷ்.

வாசுவின் முகத்தில் விஷமத்தனமானச் சிரிப்புத் தான் இருந்ததேத் தவிர அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. மேக்கப் போட வேண்டிய அவசியமில்லாத முகம்.நல்ல உயரம்.கடும் உடற்பயிற்சியினால் கட்டுமஸ்தான உடலைக் கொண்டிருந்தான்.வாசு நாற்பது வயதினன் என்று சொன்னால் நம்புவது சற்றுக் கடினம் தான்.பொதுவாகவே மேக்கப் போட்ட  நடிகர்களின் உண்மையான வயதை ஊகிப்பதென்பது எளிதான காரியமல்ல.

"வாசு சார்,நீங்க வரச்சொன்னதா ஒரு பிரபல டாக்டர் வந்திருக்காரு..என்ன உடம்புக்கேதாச்சும் ?"

"அதெல்லாம் இல்லையா..அடுத்தப் படத்துல six pack போடலாம்னு இருக்கேன்..அதுக்குக் கொஞ்சம் Drugs use பண்ண வேண்டி இருக்கும்னு கேள்விப்பட்டேன்..அதான் அவர consult பண்ணிடலாம்னு வரச்சொன்னேன்"

"அந்தப் படத்துக்கு six pack அவ்வளவு அவசியமா?"

"அவசியம் இல்லைத்தான்..அட இந்த மாதிரி எதாச்சு ஒண்ணுப் பன்னாத்தானப்பா நம்மளையும் 'உழைப்பாளி','hardworker'னு ஒத்துக்கிறாங்க.அது மட்டுமில்ல இப்படி சட்டையக் கழட்டி நடிக்கிறதுல நிறைய advantage இருக்குப் பாரு "

"அப்புறம் நீங்க ஏதோ அரசியலுக்கு வரப்போறதா ஒரு gossip சுத்திட்டிருக்கே.. உங்க ரசிகர்களெல்லாம் கலர் கலரா கொடி வேற வச்சிகிட்டுத் திரியறானுங்க.. இந்த கிசு கிசு எல்லாம் எப்படித்தான் போகுதோ.. பத்திரிக்கைகாரங்க phoneமேல phone போட்டு தொல்லை பண்றாங்க"

"நான் தான்யா அப்படிக் கிளப்பிவிட்டேன்..இல்லாம இல்லாம இருந்து திடீர்னு பேட்டிக் கொடுக்கறது,படம் ரிலீஸ் ஆகர நேரத்துல அரசியல் வதந்திக் கிளப்பி விடறது,கடவுளைப் பழிச்சி ஒரு பாட்டோ இல்ல வசனமோ வச்சி விட்டு அதுல ஒரு controversy கிளப்பி விடறதுன்னு இதெல்லாம் ஒரு வித மார்க்கெட்டிங்க்யா.. இவ்வளவும் என் செகரட்டரி உனக்கேத் தெரியாம செஞ்சேன் பாரு,அது தான் என்னோட சக்சஸ்."

"ஒரு வில்லன் கிட்டக் கூட ஈசியா வேலைப் பாத்துடலாம் ஆனா ஹீரோனு நம்பி ஒரு வில்லங்கத்துக்கிட்ட மாட்டிகிட்டோமே" என தனக்குத் தானே நொந்துகொண்டான். இப்படி அவன் அடிக்கடி நொந்துகொள்வதுண்டு.

"சரி நைட் பார்ட்டிக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணிடு.. முக்கியமா ஜோயித்தாக்கு சொல்லி அனுப்பிட்டல்ல..?"

"சொல்லியாச்சுங்க..அவங்களும் confirm பண்ணிட்டாங்க"

"குட்..அது தான் நமக்கு,ம்ஹூம் எனக்கு முக்கியம்"


பார்ட்டிக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான் நரேஷ்.
இன்னும் சில மணி நேரங்களில் பார்ட்டித் தொடங்கும்.
                                                                                                                              (தொடரும்)


Thursday, November 10, 2011

மாஸ் மீடியா(Mass Media)

  மாஸ் மீடியா -1
Start Camera Action



"மதன் என்ன எதுக்காக இப்படித் தூக்கிட்டு வந்தே?"

"கீதா நல்லா யோசிச்சிப் பாரு கீதா,நாம எப்படியெல்லாம் பழிகினோம்..என்ன விட்டுட்டு எப்படி கீதா இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்ட சம்மதிச்சே?"

"முட்டாள் மாதிரிப் பேசாதே..உன்ன பாத்தா நல்லா அழகா இருந்த,என்ன பாத்து நீ சிரிக்கவே நானும் சிரிச்சேன்,நீ செலவு பண்ணவே நானும் பார்க்கு பீச்னு உன் கூட சுத்தினேன்..நீ காதலிக்கிறேன்னு சொன்ன,நானும் ஒரு ஜாலிக்கு அப்படி சொன்னேன்..அதுக்காக கல்யாணம் பண்ணிக்கோன்னு டார்ச்சர் பண்ணுறியே?
நா கட்டிக்கப் போறவரு ஒரு Software Engineer.. மாசம் அறுபதாயிரம் சம்பாதிக்கிறார்.."

"அப்போ பணம் தான் எல்லாமா கீதா?"

"Ofcourse உன்ன கட்டிக்கிட்டு உனக்கும் உன் குடும்பத்துக்கும் வடிச்சிக் கொட்றது பெட்டரா இல்ல foreign ல சொகுசா வாழறது பெட்டரா?"

"கீதா இதான் உன் முடிவா?"

"என்ன மிரட்டுறியா நான் யார்...." பேசி முடிப்பதற்குள் மதன் தன் இடையிலிருந்தக் கத்தியை எடுத்துக் கீதாவைச் சரமாரியாகக் குத்துகிறான்..

"ஏண்டி என்ன ஏமாத்திட்டு வெளிநாட்டுக்குப் போயி வாழப்போரியா?பாத்தியா இப்போ உன்ன வேற உலகத்துக்கே அனுப்பிட்டேன்..ஹஹஹா ஹஹஹா"

"மதன்..." என முனகிக்கொண்டே கீதா விழுந்தாள்..

Cut it. Take Ok.

என்று இயக்குனர் சந்தோஷ் சொல்லி முடித்தார்.

இப்படி ஒரு காட்சி "காதலித்தப் பொழுதுகள்" என்னும் படத்துக்காக படமாக்கப்பட்டது.

நண்பர்களே ஒரு திடுக்கிடும் அறிமுகம் தரும் முயற்சியில் தான் பதிவின் ஆரம்பத்தில் அந்தக் காட்சியை விவரித்தேன். முயற்சி வெற்றியா தோல்வியா என்பதை வாசகர்கள் தான் சொல்ல வேண்டும். மாஸ் மீடியா - இது சினிமாவைப் பற்றி நான் எழுதும் ஒரு கற்பனைக் கதை.சினிமாவைப் பற்றிய என் கற்பனைகளைத் தொகுத்து ஒரு கதையாக எழுதும் முயற்சி தான் இந்த மாஸ் மீடியா.இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்கக் கற்பனையே.யாரையும் குறிப்பிடுவன அல்ல.

மீண்டும் மாஸ் மீடியாவுக்குச் செல்வோம்...

"யோவ் பாத்து யா பாம்புக்கேதாச்சு ஒண்ணுன்னா பாம்பாட்டி கடிச்சிடுவான்.. குமாரு, ஹீரோ வந்துட்டாரா.. producer என் கழுத்த நெறிக்கிறான் யா..அந்தாளோட பீ.ஏக்கு phone போடு.." என பரபரப்பாக சுற்றிக்கொண்டிருந்தான் ப்ரொடக்ஷன் மேனேஜர் மணி..

"சார் இங்க மணின்னு.." என இழுத்தான் ஸ்ரீதர்.. "நான் தான் பா மணி..ஊருக்குப் புதுசா இன்னா விஷயம் என்னயத்தேடி வந்திருக்க?"

"ஆமாம் சார் நான் தென்சாரத்துல இருந்து வர்றேன்..சந்திரன் அய்யா இந்த லெட்டெர உங்க கிட்டக் கொடுக்கச் சொன்னார்"

"அட நம்ம ஊர் தானா நீயும்.." கடிதத்தைப் படித்தப் பிறகுச் சற்றுக்  கடுப்பானாலும்,அதை வெளியில் காட்டாமல் "ஏன் யா சந்திரன் சார் சொன்னாருன்னு ஸ்டைலா பைய மாட்டிகிட்டுச் சென்னைக்கு வந்துடறதா..நீங்க வெளியில இருந்துப் பார்க்கிற சினிமா வேற ஆனா இங்க நடக்கறது வேற..டைரக்டர் ஆகனன்ற தப்பான ஆசைய இப்போவே விட்டுடு..அதெல்லாம் ரொம்ப கஷ்டம் தம்பி"

"சார் நீங்க அப்படி சொல்லக்கூடாது சந்தோஷ் சார் கிட்ட என்ன அசிஸ்டண்டா சேர்த்து விட வேண்டியது உங்க பொறுப்பு"

"அவனே ஒரு சைக்கோ..அவன் கிட்ட சிபாரிசுனு போனா உன்னோட சேர்த்து என்னையும் விரட்டி விட்டுடுவான் யா..சினிமால டைரக்டர் ஆகறது அவ்வளவு சுலபமில்ல தம்பி..உன்ன மாதிரி தினம் ஆயிரக்கணக்கானவங்க கிளம்பி வர்றாங்க..யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் தான் ஜெயக்கிறாங்க.."

"அந்த ஒருத்தர் ரெண்டு பேரா நான் இருக்கலாம்ல சார்"

"பாத்தாப் படிச்சவன் மாதிரி இருக்க..வந்தோமா ரெண்டு நாளிருந்தோம ஊற சுத்திப் பாத்தோம போனோமா இருப்பியா அதை விட்டுட்டு..உனக்கு இப்போ நான் சொன்னா புரியாது..ஒரு வேளை சாப்பாட்டுக்கு அலையரப்போத் தான் புரியும்.. ஏம்பா அந்த ஹீரோய்னோட நாயிக்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்துட்டீங்கல்ல..அப்புறம் அந்தம்மா இதக்காரணம் காட்டியே ஊரக்கூட்டுவாங்க" என அலறிக்கொண்டே சென்று விட்டார் மணி..

தன்னையும் தன் கதையையும் மட்டுமே நம்பிக் கிராமத்திலிருந்துக் கிளம்பி வந்த ஸ்ரீதருக்கு இதுச் சற்று வித்தியாசமான அனுபவமாகத்தானிருந்தது..இந்த ஊரில் எங்கே தங்குவது?யாரைப் பிடிப்பது ஒன்றுமே விளங்கவில்லை.. அவன் மனம் மிகவும் குழம்பி இருந்தது..ஒரு விஷயத்தில் மட்டும் தீர்மானமாக இருந்தான்..தன்னை ஒரு திறமையான இயக்குனர் என்று நிரூபித்துக் கொள்ளாமல் ஊருக்குத் திரும்புவதாயில்லை அவன்.அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போது,அவன் தோள்பட்டையைத் தொட்டது ஒரு கை..ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார்

தன்னைக் காதர் என்று அறிமுகப் படுத்திக் கொண்ட அந்தப் பெரியவர், "தம்பி இவனுங்க கெடக்குறானுங்க..நீ என் கூட வா உனக்கு நான் ஒரு வழி காட்டுறேன்." என்றார்.

ஸ்ரீதர் சற்று சந்தேகத்துடன் அவரைப் பார்த்தான்.அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அந்தப் பெரியவர்,

"தம்பி நீ என்ன நினைக்கிறன்னு புரியுது.உன் கிட்ட சிங்கிள் டீக்குக் கூட நான் காசு கேட்க மாட்டேன். எனக்கு இளையராஜாவைத் தெரியும் டைரக்டர் ஷங்கரைத் தெரியும்னு வர்றவங்கள ஏமாத்திப் பணம் பறிக்கிறவன் இல்ல நான்.இங்க துணை நடிகர்களோட ஒரு கோஷ்டிக்கு நான் தான் ஏஜண்டு.உன் முகத்துல ஒரு நல்ல களை இருக்குப்பா. ஏதோ மனசுல பட்டதைச் சொன்னேன்."

ஸ்ரீதருக்குச் சென்னையில் உதவக்கூடிய நண்பர் என்று சொல்லிக்கொள்ளும்படி யாருடைய பெயரும் நினைவுக்கு வரவில்லை. பத்து நிமிடம் பின்னாலிருந்துத் தான் பேசுவதைக் கவனித்து விட்டு உதவ முன் வந்தப் பெரியவரை நம்பவும் மனம் வரவில்லை.

"இந்த டைரக்டர் இல்லைன்னா என்ன?இன்னும் எவ்வள்ளவோ பேர் இருக்காங்க.ஊர்ல இருந்து வர்றப்போ என் திறமைய நம்பித்தான் வந்தனே தவிர அந்த மணிய நம்பியோ இல்ல மத்தவன நம்பியோ இல்லை.இருந்தாலும், நீச்சல் தெரியனம்னா முதல்ல தண்ணீல குதிக்கனம்.சினிமான்னா என்னன்னு தெரிஞ்சிக்க இந்த காதர் பாய் மாதிரி ஆளுங்க நிச்சயம் தேவை" - இத்தனையும் ஒரு சில வினாடிகளில் ஸ்ரீதரின் மனதில் ஓடியது.இப்படி எண்ணிக்கொண்டே ஸ்ரீதர், அந்தப் பெரியவருடன் அரை மனதுடனே தான் நடந்தான்.

                                                     ***************************

ஸ்டுடியோவில் "அத்தை மகள் ஆனந்தி" படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சென்டிமென்ட்டாக விநாயகர் கோவில் முன்பு ஒரு தேங்காய் உடைக்கப்பட்டுப் படத்துக்குப் பூஜையும் போட்டாகி விட்டது. கதாநாயகன் சரண். பத்துப் படங்களே நடித்திருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்கள்..கடைசி  இரண்டும் சுப்பர் ஹிட்.ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து காதல்,ஆக்ஷன், செண்டிமெண்ட், நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஒரு ஜனரஞ்சகமானப் படமாக "அத்தை மகள் ஆனந்தி" அமையும் என்பது கோடம்பாக்கத்தில் நிலவும் கருத்து.

இன்றைய தேதிக்குச் சரணும் ஒரு டாப் ஹீரோ.இது போன்ற படங்களை விரைவாக முடிப்பதில் வல்லவரான நாராயணன் தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.இயக்குனர் செட்டைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்தார்.சரண் இயற்கையாகவே நல்ல சிவந்த நிறம்.சராசரி ஐந்தரை அடி உயரம்.பார்ப்பவர்களை உடனேக் கவரக்கூடிய வசீகரமான முகம்.பல நூறு நடனக்கலைஞர்களுடன் ஆடும் அறிமுகப் பாடலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தான்.

அப்போது ஸ்பாட்டுக்கு  வந்துச் சேர்ந்தார் மாலினி,படத்தின் கதாநாயகி.அலங்கரிக்கப்பட்ட ஜவுளிக்கடைப் பொம்மையைப் போல் இருந்தார்.அவருடன் அவருடைய அம்மாவும் லொகேஷனுக்கு  வருவது வழக்கம்.சில நேரங்களில் மாலினியைவிட அவருடைய அம்மா இளமையாகவும் அழகாகவும் தோன்றுவார்.காட்சிக்கு ஏற்ற உடையும் ஒப்பனையும் செய்து கொள்ள இருவரும் கேரவனுக்குச் சென்று விட்டார்கள்.

"டைரக்டர் சார்,இன்னைக்கி இவங்க கூட நடிக்க வேண்டிய சீன் ஏதாச்சு இருக்கா என்ன?" - கேட்டான் சரண்.

"இல்லை நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து நடிக்கற மாதிரி சீன் எதுவும் இன்னைக்கி இல்லை. இருந்தாலும் அவங்களுக்கொரு ஹாய் சொல்லிக் கை கொடுத்துருங்களேன்" - நாராயணன் 

"இவ கூட கொஞ்சம் distance keep up பண்ணனம் சார்.ஒரு சின்ன வேண்டுகோள்,இந்தப் படத்துல முத்தக் காட்சி ஏதாச்சு இருக்கா?"

"இது வரைக்கும் அப்படி எதுவும் ஸ்கிரிப்ட்ல இல்லை" , என்று கோபமாகச் சொன்னார் நாராயணன்.

"ஸ்கிரிப்ட் அப்படியே இருக்கட்டும்.தப்பித்தவறி கூட kissing scenes வெச்சிடாதிங்க"

"என்னய்யா இது வித்தியாசமா இருக்கே? பொதுவா ஹீரோக்களெல்லாம் கிஸ்ஸிங் சீன் வைக்கச்சொல்லித்தான் டார்ச்சர் பண்ணுவாங்க..நீ வேற மாதிரி சொல்றியே?"

"உங்க கிட்ட சொல்றதுக்கென்ன.செட்டுக்கு வெளிய நீங்களும் நானும் தான் தோஸ்தாச்சே..படு லோக்கல் brand தம்மடிக்கிரா சார்.'நினைவுகளில் நீ' படத்துல நடிச்ச ஒரு க்ளோஸ்(close) ஷாட்டுக்கே நான் பட்டக் கஷ்டம் எனக்குத்தானேத் தெரியும். Atleast பாக்குப்போட்டுகிட்டாச்சு வரச் சொல்லனம் இனிமே"

"இதுகள எல்லாம் வச்சிக்கிட்டு எப்படித்தான் படமெடுத்து முடிக்கப்போறனோ" என நினைத்துக் கொண்டார் நாராயணன்.

                                                     ***************************

டப்பிடிப்பு ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க தயாரிப்பாளர் கண்ணப்பனைப் பார்க்க அப்பாஇன்ட்மென்ட்(appointment) வாங்கிக் காத்திருந்த ராணியை உள்ளே அழைத்தார் தயாரிப்பாளர்.அப்பாவித்தனமானத் தோற்றம் கொண்ட ராணி, சராசரி உயரம், மாநிறம்,மிகவும் ஒல்லி என்றோ அல்லது மிகவும் பருமனான உடற்கட்டு என்றோ சொல்ல முடியாத அளவுச் சரியான உடல்வாகுக் கொண்டிருந்தாள்.சாதாரணமான ஒரு இளஞ்சிவப்பு(pink) நிறச் சுடிதார் அணிந்திருந்தாள், பதினெட்டு வயதே நிரம்பிய ராணி.

"சார்,என் பேரு ராணி. உங்கப் படத்துல நடிக்கச் சான்ஸ் கேட்டு இன்டர்நெட்ல போட்டோ எல்லாம் அனுப்பியிருந்தேன். இந்த நேரத்துக்கு இந்த இடத்துக்கு வரச்சொன்னார் சார் உங்க பீ.ஏ."

கண்ணப்பன் வெள்ளை நிறச் சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்தார். பார்ப்பதற்கு ஒரு தூய்மையான பக்திமான் போலக் காட்சியளித்தார்.இத்தனை ஆண்டுகளாகச் சினிமாத்துறையில் 'பலவிதமான' வேலைகளும் பார்த்து விட்டு, இன்று சொந்தமாகப் படம் தயாரிக்குமளவுக்கு 'வளர்ந்திருக்கிறார்'.இது அவருடைய முதல் படம்.

"ஒ நீ தான் அந்த ராணியா.வெரி குட் வெரி குட்.இப்படிப் பாத்ததும் ஹீரோயின் கேரக்டர் உனக்கு செட் ஆகுமா ஆகாதான்னுச் சொல்ல முடியாதேம்மா"

"வேற என்ன சார் செய்யணம்" - அடக்கமாகக் கேட்டாள் ராணி.

"நீ எந்த ஊரும்மா?"

"திருச்சி சார்"

"சரி ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்கணம்.இப்போ ஷூட்டிங்க்(shooting) ஓடிட்டிருக்கு. நான் கொஞ்சம் பிஸி.நீ வேணும்னா சாய்ந்திரம் என்ன officeல வந்துப் பாரேன்.அங்கேயே இன்னொரு photo session கூட வச்சிக்கலாம்"

"எத்தன மணிக்கு சார்"

" 'சாய்ந்திரம்'  ஒரு எட்டு மணி போல வாயேன்" 

தான் ஒரு நடிகையாகப்  போகிற சந்தோஷத்தில் விடைபெற்றுச் சென்றாள் ராணி.



                                                                                                                                (தொடரும்..)