Friday, January 29, 2016

Irudhi Suttru review



#IrudhiSuttru is good :-) the movie is on the same genre as Chak-De-India and at times it resembles Chak-De too, but that didn't stop me from enjoying the movie :-) the hardwork of Madhavan is visible throughout the movie. His sarcastic expressions and dialogue delivery is appealing. Once again Madhavan proved that he is an excellent actor. Ritika Singh was just terrific as the boxer. Somehow I felt there is a link to Indian boxer Sarita Devi with the story(not sure if someone else too felt the same way). Santhosh Narayanan's songs and BGM connects us very well with the movie and gives the much needed sports movie feel. The dialogues are going well with the masses.Director Sudha Kongura has done well to make this an interesting flick. But she could have elaborated the politics happening in Boxing association, kind of let down with the way it was shown. Anyway, the movie runs for just 2 hrs. With all shows going full today, some theaters has increased the no. of shows for this movie. This Madhavan's comeback film, may end up as a commercial super hit too.

Thursday, January 28, 2016

பெரிதாக்கப்படும் பழ.கருப்பையா விவகாரம்



நாம் எதிர்பார்த்ததைப் போலவே பழ.கருப்பையா நீக்கம் தான் இன்றைய தலைப்புச் செய்தி. பழ.கருப்பையா பல்வேறு பேட்டிக்களில் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் விதமாகவே பேசியுள்ளார். அவர் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் தான் என்ன? கட்சித் தலைமை இவர் கருத்தைக் கேட்கவில்லை. தொண்டர்கள் அடிமைகள் போல செயல்படுகின்றனர், பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மேசையை தட்டுகிறார்கள். இது அவர் 2011இல் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட போதே தெரிந்திருக்க வேண்டுமே? அதிமுக தொன்றர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் இதே போலத்தானே செயல்பட்டார்கள்?அப்போதும் கூட அவர்கள் மேசையைத் தட்டிக்கொண்டு தானே இருந்தார்கள்? அம்மா புகழ் பாடிக்கொண்டு தானே இருந்தார்கள்? இவர் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதும் அப்படித் தானே இருந்தது அவர்கள் செயல்பாடு?

ஒரு சிலர் திரு கருப்பையாவைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஏதோ நான்கு ஆண்டுகள் அவர் பதவியை அனுபவித்து விட்டு, 'இப்போது' கட்சியை விமர்சனம் செய்வதாகக் கூறுகிறார்கள். இது தவறு. அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே கட்சியையும் சரி மேலோட்டமாக அரசியலையும் சரி விமர்சித்துக் கொண்டே தான் வந்துள்ளார். ஆக இது ஏதோ திடீரென அவர் எடுத்த நிலைப்பாடு என்பது போல அவரை விமர்சிப்பது சரியில்லை. அவர் கடந்த ஆண்டும் கூட சில தினமணியில் சில விரும்பத்தாகாத கட்டுரைகள்(அதாவது, பொதுவாக திக/திமுகவினர் தான் அது போன்ற கட்டுரைகள் எழுதுவார்கள்) எழுதினார். அப்போதே அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் நீக்கப்பட வேண்டும் என்றும் கூட நானே கருத்து தெரிவித்தேன்.

ஆனால் தமிழக முதல்வரோ, எஸ்.வீ.சேகர் போன்றவர்களை எப்படி பதவிகாலம் முடியும் தருவாயில் நீக்கினாரோ அது போலவே கருப்பையாவையும் நீக்கி இருக்கிறார். இந்த பழ.கருப்பையா, எஸ்.வீ.சேகர் போன்றவர்கள் எல்லாம் ஒரே ரகம் தான். இவர்கள் போகாத கட்சியில்லை. இந்த கருப்பையா ஸ்தாபன காங்கிரஸ் தொடங்கி அதிமுக வரை சில-பல கட்சிகளைப் பார்த்தவர் தான்.

இவர் முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு, கவுன்சிலர்கள் பணம் வாங்குகிறார்கள்,அமைச்சர்கள் அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு நாட்டையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான். திரு கருப்பையாவின் இந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது. ஊழலைத் தடுக்க வேண்டியது ஆளும் கட்சியின் கடமை என்பதில் சந்தேகமில்லை. ஏன் அவர்கள் ஆட்சியில் ஊழல் இல்லையா? போன்ற கேள்விகள் ஊழலை நியாயப்படுத்தும் செயலாகத் தான் அமையுமே தவிர நியாயமான விமர்சனத்திற்கானப் பதிலாகாது.

இவ்வளவு துணிவாக பேசும் பழ.கருப்பையாவிடம் சில நியாயமான கேள்விகளை முன்வைத்துத் தான் ஆக வேண்டும். இன்று கட்சி தன்னை சரியாக நடத்தவில்லை என்றும் ஒரு எம்.எல்.ஏவாகத் தான் தோற்றுவிட்டதாகவும் கூறும் திரு கருப்பையா துறைமுகம் தொகுதியில் போட்டியிட எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்? தன்னைவிட மூத்தத் தலைவர்கள் பலர் கட்சியில் இருந்தும், தனக்கு முன்னரே கட்சியில் சேர்ந்து உழைத்து வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பலர் இருந்தும் இவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது ஏன்? அன்று இந்தக் கேள்வியை இவர் கேட்கவில்லையே?

அமைச்சர் பணம் கேட்கிறார்,அதிகாரியுடன் சேர்ந்து கொண்டு அராஜகம் செய்கிறார்,கவுன்சிலர் பணம் கேட்கிறார் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் திரு கருப்பையா, ஏன் இந்த விவரங்களைக் கட்சி தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை? சாதாரண தொண்டன் எழுதிய கடிதத்திற்கும் கூட அதிமுக தலைமையிடமிருந்து பதில் வருகிறது,கொடுக்கப்படும் புகாரின்மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. திரு.கருப்பையா அவ்வாறு ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டாரா? 3 லட்சம் கேட்கும் கவுன்சிலர் மீது ஒரு வழக்கு தொடுத்திருக்கலாமே? ட்ராபிக் ராமசாமி கூட வழக்கு தொடுக்கும்போது இவ்வளவு தைரியமாகப் பேசும் கருப்பையா அதைச் செய்யாமல் விட்டதேனோ?

ஏதோ அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முதல் முக்கியஸ்தர் பழ.கருப்பையா தான் போன்றதொரு மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு, ' மோடி அவர்களுடன் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நல்ல நட்பு உண்டு, ஆகையால் அவர் பாஜகவை ஆதரிக்கும் வாய்ப்புக்களே அதிகம்' என்று மலைச்சாமி I.A.S பேட்டி கொடுத்தார். கொடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இவரோ பல பேட்டிக்களில் கட்சியை மனம் போன போக்கில் கேலி செய்திருக்கிறார்.

இப்படி தினம்தோறும் பல கட்சிகளிலிருந்தும் பலர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக என்பதால் அறிவிப்போடு அனைத்தும் முடிந்தது. திமுகவிலிருந்து குஷ்பூவை எவ்வாறு வெளியேறச் செய்தார்கள் என்பதை எளிதில் மறந்து விட முடியுமா? கொலைப்பழி சுமத்தித் தானே வைகோவை வெளியேறச் செய்தார்கள்?ஆகையால் பழ.கருப்பையா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது ஏதோ ஒரு அதிசயமான நிகழ்வு என்பது போல சித்தரிக்கப்படுவது பரபரப்புக்கு உதவலாமே தவிர உருப்படியாக எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாது.

இவரின் எதிர்பார்ப்புத் தான் என்ன? கட்சியைப் பற்றி இவர் எப்படிப் பேசினாலும், தலைமை அதனை சகித்துக் கொண்டு போக வேண்டும் என்பது தானா? அப்படிப்பட்ட ஒரு கட்சியும் இந்த நாட்டில் இருக்கிறது. ஆம்,அது பாஜக தான். அங்கே தான் யார் வேண்டுமானாலும் மனம் போன போக்கில் எதை வேண்டுமானாலும் பேசலாம். சத்ருகன் சின்ஹா முதல் அத்வானி வரை கட்சியையும், ஆட்சியையும், பிரதமரையும் இஷ்டம் போல் விமர்சிக்கலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயாது என்று நம்பிக்கையோடு தொடர்ந்து செயல்படலாம்.காங்கிரஸ் கட்சிக் கூட நாட்டுக்கெதிராக கருத்துக் கூறுபவர்களையும் ஹிந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களையும் தான் சகித்துக் கொள்ளுமே தவிர,கட்சித் தலைமையை விமர்சிப்பவர்களை அல்ல. ஆக இவரின் எதிர்பார்ப்புக்கேற்ற கட்சி பாஜக தான்.

ஆனால் திரு.கருப்பையா அங்கே செல்ல மாட்டார்.பாஜக என்றாலே ஒதுக்கி வைக்கத்தான் மதவாதத் தீட்டு ஒன்று இருக்கிறதே, போதாதா என்ன? இப்போது இந்த ஜனநாயகவாதி புதிதாகக் கையிலெடுத்திருப்பது மார்க்சிய சித்தாந்தங்களை. இன்று தந்தி தொலைக்காட்சியில் அருமையாகக் கூறினார், அதாவது நாட்டை ஆளுவது மோடி அல்ல என்றும் அடானி தான் என்றும் குறிப்பிட்டார். அப்படிக் குறிப்பிட்டதோடு நில்லாமல், இருப்பவனிடம் பிடுங்கினால் தான் என்ன தவறு என்று முத்து உதிர்த்திருக்கிறார்.

இவரின் பேச்சுக்களைக் கவனித்ததில், இவர் திமுக பக்கம் சாய்வதற்குத் தான் வாய்ப்புக்கள் அதிகம் என்று தோன்றுகிறது.திமுக பேச்சாளர் கண்ணதாசன் பழ.கருப்பையாவுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தார்.. இதே பழ.கருப்பையா 6 ஆண்டுகளுக்கு முன்பு 'தமிழ்த் தாய் வரமாட்டாள்' என்ற தலைப்பில் துக்ளக் மற்றும் தினமணியில் கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையில்  'ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்து, கோவையில் என்ன கொண்டாட்டம் வேண்டி இருக்கிறது' என்று எழுதினார். மேலும் ஜெயா தொலைகாட்சியில் கலைஞரை கடுமையாக விமர்சித்தார். அப்போது ரவுடிகளால் தாக்கப்பட்டார். இந்த ரவுடிகளை ஏவி விட்டது திமுக தலைவர் கருணாநிதி தான் என்று பகிரங்கமாகக் கூறினார். அதற்கு, திமுக இன்று வரை மறுப்பு கூட தெரிவிக்கவில்லை. இன்று அந்த திமுகவினர் கட்சி நடத்துவதைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் பேசுகிறார்கள்.


இது ஏதோ பழ.கருப்பையா மீது வெறுப்பைக் கொட்டித் தீர்ப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை என்று யாரும் நினைக்க வேண்டாம். எனக்கு அரசியல் கட்டுரைகள் எழுத ஆர்வம் ஏற்பட பழ.கருப்பையா அவர்களின் கட்டுரைகள் தான் காரணம். அதனை இங்கேயே நான் சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தேன். இன்றளவும் கூட, பழ.கருப்பையா மீது வைத்திருக்கும் மதிப்பில் துளி கூட குறையவில்லை. ஆனால் அவர் திமுகவில் இணைந்தால் அவருக்கு மரியாதை கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.







Tuesday, January 19, 2016

Scholar suicide at Hyderabad Central University and the Caste Card

So the warriors are at it again. "Dalit student committed suicide, HRD ministry is anti-dalit,it is not a suicide,its a cold blooded murder,Handwork of Hindutva forces,Modi should apologize etc" - these are all the comments of warriors and Arvind Kejriwal(s). I am not writing anything on my own, just sharing the information published by the same media, which is hellbent on accusing BJP govt and polarizing the issue. Yakub Memon,a terrorist,was hanged last year for his involvement in bomb blasts.His guilt was proven with proper facts and evidences. Please note,he was awarded death penalty and it was upheld by Supreme court,well before Narendra Modi​ became PM.

ABVP(Akhil Bharatiya Vidyarthi Parishad) and ASA(Ambedkar Students'Association) are 2 student unions in Hyderabad Central University(HCU) - ABVP is a Hindutva(Sangh Parivar),pro-BJP student wing and ASA is a Dalit union. ASA carried out protests against Yakub Memon's hanging. The ABVP objected to it. The case(or allegation) is that,some of the students belonging to ASA,physically assaulted ABVP President. When the ABVP lodged a complaint, the HCU has given clean chit to ASA..The ABVP has taken the issue to Bandaru Dattatreya(Union Minister of State for Labour) and the minister has written a letter to HRD Ministry, seeking its interference.

When a minister receives a complaint,what is he/she supposed to do?Seek an explanation. That is what the HRD Ministry did. The HCU has not responded to the letter sent by HRD ministry and they have sent 4 reminders to provide explanation on this issue. Then,the HCU suspended the 5 students of ASA. It is being said that Rohith Vemula,one among the 5 students who got suspended, committed suicide after this move of HCU.

What has caste got to do with this? Had they suspended them because they were Dalits,the argument of caste discrimination is valid.That was not the case.Accept it or not,Yakub Memon's guilt was proven beyond doubt with proper evidences and it was then he was hanged.As per law he is a criminal and holding protests against the lawful action taken against a criminal is anti-national indeed,especially using an educational institution's name. You can say hanging a terrorist is wrong,obviously,its your opinion and you have all rights to express it.You can express your opinion in facebook or even in streets,but as an individual not as a union using an institution's name.

It can be observed that this is a problem between 2 groups. Why is such a huge cry against HRD ministry's act of seeking explanation from the university?So according to media and intellectuals,if the complaint is against a Dalit union,it should be ignored.No explanation should be sought(note,the ministry has only sought explanation and reply from the university,it has not recommended any action or punishment).

What if the issue has been the other way? Say, the Dalit union writes to HRD ministry alleging caste discrimination. If the HRD fails to seek an explanation or to send reminders on the issue, will these intellectuals remain quiet?Will they not taunt the HRD ministry? Will they not go to the extent of abusing Smriti Zubin Irani​ ?Will there not be name calling? Isn't this hypocrisy? And The Hindu has come up with a cartoon suggesting that it was the society which is intolerant towards Dalits,has killed this student. Isn't it irresponsible? Is the media reporting the caste of every student who commits suicide for various reasons(excluding personal reasons)?. They will not, because only in certain cases, they can sensationalize the issue and gain TRPs.Their posts will go viral and their websites will more hits.

Personally, I can only sympathize with the student who committed suicide. The issue will die down in few weeks/months. Media will move on with TRP and publicity,some political group will gain some political mileage for sure and they will move on too,but the one who committed suicide is not going to come back. May his soul rest in peace.

Saturday, January 16, 2016

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்



அன்றே சொன்னார்.. நாடோடி மன்னன் படத்தில் வரும் பாடல்வரி தான் இது.. 'என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு,நம்பி கேட்டவர் இன்று வரை இல்லை' என்று வசனம் பேசினார். தன் இறுதி நாட்களில் சரியாக பேச முடியாத நிலையிலும், நரிக்குறவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்றார். அரசு நிதியில் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார்.  அண்ணா என் தலைவர் காமராஜர் என் வழிகாட்டி என்று சொன்னார்,சொன்ன சொல்படி நின்று காட்டினார். காமராஜர் கனவு கண்ட சத்துணவு திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். slate  தூக்கும் பிள்ளைகளை plate தூக்க வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர் என்று கேலி பேசியவர்கள் பிறகு அதில் ஒரு முட்டை,பிறகு இரண்டு முட்டை என்று திட்டத்தை விரிவாக்க முடிந்ததே தவிர அத்திட்டத்தை ரத்து செய்ய முடியவில்லை. உலக வங்கியால் பாராட்டப்பட்ட இத்திட்டாம் உலக வங்கியின் மாதிரி திட்டங்களில்(model scheme) ஒன்றாக இன்றளவும் உள்ளது.

108 திட்டத்தை தான் தான் அமல்படுத்தியவர் என்று இப்போது மார்தட்டிக் கொள்கிறவர்கள் மறக்கும்/மறைக்கும் விஷயம் என்றால் இத்திட்டத்தை எண்பதுகளிலேயே எம்.ஜி.ஆர் அறிமுகபடுத்தி விட்டார் என்பது தான்.பின்னர் வந்த திமுக அரசு அத்திட்டத்தை கிடப்பில் போட்டதே.



ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுத்தார் என்பதற்காக அன்று திமுக-காங்கிரஸ் கூட்டாக இவர் ஆட்சியை கலைத்தார்களே. பாராளுமன்ற தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்றதால் எம்.ஜி.ஆர் வீழ்ந்தார் என்று நினைத்த தீய சக்திகளுக்கு,அடுத்து வந்த தேர்தலில் மக்கள் தக்க படம் புகட்டினார்களே. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் முதல்வரானாரே. 77இல் ஆட்சிக்கு வந்தவர் தன் கடைசி மூச்சு வரை முதல்வராகவே வாழ்ந்தார்.

இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபடும் முகமாக தங்களைக் காட்டிக்கொள்ள நினைக்கும் கருணாநிதி,காங்கிரஸ் அன்று செய்ததென்ன? பாபு ஜெகஜீவன் ராம் பிரதமராவதைத் தடுக்கத் தானே நினைத்தனர். அவர் பிரதமராக எம்.ஜி.ஆர் தானே ஆதரவு தெரிவித்தார். தாழ்த்தப்பட்டவர் பிரதமராகக் கூடாது என்பதற்காகவே பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசமே கொடுக்காமல் பாராளுமன்றத்தைக் கலைத்தவர் அன்றைய காங்கிரஸ் ஆதரவு ஜனாதிபதி நீளம் சஞ்சீவ ரெட்டி.

சினிமாக்காரன் அரசாள கூடாது, சினிமா கவர்ச்சியை வைத்து மக்களை ஏமாற்றுகிறான் என்றெல்லாம் சொன்னார்களே? ஜாதிப் பெயரைச் சொல்லி மக்களை பிளவுபடுத்தும் அய்யோக்கியத்தனத்தைக் காட்டிலும் சினிமா கவர்ச்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்காக பணியாற்றிய எம்.ஜி.ஆர் தானே உத்தமர்? இவர் ஆட்சியில் தானே ஜாதி சங்கங்கள் அழைத்துப் பேசப்பட்டன? மரங்களை வெட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்கள் எம்.ஜி.ஆரின் முன் எடுபடாமல் தானே போனார்கள்.



கலியுகக் கர்ணன் என்ற அடைமொழியைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். எம்.ஜி.ஆருக்குத்தானே அந்த பட்டம் கச்சிதமாகப் பொருந்தும்? ஒரு முறை ஒரு காவல் துறை அதிகாரிக்கு எம்.ஜி.ஆர் தோட்டத்திலிருந்து அழைப்பு வந்தது.அதிகாரி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்." நீங்கள் இங்கே பணியிலிருப்பது தெரிந்தது. சென்ற முறை நீங்கள் மிகவும் விரும்பி சாப்பிட்ட கத்தரிக்காய் குழம்பு சமைக்கப்பட்டுள்ளது. வாத்தியார் உடனே உங்களை நினைவுகூர்ந்து அழைத்து வரச்சொன்னார். சாப்பிடுங்கள்" - என்று தோட்டத்தில் இருப்பவர்கள் தகவல் கூறி உணவளித்தார்கள். தன் அதிகாரிகளையும் மக்களையும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்பவர் அல்லவோ உண்மையான தலைவர்?


வெள்ளம் பாதித்த போது தயங்காமல் மழை நீரில் இறங்கி ஆறுதல் கூறி உதவிகளைச் செய்தவர் எங்கள் எம்.ஜி.ஆர். 'ஐயா நீங்க இவ்வளவு தூரம் வரணமா?' என்று அன்போடு மக்கள் சொன்னார்களே,அது தானே எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து.

2015 வரை தமிழகத்தில் நக்சலைட்டு தொல்லைகள் இருந்ததில்லை. இப்போது கூடங்குளம் உதயகுமார் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வருகின்றன,அதனால் 2015 வரை என்று வைத்துக் கொள்வோம். நக்சல் தொல்லை இல்லாமல் போனதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தானே? காவல் துறைக்கு முழு அதிகாரம் கொடுத்து நக்சல் தொல்லைகள் இல்லாதவாறு செய்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான்.

இவர் தமிழர் அல்ல என்றார்கள்.ஆனால் இவர் தமிழர்களுக்கு செய்ததில் கால் பங்கு கூட இவரை மலையாளி என்று விமர்சித்தவர்கள் செய்ததில்லை. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பேர்வழி என்று ஏமாற்றும் போலிகளுக்கிடையே உணர்வு பூர்வமாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் பிரச்சினையை தீர்க்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர், பிறகு அவர்களின் பாதை மாறவே அவர்களை ஆதரிப்பதை நிறுத்திக் கொண்டார்.அவர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் எடுத்தார்.

இவர் படங்கள் இப்போது வெளியானாலும் திரை அரங்குகளில் பெரும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம் அவரின் முகராசியும் அதிர்ஷ்டமும் மட்டுமல்ல.சினிமாவிலும் சரி பொது வாழ்விலும் சரி அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை சரியாக புரிந்து வைத்ததே அவரின் அசாத்திய வெற்றிக்குக் காரணம். பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்தை போட்டுக் காட்டிய போது, எம்.ஜி.ஆர் 'இதற்கு இன்னொரு முடிவு(climax) வைத்திருப்பீர்களே?' என்று கேட்டதும் அசந்து போனார் பாரதிராஜா. ஏனென்றால் அவர் மற்றொரு முடிவு படமாக்கிய விஷயம் ஒருவருக்கும் தெரியாது.

இன்றும் பல கிராமங்களில் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பிரச்சாரத்திற்கே செல்லாமல் ஒரு தலைவனால் வெற்றி பெற முடியுமென்றால் அது தானே உண்மையான மக்கள் செல்வாக்கு? ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவதூறாகப் பேசுவதையே திராவிடத்தின் கொள்கை என்று அரசியல் செய்தவர்கள் மத்தியில் 'தாய் மூகாம்பிகையின் உருவில் என் தாயைக் காண்கிறேன்' என்று சொல்லி இந்த போலி பகுத்தறிவுவாதிகளின் வாயை அடித்தாரே. தான் பதவியில் இருந்த காலம் வரை எந்த ஒரு சமூகத்தையும் இழிவாகப் பேசாமல் அரசியல் செய்தாரே, தமிழகத்தில் அது எவ்வளவு பெரிய சாதனை?

அன்றே சொன்னார்.. நாடோடி மன்னன் படத்தில் வரும் பாடல்வரி தான் இது.. 'என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு,நம்பி கேட்டவர் இன்று வரை இல்லை' என்று வசனம் பேசினார். தன் இறுதி நாட்களில் சரியாக பேச முடியாத நிலையிலும், நரிக்குறவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்றார். அரசு நிதியில் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார்.  அண்ணா என் தலைவர் காமராஜர் என் வழிகாட்டி என்று சொன்னார்,சொன்ன சொல்படி நின்று காட்டினார். காமராஜர் கனவு கண்ட சத்துணவு திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். slate  தூக்கும் பிள்ளைகளை plate தூக்க வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர் என்று கேலி பேசியவர்கள் பிறகு அதில் ஒரு முட்டை,பிறகு இரண்டு முட்டை என்று திட்டத்தை விரிவாக்க முடிந்ததே தவிர அத்திட்டத்தை ரத்து செய்ய முடியவில்லை. உலக வங்கியால் பாராட்டப்பட்ட இத்திட்டாம் உலக வங்கியின் மாதிரி திட்டங்களில்(model scheme) ஒன்றாக இன்றளவும் உள்ளது.

108 திட்டத்தை தான் தான் அமல்படுத்தியவர் என்று இப்போது மார்தட்டிக் கொள்கிறவர்கள் மறக்கும்/மறைக்கும் விஷயம் என்றால் இத்திட்டத்தை எண்பதுகளிலேயே எம்.ஜி.ஆர் அறிமுகபடுத்தி விட்டார் என்பது தான்.பின்னர் வந்த திமுக அரசு அத்திட்டத்தை கிடப்பில் போட்டதே.

ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுத்தார் என்பதற்காக அன்று திமுக-காங்கிரஸ் கூட்டாக இவர் ஆட்சியை கலைத்தார்களே. பாராளுமன்ற தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்றதால் எம்.ஜி.ஆர் வீழ்ந்தார் என்று நினைத்த தீய சக்திகளுக்கு,அடுத்து வந்த தேர்தலில் மக்கள் தக்க படம் புகட்டினார்களே. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் முதல்வரானாரே. 77இல் ஆட்சிக்கு வந்தவர் தன் கடைசி மூச்சு வரை முதல்வராகவே வாழ்ந்தார்.

இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபடும் முகமாக தங்களைக் காட்டிக்கொள்ள நினைக்கும் கருணாநிதி,காங்கிரஸ் அன்று செய்ததென்ன? பாபு ஜெகஜீவன் ராம் பிரதமராவதைத் தடுக்கத் தானே நினைத்தனர். அவர் பிரதமராக எம்.ஜி.ஆர் தானே ஆதரவு தெரிவித்தார். தாழ்த்தப்பட்டவர் பிரதமராகக் கூடாது என்பதற்காகவே பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசமே கொடுக்காமல் பாராளுமன்றத்தைக் கலைத்தவர் அன்றைய காங்கிரஸ் ஆதரவு ஜனாதிபதி நீளம் சஞ்சீவ ரெட்டி.

சினிமாக்காரன் அரசாள கூடாது, சினிமா கவர்ச்சியை வைத்து மக்களை ஏமாற்றுகிறான் என்றெல்லாம் சொன்னார்களே? ஜாதிப் பெயரைச் சொல்லி மக்களை பிளவுபடுத்தும் அய்யோக்கியத்தனத்தைக் காட்டிலும் சினிமா கவர்ச்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்காக பணியாற்றிய எம்.ஜி.ஆர் தானே உத்தமர்? இவர் ஆட்சியில் தானே ஜாதி சங்கங்கள் அழைத்துப் பேசப்பட்டன? மரங்களை வெட்டி மக்களை ஏமாற்ற முயன்றவர்கள் எம்.ஜி.ஆரின் முன் எடுபடாமல் தானே போனார்கள்.

கலியுகக் கர்ணன் என்ற அடைமொழியைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். எம்.ஜி.ஆருக்குத்தானே அந்த பட்டம் கச்சிதமாகப் பொருந்தும்? ஒரு முறை ஒரு காவல் துறை அதிகாரிக்கு எம்.ஜி.ஆர் தோட்டத்திலிருந்து அழைப்பு வந்தது.அதிகாரி பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்." நீங்கள் இங்கே பணியிலிருப்பது தெரிந்தது. சென்ற முறை நீங்கள் மிகவும் விரும்பி சாப்பிட்ட கத்தரிக்காய் குழம்பு சமைக்கப்பட்டுள்ளது. வாத்தியார் உடனே உங்களை நினைவுகூர்ந்து அழைத்து வரச்சொன்னார். சாப்பிடுங்கள்" - என்று தோட்டத்தில் இருப்பவர்கள் தகவல் கூறி உணவளித்தார்கள். தன் அதிகாரிகளையும் மக்களையும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்பவர் அல்லவோ உண்மையான தலைவர்?

வெள்ளம் பாதித்த போது தயங்காமல் மழை நீரில் இறங்கி ஆறுதல் கூறி உதவிகளைச் செய்தவர் எங்கள் எம்.ஜி.ஆர். 'ஐயா நீங்க இவ்வளவு தூரம் வரணமா?' என்று அன்போடு மக்கள் சொன்னார்களே,அது தானே எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து.

2015 வரை தமிழகத்தில் நக்சலைட்டு தொல்லைகள் இருந்ததில்லை. இப்போது கூடங்குளம் உதயகுமார் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வருகின்றன,அதனால் 2015 வரை என்று வைத்துக் கொள்வோம். நக்சல் தொல்லை இல்லாமல் போனதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தானே? காவல் துறைக்கு முழு அதிகாரம் கொடுத்து நக்சல் தொல்லைகள் இல்லாதவாறு செய்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான்.

இவர் தமிழர் அல்ல என்றார்கள்.ஆனால் இவர் தமிழர்களுக்கு செய்ததில் கால் பங்கு கூட இவரை மலையாளி என்று விமர்சித்தவர்கள் செய்ததில்லை. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பேர்வழி என்று ஏமாற்றும் போலிகளுக்கிடையே உணர்வு பூர்வமாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் பிரச்சினையை தீர்க்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர், பிறகு அவர்களின் பாதை மாறவே அவர்களை ஆதரிப்பதை நிறுத்திக் கொண்டார்.அவர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் எடுத்தார்.

இவர் படங்கள் இப்போது வெளியானாலும் திரை அரங்குகளில் பெரும் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம் அவரின் முகராசியும் அதிர்ஷ்டமும் மட்டுமல்ல.சினிமாவிலும் சரி பொது வாழ்விலும் சரி அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை சரியாக புரிந்து வைத்ததே அவரின் அசாத்திய வெற்றிக்குக் காரணம். பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்தை போட்டுக் காட்டிய போது, எம்.ஜி.ஆர் 'இதற்கு இன்னொரு முடிவு(climax) வைத்திருப்பீர்களே?' என்று கேட்டதும் அசந்து போனார் பாரதிராஜா. ஏனென்றால் அவர் மற்றொரு முடிவு படமாக்கிய விஷயம் ஒருவருக்கும் தெரியாது.

இன்றும் பல கிராமங்களில் எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பிரச்சாரத்திற்கே செல்லாமல் ஒரு தலைவனால் வெற்றி பெற முடியுமென்றால் அது தானே உண்மையான மக்கள் செல்வாக்கு? ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவதூறாகப் பேசுவதையே திராவிடத்தின் கொள்கை என்று அரசியல் செய்தவர்கள் மத்தியில் 'தாய் மூகாம்பிகையின் உருவில் என் தாயைக் காண்கிறேன்' என்று சொல்லி இந்த போலி பகுத்தறிவுவாதிகளின் வாயை அடித்தாரே. தான் பதவியில் இருந்த காலம் வரை எந்த ஒரு சமூகத்தையும் இழிவாகப் பேசாமல் அரசியல் செய்தாரே, தமிழகத்தில் அது எவ்வளவு பெரிய சாதனை?

எம்.ஜி.ஆர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஜாதி அரசியல் தலைதூக்கி இருக்காது. தான் வாழ்ந்த கடைசி நொடி வரை மக்களைப் பற்றியே சிந்தித்த எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட 'நீங்க நல்லா இருக்கணம் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற' என்ற பாடல் எத்தனை உண்மையானது?

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" - எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி எழுதியது